ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2020

சந்திரனில் நீர் நிலைகள் கூடக் காரணம் என்ன…?

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே கடலில் உள்ள நீர்கள் தான். நம் பூமிக்கு இரண்டு பக்கமும் உள்ள வட துருவ தென் துருவக் கடல்களின் நிலையினாலும் இப்பூமி முழுவதற்குமே அங்காங்குள்ள நீர் நிலைகளும் ஆறு குளங்களும் இப்பூமியில் பெய்திடும் மழையின் நிலையினாலும் தான் இப்பூமி முழுவதற்குமே நீர் நிலை பெறும் சக்தி வந்தது.
 
1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால்…
2.தாவரங்கள் மட்டும் அல்ல இப்பூமியில் வளர்ந்திடும் எந்தக் கனி வளங்களும் எந்த உயிரணுவும்
3.இன்றைய நிலை கொண்ட வளர்ச்சிக்கு வந்திருக்க முடியாது.
 
எந்த அமிலமும் நீருடன் தன் சக்தியைச் சேமிக்கும் சக்தி கொண்ட பூமி தான் இது. நம் பூமியின் கடல்களில் உள்ள நீர் பகலில் குறைந்ததும் இரவில் அதிகப்பட்டும் உள்ளது.
 
அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் மற்ற நாட்களைவிட இந்நீர் அதிகமாகப் பொங்கி வரக் காண்கின்றோம்.
 
பகலில் சூரியனின் நேர் ஒளி படும் காரணத்தால் அக்கடலின் நீரில் சூரியனின் ஒளி பட்டவுடன் அந்நீரிலிருந்து ஆவியான அமிலங்கள் காற்றுடன் கலந்து விடுகிறது.
 
ஆனால் இப்பூமி சுழலும் நிலை கொண்டு இரவில் சூரியனின் ஒளிக்கதிர் அந்த நீர்நிலையில் படாமல் அக்கடல் நிலையுள்ள இடமும் இச்சுழலும் தன்மையில் இப்பூமியின் அசைவு கொண்டு வடதுருவத்தில் மோதப்பட்டு பகலில் ஆவியான இவ்வமிலமும் குளிர்ச்சி கொண்டு வட துருவ பூமியில் படிவமாய் குளிர்ந்த நிலையில் பனிக்கட்டியாய் உறைந்து விடுகின்றது.
 
இப்பூமியின் வட துருவத்திலும் தென் துருவத்திலும் பாறை போல் உறைந்து குளிர்ச்சியான உப்புக் கலந்த அமில சக்தியைக் கொண்ட நீராய் உறைந்துள்ளது.
 
சூரியனின் ஒளி இரவில் இல்லாததினாலும் அவ்வுஷ்ண அலைகள் இக்கடலில் தாக்காததினாலும் பகலில் ஈர்த்து ஆவியான நீர்களே இரவில் அவ்வுறைந்த நிலைகொண்ட பகுதியில் இக்காற்றலைகள் மோதி நீராய் வடியப் பெற்று இரவில் கடல்களில் நீர் நிலைகளின் பெருக்கத்தைக் காண்கின்றோம்.
 
வட துருவம் தென் துருவம் இரண்டு பக்கத்திலுமே இந்நிலை கொண்ட சக்திதான் உள்ளது.
 
அமாவாசையன்றும் பௌர்ணமியன்றும் ஏற்படும் இவ்வணுக்களின் மாற்றத்தினால் இக்காற்று மண்டலத்தின் சக்தியில்
1.சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும் குறைந்த அம்மாவாசையின் அணுசக்தியும்
2.பௌர்ணமியில் கிடைத்திடும் அதிக அணுசக்தியும்
3.இவ்விரண்டு பக்கத்திலும் உறைந்துள்ள நீரின் அமில சக்தி மாற்றம் கொள்ளும் நிலையில் இக்கடல் நீர் பொங்குகின்றது.
 
பூமிக்கு ஜீவனாகப் பொக்கிஷமாய் அமைந்துள்ள நீர்நிலைகள் வட துருவமாயும் தென் துருவமாயும் இப்பூமி சுழல்வதற்கே சக்தி கொடுத்து நிறைந்திருக்கா விட்டால் நம் பூமிக்கு இம்மழையும் மற்ற நீர் நிலைகள் எவையுமே கிடைத்திருக்காது.
 
ஜீவனாக நம் பூமிக்கு இருக்கும் இச்சக்தி ஒவ்வொரு மண்டலத்திலும் மாறு கொள்கின்றது. சந்திரனில் நம் பூமியில் பெய்யும் மழையும் மற்ற நீர் நிலைகளும் இங்கு தேங்கியுள்ளதைப் போல் அங்கு மாறு கொண்ட நிலையில் உள்ளது.
 
இதுவே இப்பூமியின் கலி மாற்றத்தினால்… நம் பூமியின் சக்தியைப் போல்
1.நம் பூமிக்கு அருகாமையில் பூமியுடன் அதிகத் தொடர்பு கொண்ட சந்திர மண்டலம் இருப்பதினால்
2.இப்பூமியின் சக்தியைப்போல் சக்தியை வளர்க்கப் போகின்றது.
 
நம் பூமியைக் காட்டிலும் சுழலும் வேகம் குறைவு. ஆனால் மாற்றத்தில் சந்திரனின் சக்தி கூடி “துரித வேகம்” அதிகப்படப் போகின்றது. துரித சக்தியின் வளர்ச்சியினால் ஈர்ப்பு சக்தியின் நிலையும் கூடப் போகிறது.
 
இன்று செழித்து வளரும் நிலையில்லாமல் காற்றும் மழையும் குறைந்துள்ள நிலையில் மழையென்றால்
 
நம் பூமியில் மழை பெய்வது போல்…
1.பூமி ஈர்த்து ஆங்காங்கு வெளிப்படுத்தும் பருவ மழைகளும்
2.இக்கடலில் புயலாய் ஏற்பட்டு உருக்கொண்டு வீசிடும் காற்றிலிருந்து இங்கு பெய்யும் மழையின் நிலையும்
3.இரவு பகல் என்ற மாற்றம் கொண்ட நிலையும் சந்திரனில் இல்லாமல் உள்ள இன்றைய நிலையே
4.இக்கலியின் மாற்றத்தினால் இப்பூமியின் சக்தியின் நிலையே சந்திரனின் சக்தி நிலையுடன் செயல் கொள்ளப் போகின்றது…!