ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2020

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உள்ளதா...! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


தாவர வர்க்கங்களை நாம் இன்று அழித்தும்... அதிலிருந்து நாம் பெறும் உன்னத நிலைகளைச் சிதற விட்டும் வாழ்கின்றோம்.

1.இம் மனித வர்க்கத்தின் பெருக்கத்தினாலும்
2.மற்ற ஜெந்துக்களின் பெருக்கத்தினாலும்
3.நம் செயற்கைக்குகந்த நிலைகளைப் பிரித்ததினால் மட்டும் அல்லாமல்
4.இன்று ஆவி உலகத்தின் பெருக்கத்திலுள்ள ஆவிகளும் அச்சத்தை ஈர்த்து வாழ்வதினாலும்
5.இன்று இவ்வனைத்து இனப் பெருக்கத்தினால் அச்சக்தியெல்லாம் இந்நிலையில் ஈர்க்கப்படுவதினால்
6.தாவர வர்க்கங்களுக்குக் கிடைக்கும் சத்து நிலை குறைந்துவிட்டது.

எத்தாவரமும் சூரியனின் சக்தி பட்டு மட்டும் வளரவில்லை. இப்பூமித்தாய் சக்தியை ஈர்த்து ஊட்டம் தரும் நிலையிலிருந்தும் தான் அத்தாவரங்களின் செழிப்பு நிலை உள்ளது.

சில தாவரங்களினால் இப்பூமியில் உற்பத்தியாகும் பல அணுக்களை ஈர்த்து வளரும் தன்மை உள்ளது.

உயிரணுக்களையே ஊட்டமாக ஈர்த்து வளரும் தன்மையில் பல தாவரங்கள் உள்ளன. உயிரணுக்களையே என்பது இன்று பல ஜீவன்கள் ஆத்மா பிரிந்த பிறகு நாய் நரி பன்றி இப்படிப் பல ஜீவன்களைத் தாவரங்களின் வேருக்கு அடிப்பாகத்தில் இஜ்ஜீவன்களின் உடலை உரமாக இட்டு... அதையே உரமாக்கித் தன் சக்தியில் ஈர்த்து நற்கனிகளைப் பல தாவரங்கள் நமக்கு அளிக்கின்றன.

அத் தாவரங்களின் சக்திக்கு உரமாக வைத்த அவ்வுடலில் உள்ள தன்மையெல்லாம் அத்தாவரமே சத்தாக ஈர்த்ததினால் அதிலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் பெறும் நிலையில்லாமல் அதிலிருந்து சென்ற ஓர் ஆத்மா மட்டும்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனிலிருந்து மாறுபட்ட மிருக ஜெந்துக்கள் மற்றப் பிராணிகள் யாவையுமே
1.அதை எருவாக வைக்கும் பொழுது
2.தாவர வர்க்கங்கள் உரமாக ஈர்த்துச் செழித்து வளர்ந்திடும்.

ஆனால்... இம்மனித உடலைப் புதைத்தால் இம்மனித உடலைப் புதைத்த இடத்தில் அதன் சக்தி அங்கிருந்தால் இம்மனித உடலில் இருந்து “ஒரு புல் பூண்டும் வளர்ந்திடாது...!”

இம்மனித உடல் தாவர வர்க்கத்திற்கு எருவாக சக்தி தரும் பாக்கியமும் இம்மனித உடலுக்கில்லை...!

மற்ற ஜெந்துக்களும் இம்மனித உடலுக்கும் உள்ள வேறுபாடு இம்மனித உடல் “கடும் உப்பு நிலை” பெற்றது. இம்மனித உடலை உப்புக் கலந்த இரசாயன நிலைப்படுத்தி பல நாட்கள் ஆவி பிரிந்த உடலைப் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கலாம்.

ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது. எதுவுமே அழிவதில்லை... வளரத்தான் செய்கிறது. இச்சூரியனின் சக்தியில் வந்த எவற்றையும் யாராலும் அழித்திட முடியாது.

வளர்ந்து கொண்டே உள்ள இவ்வுலகினில் இன்று நாம் ஆரம்பத்தில் உள்ள நிலையை... ஒரு சக்தியை அழித்ததினால் மற்ற சக்தி வளர்ந்து விட்டது. அந்நிலையை மாற்றி அச்சக்தியை அழித்துத்தான் முன் இருந்த சக்தியை வளரச் செய்ய வேண்டும்.

தாவர வர்க்கங்களை வளர்த்து மற்ற இனப்பெருக்கத்தை நாம் மாற்றி மாற்றி என்னும் பொழுது அழித்து மற்ற மிருக வர்க்கத்தை நாமே அதை உண்டு பல அணுக்களை வளரவிடாமல் மற்றப் பிராணிகள் இறந்த பிறகு அதன் உடலைத் தாவரங்களுக்கு எருவாக்கி தாவர நிலையை வளரச் செய்ய வேண்டும்.

மனித வர்க்கத்தின் பெருக்கத்திற்கும் எவ்வுடலையும் நாம் புதைக்காமல் மனிதன் இறந்த பிறகு அவ்வுடலை எரிக்கும் நிலைப்படுத்திட வேண்டும்.

செயற்கையின் ஆசையை மாற்றி வாழும் நிலையில்லை இன்று மனிதனுக்கு...! ஆகவே இவ்வுலக நிலையையே காத்து அதன் அழிவான மாற்றத்தைத்  தாங்கும் சக்தி சித்தர்களாலும் ரிஷிகளாலும் முடியாத நிலையில் இன்றுள்ளது.

1.இச் செயற்கையை மனிதனின் நிலையிலிருந்து மாற்றிடவும் முடியாது...
2.இவ்வுலகத்தின் மாறும் தன்மையிலிருந்து
3.இவ்வுலக நிலையை மீட்டிடவும் முடியாத நிலையில் உள்ளது...!