ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 11, 2020

விரதம்

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும். காலை ஐந்து ஆறு மணிக்குள் இந்த உணர்வினைப் பெறலாம்.
 
1.தியான வழியில் அன்பர்களில் சிலரை எடுத்துக் கொண்டால் இந்தக் காலங்களில் தான் (அதிகாலை) ஆன்மா பிரியும்.
2.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் நேரடியாகச் செல்லும் நிலை வரும்.
 
அங்கே சென்றால் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது. சூரிய ஒளிக்கதிர் உடல் பெறும் உணர்வை அது கவர்ந்து எடுத்துச் செல்கின்றது. உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
 
1.ஆகவே நாம் பெறுவது அழியா ஒளிச் சரீரமாக இருக்க வேண்டும்.
2.அழியும் இந்த உடல் நமக்கு தேவையில்லை.
3.உயிருடன் ஒன்றி வேகா நிலை அடைதல் வேண்டும்.
 
அகண்ட அண்டத்தில் உள்ள எந்த நஞ்சும் நம்மை வென்றிடக் கூடாது. அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிட வேண்டும்.
 
உதாரணமாக ஒரு பாம்பினம் நஞ்சினைப் பிற உயிரினங்களில் பாய்ச்சி அதை உட்கொண்டு தனக்குள் மகிழ்ச்சி ஆகின்றது. அதில் உறைந்த நிலைகள் தான் இங்கே நாகரத்தினமாக மாறுகின்றது. பாம்பிற்குள் உறையும் கல்லாக இருக்கின்றது. இது ஜீவனற்றது.
 
ஆனால் நமக்குள் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் ஜீவ அணுவாக இருக்க வேண்டும். ஜீவனுள்ளதாக கணவனும் மனைவியும் ஈருயிரும் ஒன்றாகி என்றும் ஒளியின் சுடராக மாறுதல் வேண்டும்.
 
இதைத்தான் ஏகாந்த நிலை “ஏகாதசி…!” என்று சொல்வார்கள். அந்த ஏகாந்த நிலைகள் நாம் பெற வேண்டும்.
 
ஆனால் ஏகாதசி அன்று “ஆண்டவனுக்கு விரதம் இருந்து சாப்பிட்டால் ஏகாந்த நிலை பெறலாம்…” என்று இப்படி நம்மை அறிவிலிகளாக மாற்றிவிட்டனர். 
 
ஏகாந்த நிலைகளில் நாம் எப்படி இருக்க வேண்டும்....? விரதம் என்பது எது…?
 
யாருடன் எல்லாம் பகைமை கொண்டோமோ அவர்களின் பகைமையை மறந்துவிட்டு
1.நான் பார்த்த குடும்பங்களில் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர் குடும்பங்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ வேண்டும்
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவர்கள் குடும்பங்களில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும்
6.எங்களைப் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று
7.இந்த விரதத்தைத் தான் எடுக்கச் சொன்னார்கள்.
 
 ஏகாதசி அன்று விரதம் இருப்போர்கள் சமையல் செய்து படைப்பார்கள். அன்றைய தினம் சங்கடம் எல்லாவற்றையும் கேட்பார்கள். கேட்டுவிட்டு கடைசியில் இந்த உணர்வின் எண்ணங்கள் கொண்டு சாப்பிட்டால் என்ன நடக்கிறது…?
 
பசியாக இருந்து சாப்பிட்டாலும் அன்றைக்கு ஜீரணம் சரியாக இருக்காது. அரிசி சாதம் சாப்பிட்டால் கோதுமை சாப்பிடுகிறோம் என்றும் கோதுமை சாப்பிட்டால் அரிசி சாதம் சாப்பிடுகின்றோம் இது ஒரு விரதம். அல்லது வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிடுகிறேன் என்பார்கள்.
 
 விரதம் என்று இப்ப்டிக் குறைத்துக் சாப்பிட்டால் என்ன ஆகின்றது…?
 
இவர்கள் உடலிலே வேதனை என்ற உணர்வான பின் குடலில் இருக்கும் ஜீரணிக்கும் அணுக்கள் அப்படியே படுத்துவிடும்…! ஏனென்றால் திடீரென்று உணவைப் (நேரம் கழித்து) போட்டவுடன் ஜீரணிக்கும் சக்தி இல்லை.
 
இரவு ஆனதும் பார்த்தால் நெஞ்சைக் கரிக்கின்றது… மேல் வலிக்கின்றது... என்று இதைத்தான் நாம் பார்க்கின்றோம்.
 
நம் உடலில் இருக்கும் உறுப்புகள் அது சீராக இயக்க வேண்டுமென்றால் ஏகாந்த நிலைகள் கொண்டு எப்படி இருக்க வேண்டும்…?
1.அனைவரும் நலம் பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் மலரைப் போல் மணம் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வை எப்பொழுது சேர்க்கின்றனரோ
4.அப்பொழுது தான் பகைமை இல்லாது “ஏகாந்த நிலை” அடைகின்றோம்.
 
நமக்குள் வரும் நோயைத் தடுக்கும் நிலையும் உடல் ஆரோக்கியமும் வருகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும்… அருள் மகரிஷிகளின் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எண்ணினால் ஏகாந்த நிலை. இது தான் உண்மையான ஏகாதசி விரதம்…!