ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2020

எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம்...! என்ற எண்ணத்திற்கு இன்று மனிதர்கள் வந்துவிட்டனர்


இன்றைய விஞ்ஞான உலகில் காலத்தால் சிறுகச் சிறுக விஷத் தன்மைகள் பரவி இந்த காற்றுத் தன்மையே நச்சுத் தன்மையாகி விட்டது. மனிதனுக்குள்ளே இது பெரும் பிரளயமாக மாறிவிட்டது.

இன்று பார்க்கின்றோம். சிறைச்சாலைகளில் எல்லாம் போலீஸ் பந்தோபஸ்து உள்ளது. இருந்தாலும் அந்தச் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து தன் எதிரியை மடக்கியே தீர வேண்டும்... கொன்றே தீர வேண்டும்... என்று எவ்வளவு காவல்கள் இருந்தாலும் உள்ளே சென்று அந்த மனிதனைக் கொன்று அந்த பழியைத் தீர்த்து கொள்ளும் உணர்வுகள் தான் வருகின்றது

பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அந்தக் காவலர்களையும் தாக்கிவிட்டுத் தன் எதிரியைத் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு செயல்படும் தன்மைகள் அதிகமாக வளர்ந்துவிட்டது.

1.தான் எப்படி நல்லதாக ஆக வேண்டும் என்று சிந்தனை இல்லை
2.ஆனால் எதிரியை வீழ்த்திவிட வேண்டும் என்ற உணர்வுதான் வருகின்றது.

அதே போல் குடும்பத்தில் ஒரு வெறுப்பின் தன்மை ஆகிவிட்டால் இதனின் உணர்வை தனக்குள் வளர்த்துத் தான் எப்படியும் மடிந்தே (தற்கொலை) ஆக வேண்டுமென்று எண்ணிவிட்டால் எந்த வழியிலும் மடிந்து கொள்ளும் எண்ணங்களே வருகின்றது.

ஆக... எப்படியும் வாழலாம் என்ற நிலைகளே மனிதனின் உணர்வுக்குள் விளைந்துவிட்டது

இன்று செல்வத்தைச் சேர்த்து தன் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தான் ஒவ்வொருவரும் எண்ணுகின்றோம். ஆனால் தான் வாழவேண்டும் என்றும் எப்படியாவது வாழவேண்டும் என்று உணர்வை ஏற்றுக் கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள்...?

1.நாம் இரவிலே தூங்கப்படும்போது... மனிதனை விட்டாலும் கூட பரவாயில்லை
2.எழுந்துவிட்டால் தன்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவான் என்று அடித்துக் கொலை செய்துவிட்டு
3.வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றார்கள்.

பின் நாம் உழைத்துச் சம்பாதித்த சொத்து எங்கே இருக்கின்றது...? இப்போது இதனின் வளர்ச்சிதான் அதிகமாகப் பரவியும் இன்று உருமாறிக் கொண்ட நிலைகள் இருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் விளையும் இந்த உலகில் நாம் வாழும்போது அஞ்சியே... திருடன் வந்து விடுவான்... நம்மைக் கொலை செய்துவிடுவான்...! என்ற உணர்வை அதிகமாக வளர்த்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை வளரப்படும்போது அதே எண்ணங்களே வருகின்றது.

அந்தத் திருடன் என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்வின் அலைகள் பட்டபின் திருட வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அவன் இந்த வீட்டிற்கே வருவான்.

அதாவது... யார் வரப் போகிறார்கள்...! தைரியமாக இரு... என்று இருக்கும் அந்த வீட்டிற்குச் செல்ல மாட்டான்.

அங்கே திருடுகின்றார்கள்... இங்கே திருடுகின்றார்கள் என்றும் பொருள் எல்லாம் போய்விட்டது என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்...
1.இரவில் படுக்கும்போது இந்த எண்ண அலைகளை பரப்பினால் போதும்
2.நிச்சயம் அந்த வீட்டிற்குள் திருடன் வந்துவிடுவான்.

“சரட்... என்று சத்தம் போட்டால் போதும்.. ஆ...! என்று இந்த மூச்சை விடுவார்கள். இந்த மூச்சலைகள் படரும்போது திருடனுடைய நிலைகள் என்ன...?

