ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2019

ஆக்சிஜன் என்று சொல்கிறோம்…! பிராண வாயு என்று சொல்கிறோம்…! குழந்தையின் பிறப்பில் இதனுடைய முக்கியத்துவம் என்ன…?


கேள்வி:-
ஆக்சிஜன் என்றால் என்ன…?

Recently in one meeting, it was mentioned that during birth when the baby is born if there is lack of oxygen in brain, those cells are destroyed and the impact will be in body conditions,speech, involuntary movements of body parts etc and the baby becomes disabled. Some child will be born like all other children, but their disability (not visible during birth) will be grown when they grow up and the kid become abnormal later.

எல்லோரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க எல்லா செயல்களும் செய்வார்கள். குழந்தை பிறக்கும் தருணம் எப்படிச் சூழ்நிலையை மாற்றி disabled  குழந்தையாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது.

அந்த பத்து மாதமும் சேர்த்து வைத்த வலிமையும் நல்ல எண்ணங்களும் எப்படி மாற்றத்திற்கு காரணமாக அமைந்து நல்ல குழந்தையாக பிறக்கச் செய்யவில்லை. In medical terms… Lack of oxygen எப்படி இங்கு காரணமாகிறது…?

பதில்:-
விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுணர்ந்த கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் பல பல பெயர்களை வைத்துள்ளார்கள். அதிலே ஒன்று தான் ஆக்சிசன் என்பது.

அன்று வாழ்ந்த மெய் ஞானிகளும் தாங்கள் உணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை மற்றவர்களுக்கு அறியச் செய்ய அதற்குரிய காரண காரியப் பெயர்களை வைத்துள்ளார்கள்.

விஞ்ஞானிகள் ஆக்சிஜன் என்று சொல்வதை அவர்கள் பிராணவாயு என்று சொல்கிறார்கள். இரண்டும் ஒன்றாகத் தெரிந்தாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உண்டு.

1.விஞ்ஞானிகள் சொல்வது அந்த வாயுவின் இயக்கங்களை.
2.ஆனால் மெய் ஞானிகள் சொல்வது ஜீவன் பெறச் செய்யும் சக்தியை
3.அதாவது உயிரோட்டம் உள்ளதாக இயக்கும் சக்தியைப் “பிராண வாயு” என்று சொல்கிறார்கள்.

ஆக்சிஜன் என்று சொல்லும் வாயுவை விஞ்ஞானபூர்வமாக ஆய்வுக் கூடத்தில் உருவாக்கி அதைப் பல செயல்களுக்கும் உபயோகப்படுத்துகின்றார்கள்.

ஆனால் ஞானிகள் சொல்லும் பிராணவாயுவைச் செயற்கையாக யாராலும் வெளியிலே உருவாக்க முடியாது. அது இயற்கை.

அதாவது நட்சத்திரங்கள் கோள்கள் சூரியன் இவைகளிடமிருந்து வெளிப்படும் அலைகள் கலந்து கல் மண் தாவர இனங்கள் என்று எல்லாவற்றிலும் கலவையாகி உருவாகி
1.அதிலிருந்து வெளிப்படும் அலைகளை அல்லது மணங்களை
2.உயிரணுக்கள் சுவாசித்து உடலுடன் கூடிய உயிரினங்களாக
3.ஒரு ஜீவன் கொடுக்கும் பிராணன் கொடுக்கும் சக்தியாக வருகின்றது.
4.இதை விஞ்ஞானத்தால் கண்டு கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல…!

ஏனென்றால் பொருளின் அடிப்படையில் பார்க்கும் விஞ்ஞானத்திற்கும் பொருளை உருவாக்கும் சக்திகள் என்ற அடிப்படையில் மூல சக்தியாக இருக்கும் அந்தச் சூட்சமத்தைப் பார்க்கும் மெய் ஞானத்திற்கும் இது தான் வித்தியாசம்.

இரண்டாவது விஞ்ஞானம் என்பது பகுத்துப் பகுத்து அறியும் தன்மை பெற்றது. கணக்கீடுகளின் அடிப்படையில் தான் ஒன்றை ஏற்றுக் கொள்வார்கள். (STATISTICAL ANALYSIS BY MULTIPLE DIMENIONS)

எத்தனை முறை நடந்தது…. அதில் நல்லது எத்தனை..? கெட்டது எத்தனை…? இதை வைத்துத்தான் ஆராய்ச்சியையும் அதன் முடிவையும் கொண்டு வருவார்கள்.

