ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2022

குருவின் (வியாழன் கோளின்) மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் தனக்குள் மற்ற சத்துக்களை எடுத்து
1.ஒவ்வொன்றிலும் கருவுறும் சத்தாக
2.குருவாக முன்னின்று இருக்கின்றது.

சந்திரனோ மற்றவைகளை எடுத்துச் “சாந்தமான நிலையில்…” தனக்குள் உருவாக்கும் நிலையாக உருப்பெறுகின்றது. காரணம் ஒவ்வொரு குணங்களின் தன்மை அது அது கவரும் நிலைகள் கொண்டு தான் கோள்களின் இயக்கம்.

சந்திரனின் சுழற்சி வட்டத்தினை எடுத்துக் கொண்டால்… வரும் சக்திகளை அது சாந்தமான நிலைகள் கொண்டு மெதுவாக எடுத்துத் தனக்குள் மாற்றி அமைக்கின்றது.

1.இதற்கு மாறாக வியாழனோ படு வேகமாகச் சுழற்றி
2.மற்றவைகளைத் தனக்குள் வேகமாகக் கவர்ந்திடும் சக்தி கொண்டது
3.அதனால் அதனுடைய வளர்ச்சி வேகமும் அதிகரிக்கின்றது.
4.வெகு தொலைவிலிருந்து வரும் உணர்வினையும் தனக்குள் கவரும் ஆற்றல் பெற்றது
5.அதே சமயத்தில் அதனின் உமிழ்த்தும் உணர்வின் வேகமும் அதிகம்.

மற்ற கோள்களைக் காட்டிலும் உயர்வான இடங்களில் அது இருப்பதனால் தனக்கு மேல் இருக்கும் கேது ராகு கோளின் சக்தியையும் கவரும் திறன் கொண்டது.

ராகு இருள் சூழ்ந்தது… கேதுவோ விஷம் கொண்டது. அவைகளையும் வியாழன் தனது சுழற்சியின் வேகத்தில் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்திற்குகந்ததாக மாற்றுகிறது.

அதாவது…
1.சூரியன் எவ்வாறு தனது சுழற்சியின் வேகத்தில் மற்ற நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து
2.கோள்களுக்கும் ஜீவனூட்டித் தனது நிலைகளில் அது ஒளியாக மாற்றுகின்றதோ
3.அதைப் போன்று வியாழன் கோள் மற்ற சத்துக்களைத் தனக்குள் கவர்ந்து
4.விஷம் மற்றவைகளையும் கலந்து அதை ஒரு குருவாக்கி
5.மற்ற கோள்களுக்கும் தனது இணையாக இணைத்துக் கொண்டு வருகின்றது.

கோள்கள் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தியை நமது பூமி கவர்ந்து உயிரணுக்களை ஜீவன் பெறச் செய்வதும்… உயிரணுக்களை வளர்க்கச் செய்வதும்… தாவர இனங்களைத் தனக்குள் வளர்ப்பதும்… தாவர இனத்தின் நிலைகள் கொண்டு உயிரினங்களுக்கு ஊட்டச்சக்தி கொடுப்பதுமாக மாற்றி அமைக்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைப் போன்று தான் நாம் மற்றவருடைய எண்ணங்களை எந்த அளவிற்குக் கவர்கின்றோமோ அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் “நம் உயிர் குருவாக நின்று…” இந்த உணர்வின் சத்தைப் பெருக்கி உடலாக மாற்றுகின்றது

1.சூரியன் இந்த பிரபஞ்சத்திற்கே குருவாக இருப்பினும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அணுக்களுக்கு வியாழன் கோளே குருவாக இருக்கின்றது.

இதைப் போல…
1.அனைத்து சக்திகளையும் எடுத்த இந்த மனித உடலுக்குள்
2.நாம் எண்ணும் எண்ணங்களுக்கு இந்த மனித உடல் உருவான நிலையே குருவாகின்றது.

ஏனென்றால்…
1.மற்ற சத்துக்களை எடுத்து வியாழன் கோள் தனது நிலைகளில் இந்தப் பிரபஞ்சத்தில் குரு தன்மையை எப்படி அடைந்ததோ
2.அதைப் போல மனித உடலாக உருவாக்கப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்களுக்கு இது குருவாகின்றது.
3.அதே சமயத்தில் உடலுக்குள் உயிர் குருவாகின்றது… நமக்குள் சூரியனாக அது மிளிரும் தன்மையை அடைகின்றது.

அன்று ஞானிகளால் சாஸ்திர விதிகளை வகுக்கப்பட்ட இத்தகைய உண்மைகளை எல்லாம் எண்ணத்தால் எண்ணி நமக்குள் அதைப் பொங்கச் செய்ய வேண்டும்.

சூரியன் எவ்வாறு தான் கவர்ந்து கொண்ட அணுக்களில் இருக்கும் நஞ்சினைப் பிளந்துவிட்டு நல்ல உணர்வினை எடுத்து ஒளிச் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.மகரிஷிகள் தமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தகைய நிலைகளைக் கவர்ந்து கொண்டாலும்
2.அதில் வரும் நஞ்சினைத் தனக்குள் அணுகாதபடி தன் உணர்வின் எண்ணங்களை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சப்தரிஷி மண்டலத்தில் வெளி வரும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் ஒளிச் சுடராகப் பொங்கி இங்கே பூமிக்குள் பரவச் செய்கிறது.

நமது வாழ்க்கையில் குடும்பத்திற்குள் வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ ஏற்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து நமக்குள் அதை மாற்றி அமைக்க வேண்டும்.

தாவர இனங்களில் விளைந்ததை நாம் வேக வைத்து எப்படிச் சுவைமிக்கதாக உணவாகப் படைக்கின்றோமோ அது போல்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நமக்குள் வரும் அனைத்தையும் ஒளியாகப் படைக்கும் சக்தி பெற வேண்டும்.