ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2020

உயிரே கடவுள் என்றும்… வெப்பம் தான் கடவுள்…! என்றும் ஏன் சொல்கிறோம்…?

இந்தக் காற்று மண்டலத்தில் சூரியனோ அதனுடைய கதிரியக்க அலைகளைப் பரப்பிக் கொண்டே உள்ளது.
 
இருந்தாலும்… அதன் ஒளி அலைகள் ஒரு செடியின் மேலோ ஒரு மரத்தின் மேலோ மனிதன் மேலோ மற்ற ஜீவணுக்கள் மேலோ படும் பொழுதுதான் அதனுடைய இயக்கத் தொடரே வருகின்றது.
 
செடியானாலும் அந்த சூரியனின் அந்த காந்த புலனறிவு தாக்கி உருவாக்கினால்தான் அந்த வெப்பம் உருவாகும். அந்தச் செடியும் வளர்கின்றது… புழுவும் வளர்கின்றது… மனிதனும் வளர்கின்றான்…!
 
1.அந்த வெப்பம் இல்லையென்றால்… ஒரு ஐஸ் பெட்டியில் போட்ட மாதிரி 
2.எல்லா அணுக்களும் செத்துப் போகும்… மனிதனே வாழ முடியாது…!
3.ஆகவே இவை அனைத்திற்கும் இந்தச் சூரியனே காரணமாக இருந்து இயக்குகின்றது.
 
சூரியனின் வெப்பத்தால் ஓங்கி வளர்க்கும் இந்த உணர்வுகளை… பூமி தனக்குள் நடு மையமாக அந்த வெப்பத்தை அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றது.
 
மார்கழி மாதமோ… அல்லது அதிகமான மழைகள் பெய்யும் காலத்திலோ மேற்பரப்பு குளிர்ந்து விடுகின்றது. இருப்பினும் பூமியின் அடிப்பாகத்தை தோண்டினால் வெப்ப நிலையே வருகின்றது.
 
1.ஆகவே சேமித்து வைத்த இந்த வெப்ப அலைகள்
2.சூரியனின் வெப்பத் தன்மை தணியும் போது
3.மனிதனுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ மற்ற தாவர இனங்களுக்கோ அது இயக்க
4.இது உதவுகின்றது நமது பூமி வாங்கி வைத்த வெப்பங்கள்.
5.அந்த வெப்ப நிலை இல்லையென்றால் எதுவுமே வளராது… இயங்காது… வாழாது… ஜீவிக்காது…!
 
கடலுக்குள் மீன் வாழ்கின்றது என்றால் நீருக்குள் தான் அது இருக்கின்றது. நீருக்குள் இருக்கும் காந்தப் புலனறிவு இந்த மீனுக்குள் உறைந்த அந்த காந்தப் புலனறிவுடன் உராயப்படும்போது மின் ஆற்றல் உற்பத்தியாகின்றது… “வெப்பமாகின்றது…”
 
இந்தக் காற்று மண்டலத்தில் எப்படிப் பல நிலைகள் உருவாகின்றதோ… நீர் குளர்ந்திருந்தாலும் நீருக்குள் வாழும் மீன் அது அதற்குள் இருக்கும் காந்தப் புலன்கள் கொண்டு வெப்பத்தை உருவாக்குகின்றது.
 
 நாம் மின்சாரத்தை உருவாக்குவது போன்று கடலில் மின்சார மீன் என்றும் உண்டு. ஓடும் வேகத்தில் பளீர்…பளீர்…! என்று மின்னும்.
 
தரைகளிலும் வாழும் வண்டு இனங்களில் மின்னெட்டாம் பூச்சி என்று உண்டு. அந்த மின் மினிப் பூச்சிகள் தான் நுகரும் தன்மை கொண்டு வெளிச்சத்தை உமிழும்.
 
இரவிலே பார்த்தோம் என்றால் பளிச்… பளிச்… என்று மின்னிக் கொண்டிருக்கும்.
1.அதாவது தனக்குள் ஒளியைச் சேமித்து வைத்து
2.இருளாகும் போது அது “ஒளிரும் தன்மையாக…” ஒளிபரப்பும் தன்மைகள் இந்த உயிரினங்களுக்கு உண்டு.

இவையெல்லாம் இயற்கையின் செயல்கள்…!