ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2022

அழிவுப் பாதையிலிருந்து மீண்டு “மகரிஷிகள் வழியில்” செல்ல வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் உணர்வின் எண்ணம்… தன் ஞானத்தின் உயர் ஞானத்தால் படைப்பின் பல பொருள்களை எல்லாம் இவ்வுடல் தேவைக்குச் செயலாக்கித் தன் சரீர ஜீவிதத்தை இன்று பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இவ்ஈர்ப்புப் பிடிப்பில் பூமியின் சுழற்சியுடன் சிக்குண்ட இஜ்ஜீவ உடலின் “உயிரையும்… உயிரணுக்களையும்…” இந்த உடலில் உள்ள பொழுதே இது வரை யாம் சொன்ன வழித் தொடர்பினால் உயர் காந்த மின் அலைகளை எடுத்துச் சேமிக்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

1.இஜ்ஜீவ காந்த சரீரம் இப்பூமிப் பிடிப்பின் சுவாசத்தை எடுத்து
2.சாதாரண வாழ்க்கையில் வளரும் நிலையிலிருந்து
3.உயர் தன்மைக்கு வீரியத்தைச் செலுத்திடல் வேண்டும்.
4.இப்படி மேல் நோக்கி ஈர்க்கப்படும் தொடர் சுழற்சியினால் இக்காற்று மண்டலப் பிடிப்பில் சிக்காமல் தப்ப முடியும்.

(உடலை விட்டுச் சாதாரண நிலையில் பிரியக்கூடிய உயிராத்மா இந்தப் புவியின் காற்று மண்டலப் பிடிப்பில் தான் சுற்ற முடியும்)

ஆக… வீரியத் தன்மை கொண்ட இவ்வுயிராத்மா மேல் நோக்கிப் பெற்ற உயிர் காந்த மின் அலையின் வளர்ச்சியினால்….
1.உயிருடன் உயிர் அணுக்களும் சேர்ந்த ஈர்ப்பின் உந்தலை
2.எண்ணத்தின் உந்தல் கொண்டு ஒளி கொண்ட ரிஷியின் ஈர்ப்பில் செலுத்தும் நிலையால்
3.ஒளியின் ஒளியாகப் பிரகாச நிலை அடைந்து
4.இந்த மனித உடலிலிருந்தே மனிதன் “பறக்கும் நிலை” பெற்றிருக்கலாம்.

ஆனால் உணர்வின் எண்ணம் இந்த உடல் வாழ்க்கையில் பூமிப் பிடிப்பில் தொடர் நிலையுடன் ஓடும் தன்மையால் சரீரம் அழுகிய நிலையில் உடலின் ஆத்மா பிரிந்ததென்றால்… உடலின் உயிரணுக்களும் வலுவிழந்த தன்மையால் பெற்ற உயிர் சரீர நிலையைக் காட்டிலும்… மீண்டும் பிறப்பு நிலையில் மனிதப் பிறப்புக்கே வந்தாலும் ஞானமும் அங்க அவயங்களின் தன்மையும் “குறுகிய நிலை தான்” பெற முடியும்.

விவசாயத்தில் இன்றெப்படி அதற்குகந்த வீரிய இரசாயண உரங்களைச் செலுத்தி மகசூலில் அதிக நிலையும் காய்கறிகளின் தன்மையை வீரியப்படுத்தி விவசாயம் வளர்ந்துள்ளது. அதைப் போன்று….
1.இச் சரீர உடலின் உயிராத்மாவிற்கு வீரியத் தன்மை தரும்
2.உயர் ஞானத்தின் செயலை மனிதன் செயலுக்குக் கொண்டு வராமல்
3.உடலின் ஆரோக்கியத்திற்கும்… உணவின் சுவைக்கும்தான்… தன் ஞானத்தைச் செலுத்தி விட்டான்.

உயிருக்கும் உயிரணுவிற்கும் தரப்படும் வீரியத் தன்மையில் உணர்வின் எண்ணத்தில் “பிற நிலையின் ஈர்ப்பு நிலையற்று… தன் செயலை வீரியப்படுத்தும் நிலையினால் தான்…” உயர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

உணர்வுகள் மாற்றப்பட்டு எண்ணத்தின் செயல் பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிற்குச் செலுத்தும் பொழுது மகான்களினால் அன்று வெளிப்படுத்திய சில உண்மை நிலைகளில் மருத்துவ நிலையும் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் எடுத்து விட்டதைப் போன்று
1.அழிவு நிலைக்குச் சென்றுவிடும் பக்குவத்தின் பலனை அறிந்து
2.அதிலிருந்து மீண்டிட மகரிஷிகள் காட்டும் வழியில் செயல்படல் வேண்டும்.