ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2022

மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து அம்பாகப் பாய்ச்சிப் பழக வேண்டும்

 

உணர்வுகளின் இயக்கம் வெப்பம் காந்தம் மணம் இந்த மூன்றும் உடலில் சேர்த்து மூன்று அறிவாகக் கண்ணில்லாத ஒரு புழுவாக இயக்கினாலும் “தான் பார்க்க வேண்டும்…” என்ற ஏக்கத்தின் உணர்வு கொண்டு கருவிழிகள் தோன்றுகின்றது.

தனக்குள் செயல்படும் ஒவ்வொன்றையும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் நிலைகளாக வரும் போது தான் இருளுக்குள் பிறக்கின்றான் கண்ணன்.

1.தான் சுவாசித்த அந்த உணர்வு வாசுதேவனாக இயக்கி…
2.தேவகி… உணவை உட்கொள்ள வேண்டும் என்று தன் தேவைக்காக வேண்டி எடுத்துக் கொண்ட அந்தச் சக்தியின் தன்மை கொண்டு
3.தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை அதனால் பிறக்கப்பட்ட இந்த உணர்வு தான் கண்ணன்.
4.வாசுதேவன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறக்கிறான் கண்ணன்

தீயதை நீக்கி நல்லதைச் செய்யும் நிலைகள் கொண்டு நான்காவது நிலையாகக் கண்ணன் உதிக்கிறான் என்ற காவியத்தை அங்கே படைத்தார்கள்.

இது தான் கடவுள் என்று மந்திரமும் மாயமும் போட்டு… அவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தால் எல்லாம் கொடுப்பான்…! என்று தன்னுடைய பேராசையையும் பெரு நிலைகளையும் வளர்த்துக் கொள்வது தான் என்ற நிலையில் ஞானி சொன்னதை மாற்றிக் காட்டுகின்றனர்.

1.அந்த மெய் ஞானி வியாசன் உண்மையை உணர்த்தினான்
2.இவர்கள் மந்திரத்தை உருவாக்கி விட்டார்கள்.
3.ஆனால் பதிவு செய்த மந்திரத்தை எடுத்துக் கொண்டால் இன்னொரு ஆன்மா தான் நமக்குள் வரும்.

அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்றும் அர்ச்சனை ஆராதனை மந்திரங்களை ஒலிக்கச் செய்து… “உனக்காக எல்லாமே படைக்கின்றேன். ஆகவே நீ எனக்கு என்ன செய்கின்றாய் என்று கேள்வி...!”

இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உணர்வின் தன்மைகளை நாம் பக்குவப்படுத்தும் நிலை இழந்து இறந்தபின் மந்திரக்காரன் கையிலே போய் நாம் சிக்குகின்றோம். அதற்குத் தான் இது பயன்படும்.

உதாரணமாக வேப்பமரம் தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்கின்றது அதே மாதிரி
1.எந்த குணத்தின் தன்மையை நாம் முன்னணியில் வைக்கின்றோமோ அந்தச் செயலுக்குகந்த அதே மணத்தின் தன்மை இருக்கின்றது.
2.அதே உணர்வு (மணம்) கொண்ட இன்னொரு மனிதன் இருப்பான்.
3.அவனுக்குள் ஈர்க்கப்பட்டு அங்கே போய் இணை சேர்ந்து அது வளரும் நிலை பெறுகின்றது.

வேதனையை உருவாக்கும் எண்ணம் கொண்டு அங்கே புகுந்து வேதனையை அதிகமாக அங்கே உருவாக்கச் செய்து விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து அவனையும் அழித்து… அழித்துக் கொள்ளும் உணர்வு கொண்டு உயிராத்மா வெளியே வரப்படும் பொழுது மனிதனுடைய நிலைகளையே எட்ட முடியாத நிலை ஆகிவிடுகின்றது.

விஷம் அதிகமாகும்போது எந்த விஷத்தையும் தனக்குள் சமாளிக்கும் உடலின் அமைப்பு கொண்ட விஷமான மிருகங்களுக்குள் ஈர்க்கப்பட்டு “மனிதனை மிருகமாகப் படைத்து விடுகின்றது…” இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும்.

கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய உண்மைகளைப் பார்ப்போம்.

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்.

எதிரி என்ற நிலையில் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்..? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகக் கீதையிலே எழுதுகின்றனர்.

1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உன் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து, அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.
1.இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது
2.அதாவது மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாயச் செய்வது.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. எதிரிகளிடம் உண்மையின் நிலைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று…
1.உணர்வின் இயக்க நிலைகளை அன்று ஞானியர்கள்
2.கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.