அந்த அடிப்படையில் அவர்கள் சொல்லும் கருத்து தான் அதாவது அந்தக் கணக்கீடு தான்
1.மூளைக்குள் ஆக்சிஜன் போகவில்லை என்றால் குழந்தைக்கு அறிவாற்றல் இருக்காது.
2.மற்ற உறுப்புகளும் செயல் இழந்துவிடும் என்பது.
3.இருந்தாலும் மூளைக்கு ஏன் ஆக்சிஜன் போகவில்லை என்றால் அது ஏன் என்று சொல்லத் தெரியாது.

ஆனால் கர்ப்பமாக இருக்கும் அந்தத் தாய் தன்னுடைய சுவாசத்தில் எதை நுகர்ந்ததோ அதனின் இயக்கமாகத்தான்
1.தாய்க்கும் குழந்தைக்கும் இணைக்கப்படும் அதனின் தொடரில் தான்
2.அந்த சிருஷ்டி அதாவது அந்த ஜீவன் உருவாகிறது.

இன்றிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தாயின் சுவாச நிலையைப் பாதிக்கும் எத்தனையோ உணர்வலைகளின் இயக்கம் உண்டு, பத்திரிக்கைகளிலோ டி.வி.யிலோ ஃபோன் மூலமாகவோ பக்கத்து வீட்டில் நடந்த சண்டையினாலோ இதைப் போன்ற எண்ணிலடங்காத அதிர்வுகள் ஏற்படுத்தும் எத்தனையோ நிலைகளைத் தாய் கேட்க நேர்கின்றது அல்லது பார்க்க நேர்கின்றது.

அதில் ஏதாவது ஒன்று மாறினாலும்
1.துடிப்பின் இயக்கங்கள் மாற்றப்பட்டு
2.அதனின் அழுத்தமான அதிர்வு அப்படியே குழந்தைக்கு இணைக்கப்படும் பொழுது
3.விஞ்ஞானிகள் சொல்லும் அந்த மூளைக்குச் செல்ல வேண்டிய சக்தியை அது தடைப்படுத்திவிடும். (LACK OF OXYGEN)

உதாரணமாக சில பறவைகள் அது இட்ட முட்டைகளை நாம் கையால் தொட்டுவிட்டாலே அந்தத் தாய்ப் பறவை அந்த முட்டைகளை அடை காக்காது. தள்ளி விட்டுவிடும். குஞ்சாகப் பொரிக்காது.

ஏனென்றால் மற்ற உயிரினங்களின் உணர்வுகள் அந்த முட்டையில் இணைந்தால் தன் இனம் சரியாக உருவாகாது என்று அதற்குத் தெரியும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஞானிகள் கண்ட பேருண்மைகள்.

(அதைப் போல் தான்) கர்ப்பமாக இருக்கும் தாய் சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்கும் உணர்வுகள் தான் மாறுபாடான (நல்லதோ கெட்டதோ) குழந்தைகள் உருவாகக் காரணமே தவிர ஆக்சிஜனோ அதுவோ இதுவோ என்று தேட வேண்டியதில்லை.

இயற்கையிலிருந்து இன்றைய சமுதாய வாழ்க்கை (ARTIFICIAL LIFE) மிகவும் விலகிச் சென்று கொண்டுள்ளது. அதற்குத்தகுந்த புதிய புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

எலெக்ட்ரானிக் சாதங்களுக்கு எப்படி GUARANTEE கிடையாது என்று சொல்கிறார்களோ அது போல் மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் GUARANTEE கிடையாது என்பார்கள்.

ஆனால் அகஸ்தியன் கண்ட மெய் உணர்வை எப்பொழுது சுவாசிக்கின்றார்களோ அப்பொழுது தான் மெய்யை உணர்வார்கள். மெய்யை உணர்த்தவும் செய்வார்கள். அந்தக் காலம் வரும் பொழுது நாம் இருப்போமா…! அல்லது அவர்கள் இருப்பார்களா…? என்று சொல்ல முடியாது.

எது எப்படி இருந்தாலும் நம்முடைய சுவாச நிலையைச் சீராக வைத்திருந்தால் தான் இன்றைய செயற்கையின் தாக்கத்திலிருந்து யாருமே விடுபட முடியும்.

அதிலிருந்தெல்லாம் தப்புவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும் என்று சொல்வது.

ஒரு வீட்டில் கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பமே தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். அப்படி ஒவ்வொரு குடும்பமும் மாறினால் இனி வரும் சமுதாயத்தை நிச்சயமாக மாற்றலாம்.

இந்த உலகைக் காக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்லும் மெய் வழி இது தான்…!