ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2020

நுண்ணிய வேலைகளைச் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது...?

எதிர்நிலையான நட்சத்திரங்களின் மோதலினால் மின்னல்கள் உருவாகின்றது. மின்னல் பாயும் பொழுது மரத்தின் மேல் பட்டால் மரத்திற்குள் ஊடுருவி அது தன் இனத்தை எடுத்துக் கருகி விடுகின்றது.
 
மின்னல்கள் நிலத்தில் பட்டால் பூமியின் நடு மையமான நிலைகள் சென்றடைகின்றது. இப்படி அதீதமான நிலைகள் உள் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையமானால் “எந்தப் பகுதியில் ஆகின்றதோ... அங்கு கொதிகலனாக மாறி... பாறைகள் எல்லாம் இளகுகின்றது...”
 
உள்ளே இருக்கும் பாறைகள் இளகும் போது பூமி வெடிக்கின்றது. மேலிருக்கும் பாறைகள் கீழே இறங்குகின்றது. “நில நடுக்கம்” என்று அடிபாகத்திற்குள் போகின்றது. அதற்குள் அடக்கி விடுகின்றது.
 
அதே சமயத்தில் மின்னல்கள் கடலில் பாய்ந்தால் அந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலுக்குள் படியப்படும்போது மணலாக மாறுகின்றது.
 
கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜன்... அந்த உப்பின் சத்து மின்னலின் வீரியத்தைத் தணிக்கின்றது.
 
கடலிலே பாயும் இத்தகைய நிலைகள் எல்லாம் மணலாக மாறி அந்த மின் அணுக்களின் துகள்களாக வரப்படும்போது கடலில் வரக்கூடிய மணல் அத்தகைய ஆற்றல்கள் பெறுகிறது.
 
இதைத்தான் யுரேனியம் என்று பிரித்தெடுக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாகின்றதோ அதற்குத் தக்க கனிமங்களாக உருவாகிறது.
 
இந்த மணலின் தன்மையை எடுத்துப் பிரித்து அதை வைத்துத் தான் அணுவைப் பிளக்கின்றனர் விஞ்ஞானிகள்.
1.இந்த அணுவின் தன்மை மற்றொன்றை அடக்கும் போது
2.வரும் அணுவின் தன்மையைப் பிளந்து உணர்வை எடுக்கின்றான்.
3.இதில் சிதைந்த உணர்வின் தன்மையைத் தான் இன்றைக்கு கம்ப்யூட்டரிலும் ஃபோனிலும் (SMART PHONE) உபயோகப்படுத்துகின்றனர்.
 
அதாவது அந்த உணர்வைப் பாய்ச்சி... ஒளி அதிர்வுகளைக் கண்டு... உணர்வின் செயலாக்கங்களுக்கு (COMMAND)
1.அந்த நுண்ணிய “கதிரியக்கப் பொறிகளை” மாற்றும் போதுதான் கம்ப்யூட்டர் என்னும் நிலைகள் வருகின்றது
2.இப்படி மின் அணுவின் கதிரியக்கங்களுடைய நிலைகள் ஒரு காந்தப் புலனறிவில் கவரப்பட்டு
3.கம்ப்யூட்டரில் - ஒரு காந்தத்தை கவரும் ஒரு உணர்வின் தன்மையைப் பதிவு செய்து... அந்த உணர்வின் அறிவாக ஆன பின்
4.எதிர் ஒலியின் தன்மை மின் அணு போன்ற இந்த உணர்வின் தன்மை தோன்றும்.
5.அந்த உணர்வின் தன்மை எதுவாகின்றதோ மோதும் ஒவ்வொரு உணர்வுக்கொப்ப அதனின் உருவத்தையும் காட்ட முடியும்.
 
ஆக... ஒவ்வொருவரும் அவரவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகின்றது...? என்ற நிலையும்... ஒரு மனிதன் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்றால் அவர்கள் வம்ச வழியில் வந்தவனின் ரூபங்கள் எப்படி இருக்கின்றது...? என்றும் காணலாம்.
 
ஒரு உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அந்தக் கம்ப்யூட்டர் எதிர் நிலைகளை (0 1) எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது.
 
“ஆயிரம் மடங்கு” அதைக் கூட்டுகின்றான். மீண்டும் அந்த உணர்வின் எதிர் ஒலிகள் வரப்படும்போது... வாழ்ந்த உணர்வை... பூமியில் பதிந்ததை எடுத்து... மனித ரூபத்தைக் கொடுக்கின்றது.
 
இன்று விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.
 
அதைப் போலத் தான் அன்று வாழ்ந்த மெய் ஞானியின் உணர்வை நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாக்கப்படும் போது
2.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து (நுகரப்பட்டு)
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் ஒளியாக முடியும்.
 
சில பேர் என்ன சொல்வார்கள்...? விஞ்ஞஞான அறிவு எங்கேயோ போகின்றது... சாமி (ஞானகுரு) எங்கேயோ மூலையில் இருக்கிறார் என்று...!
 
ஏனென்றால் விஞ்ஞானத்தின் அறிவு எப்படி இருக்கின்றது...? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது...? என்று குருநாதர் எல்லாவற்றையும் காட்டினார்.
 
1.இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கத்தை எப்படி...? என்று
2.கற்றுணர்ந்த பின் தான் அதை உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.
காலம் வரும் போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப... காலத்தின் மாற்றத்திற்கொப்ப இதை நுகரும் போது... அந்தந்த உணர்ச்சிகள் அது கவரப்பட்டு உங்களுக்குள் பதிவு செய்யும் நிலையாக இது வரும்.
 
1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு விதமாக இருக்கும்.
2.அந்த உணர்வின் வளர்ச்சிக்கு நீங்கள் வரப்படும்போது
3.இந்த இயற்கையின் தன்மை... உங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.
 
இந்த உடலிலே எத்தனை காலம் நாம் வாழப் போகின்றோம்...? நம் உடல் சதமற்றது...!
1.ஆனால் என்றைக்கும் நிலையானது உயிர்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக்கப்பட வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைய வேண்டும். பிறவியில்லா நிலை அடையச் செய்யும் அந்த அருள் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிப்பதற்குத் தான் இது போன்ற உபதேசங்கள்.