ஒரு கல்லைப் போடுவார்கள். அந்தக் கல்லை போட்டபின் அதனின் எதிரொலிகளைப் பார்ப்பார்கள். இரண்டாவது கல்லைப் போடுவார்கள் மூன்றாவது கல் வரப்படும்போது இந்த உணர்வுகள் அப்படியே மறைந்துவிடும்.

நமக்குச் சத்தம் கேட்கும்... ஏதோ கல் என்று...! இரண்டாவது கல்லைப் போடும்போது ஏதோ சத்தம் கேட்கும்... “சரி விடு...” என்போம். மூன்றாவது கல் வரப்படும்போது முழித்திருந்த உணர்வுகள் மாறி நன்றாகத் தூங்க வைத்துவிடும்.

இப்படி அவர்கள் எண்ணங்கள் திருட வேண்டுமென்ற எண்ணம் வரும்போது நம்மைத் தூங்க வைத்தேவிடும்.

திருடன் வருவான் என்று எவ்வளவோ உஷாராக இருப்பார்கள். இருந்தாலும் திருடன் வரும்போது நன்றாகத் தூங்கிவிடுவார்கள்.

ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் அது சிறுகச் சிறுக இவ்வாறு வந்து... அந்த உணர்வின் தன்மை சோர்வடையச் செய்து... அவனுடைய எண்ணம் வலுவாகி... அவனுடைய எண்ணக் குறிகளை வைக்கும்போது அந்த உணர்வலைகளே நம்மைத் தூங்க வைத்து விடுகின்றது.

நான் எவ்வளவோ உஷாராக முழித்துக் கொண்டுதான் இருந்தேன் இருந்தேன். என்னை எப்படியோ ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள்.

வேறொன்றும் தேவையில்லை. இங்கே தபோவனத்தில் கூட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பேட்டரி லைட் அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது. ஃபோர்மேன் ஒருவர் இருந்தார்.

தபோவனத்தில் உள்ள  வேலியெல்லாம் எடுத்துவிட்டு கல்களை ஊன்றிக் கொண்டிருந்தோம். இத்தனை நாள் வேலி இருந்தது. இன்றைக்கு இல்லை என்று சொன்னவுடன் தாராளமாக எல்லோரும் வந்து போகும் நிலை இருந்தது.

அதனால் தான் நான் (ஞானகுரு) அப்பொழுது சொன்னேன்...! முன்பு வேலியில்லாமல் இருந்தது அதைப்பற்றி யாரும் சிந்திக்கின்றதில்லை. பல பொருள்கள் உள்ளே வைத்திருப்பதனாலே இதைப் பார்த்திருப்பார்கள். வேலி இல்லை என்பதைப் பார்த்தவுடன் அந்த எண்ணம் தூண்டும்... நிச்சயம் வந்து எதாவது எடுப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்றேன்.

அட...! நான் எப்பொழுது பார்த்தாலும் முழித்துக் கொண்டுதான் இருப்பேன் என்றார் அந்த ஃபோர்மேன்.

அவர் அன்று சொன்னாரோ இல்லையோ நேராக அவரிடம் இருந்த புதிய டார்ச் லைட் அவர் வைத்திருந்த தாமிர வயர் (COPPER COIL) எல்லாவற்றையும் அலுங்காமல் கொண்டு சென்று விட்டான்.

கொண்டு போகும் போது அங்கே ஒருத்தர் பார்த்திருக்கின்றார். யாரோ போகின்றார் என்று. அட நம்முடைய ஆள் தான்...! வேலியில்லை.. அதனால் ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் என்ற எண்ணத்தால் பேசாமல் போய்விட்டார்.

ஏனென்றால் அந்த உணர்வின் எண்ணங்கள் இப்படித்தான் இயக்குகிறது.

ஆனால் அந்தத் திருடனுடைய வலுவான நிலைகள் வரப்படும்போது எது எப்படி மாறுகின்றது...?

தபோவனம் தான்...! இருந்தாலும் அவருடைய எண்ணங்கள் இப்படி இருக்கப்படும்போது அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்றார் ஃபோர்மேன். ஆனால் பொருள்  போய்விட்டது.

என்னா சாமி...? இந்த இடத்தில் வந்து இப்படிக் கொண்டு போய்விட்டாரே...! என்று என்னிடம் கேட்டார்.

உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கின்றது...! என்ற நிலையை அவருக்கு எடுத்துக் காட்டினேன். ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்று...!

1.மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு மன பலம் கொண்டு
2.உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.