ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2022

மனிதப் பிறவியின் பலன் - ஈஸ்வரபட்டர்

 

கார்மேகக் கண்ணன் அகிலத்தையும் தன் வாயில் காட்டியதாகவும்… பெண்களிடம் தான் லீலா விளையாட்டுகளை நிகழ்த்தியதாகவும்.. கிருஷ்ணாவதாரம் வியாசரால் எழுதப்பட்டுள்ளது.

அந்தத் தத்துவத்தில் பல உண்மைகள் உண்டு… கதை ரூபத்தில் நாம் அதை கேட்கின்றோம்… படிக்கின்றோம்…!

இம்மனிதக்கரு எண்ணத்தின் உணர்வு ஒவ்வொன்றையும் கிருஷ்ணனாகக் கண்டு… அக்கிருஷ்ணனின் பிம்பம் பெற்று… அப்பிம்பத்தின் தொடர் கொண்டு நிகழும் வழித் தொடர் ஒவ்வொன்றுமே
1.உயிர் ஆத்மா உயரும் பரமாத்மாவின் தொடர்பைக் குறிக்க
2.கீதையில் சூட்சும ரூபங்கள் பல உண்டு.

தன் உயிர் ஆத்மாவின் உண்மை ஜெனிப்பை நாம் உணர்ந்து நம்முள்ளுள்ள வீரிய சக்தியை இக்கர்ம காரியத்தில் மோதும் உணர்வுகளுக்கு ஞானத்தைக் கூட்டி தன் உயர் ஞானத்தின் உண்மை எது…? என்ற பகுத்தறியும் எண்ண வாதத்தால்… எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கக் கூடிய வீரத்தின் ஞானமுடன் ஒவ்வொரு ஆத்மாவும் செயல்பட்டதென்றால்…
1.அன்று ரிஷிகளினால் உணர்த்தப்பட்ட…
2.இன்று கதையாய் உருவம் தந்துள்ள வழி ஒவ்வொன்றையுமே
3.நம் உயிர் ஆத்மாவின் சித்தில் நாமும் பெற முடியும்.

இவ்வெண்ணத்தின் பகுத்தறியும் உயர் ஞானத்தைக் கொண்டு அறிவின் வளர்ச்சியைச் சாந்த குண உணர்வுடன் அறியக் கூடிய தொடர்புக்குச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சில தாவரங்கள் விதைக்கப்பட்டு அதனுடைய சத்து நிலை உள்ள காலம் வரை பலன் தந்து ஒரு மாதம்… மூன்று மாதங்கள்… இப்படித் தன் சத்தின் பலனைத் தந்துவிட்டு மக்கி விடுகின்றன.

ஆனால் சில மரங்கள்…
1.“பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தான் எடுத்த சத்தின் தொடரினால்”
2.அம்மரமே வைரம் பாயும் தன்மைக்கு வளர்ந்து…
3.மரமே மலையாகிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பூமியின் சுழற்சியில் வலுக் கொள்கின்றது…!

காற்றலையின் சுழற்சியில்தான் எல்லா அமிலங்களும் சுழல் கொள்கின்றன.

மரத்தின் வலுவான வளர்ச்சி முற்றலில் அவ் ஈர்ப்பின் பிடிப்பிற்கு வைரத்தை வளர்க்கவல்ல அமிலத்தைத் தன் ஈர்ப்பில் பெற்று அது வளருகின்றது.

சிறு விதையான மிளகாய் விதை இக்காற்றலையில் கலந்துள்ள கார உணர்வின் சத்தைத் தன் வளர்ப்பிற்கு வலுக் கூட்டித் தன் வளர்ப்பின் பலனாய்ப் பலவற்றைத் தருகின்றது.

எண்ணத்தின் உணர்வை….
1.சிறு விதை எடுத்த பலனைப் போல்… வளர்ச்சியைப் போல்… பலன் தன்மை பெறத்தக்க செயலும் உண்டு…
2.வைரத்தின் ஈர்ப்பாக… மலையாகும்… மரத்தின் தொடர்பைப் பெறும் செயலும் உண்டு…!
3.மனிதன் எடுக்கும் அறிவின் ஞானத்திற்கு…!