ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2020

என்ன கிரகமோ… என்ன சனியனோ…! நம்மைப் பிடித்து ஆட்டுகிறது என்று பேச்சு வழக்கில் சொல்வதன் இயற்கை நிலை என்ன…?

1.பால்வெளி மண்டலத்தில் ஓடிக்கொண்டே உள்ள மண்டலங்களின்
2.ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால்
3.ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அந்த ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.
 
அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன. ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கு இல்லை. சூரியனை மையப்படுத்தி சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனி தன்மை உண்டு.
 
நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும் சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம் கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.
 
நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.
 
நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர்நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…? வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும் சூரியனின் சுழலும் வேகத்திற்கும் இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.
 
வியாழனின் நிலை இல்லாவிட்டால் “நம் பூமிக்கு நீரில்லை…” இதே போல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்த நிலையில் பாய்கின்றது…?
 
நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும் வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.
 
பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கின்றோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி “நம் பூமிக்குச் சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…”
 
உம் சப்தமே வெளி வராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.
 
1.செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும்
2.சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்தன்மையும்
3.கலவை பெறும் இடத்திலிருந்து தான் “சப்த ஒலி” பிறக்கின்றது.
 
இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலை இல்லாவிட்டால் நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை.
 
பல சக்தியை நம் பூமி ஈர்த்து நம் பூமியின் சக்தியை சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.
 
நடக்க இருக்கும் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் நீர் நிலை சப்த ஒலியின் நிலையும் ஏற்படப் போகிறது.
 
அந்த வளர்ச்சி நிலை ஏற்பட்டு அதற்குப் பின் பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகுதான் அதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உருப்பெற்று ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்.
 
1980ல் நடந்த அந்தக் கிரகண கால நிலைக்குப் பிறகு நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் ஆகிக் கொண்டுள்ளது.
 
இப்படிக் கிரகணம் பிடிக்கின்றது ஒவ்வொரு கோளும் சூரியனை…!

இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்ட மண்டலத்தை எந்தக் கிரகம் தாண்டிச் செல்கின்றதோ அந்த மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. (நாம் சந்திப்போர் குணங்களுக்குத்தக்க நம்மை நன்மை தீமை என்று எப்படிப் பாதிக்கிறதோ அது போல்…!)