ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 29, 2024

விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்

மாமரத்தின் சத்தும் ரோஜாப் பூவின் சத்தும் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பவசத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலவையாகி… புவியின் ஈர்ப்பிற்குள் சிக்கப்பட்டுக் கருவுற்றுச் செடியாக விளையப்படும் பொழுது அரளிச் செடியாக மாறுகின்றது. அந்த மூன்றும் ஒன்றாக இணைந்து அரளிச் செடியாக மாறுகின்றது.

அரளிச் செடியாக மாறும் பொழுது
1.மாமரம் போல் இலைகள் இருந்தாலும் அதிலே சில வித்தியாசங்களும்
2.ரோஜாப் பூவைப் போன்று இருப்பினும் மணமும் கொண்டாலும்
3.விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது அந்தச் செடி விஷத்தன்மை கொண்டதாகி விடுகிறது.

விஷச் செடியின் சத்து பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்து மூன்று சதவீதம் மாமரத்தின் சத்து பத்து சதவீதம் கவரப்பட்டு இந்த உணர்வுகள் ஒன்றாக இணைந்து ஒரு வித்தாக பூமியிலே பதியும் பொழுது “அதனதன் சதவீதம்” காற்றிலிருந்து இழுத்து அரளிச் செடியாக விளைகின்றது.

செடி உருவான பின் அந்த அரளிப் பூவில் ரோஜாப்பூ போன்ற மணங்கள் வரும்.
1.அரளிப் பூவைச் சாப்பிட்டால் மயக்கம் வரும்
2.அரளி விதையை உட்கொண்டால் மனிதனை மாய்த்துவிடும்.
3.ஆனால் அரளிச் செடியின் மணத்தை நுகர்ந்தால் “நம் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களைக் கொன்று விடும்…”

இதிலே இத்தனை வித்தியாசங்கள் உண்டு…!

அந்த அரளிப்பூக்களை எடுத்து சூரிய புடமாக்கி… தேங்காய் எண்ணெயில் கலந்து அதைக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்குக் கால்கள் வீக்கமாகி நீர் வடியும்…
1.அந்த இடங்களில் காய்ச்சிய இந்த எண்ணையைத் தடவினால் அரிப்பு நின்றுவிடு.ம்
2.நீராக வடியும் அந்த இடத்திலிருக்கக்கூடிய விஷத்தன்மைகளும் மடிந்து… அந்தத் தோல் நன்றாக ஆகிவிடும்.

அந்த அரளியிலேயே ஓரடுக்கு அரளி… பல அடுக்கு அரளி என்றெல்லாம் உண்டு.

நம்மை அறியாது தோலில் சேரும் சில விஷத்தன்மைகளால் இதனுடைய மணம் பட்ட பின் அது தோலை உருவக்கிய நல்ல அணுக்கள் மடிவதும்… அதனின் மலம் பட்டபின் தசைகள் குறைவதும் நீராக வடிவதும்… அந்த நீரையே உணவாக எடுத்து உட்கொள்ளும் நிலை பெறுகிறது (தோல் சம்பந்தப்பட்ட வியாதி).

அத்தகைய அணுக்கள் மடிந்தால் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்கிறது. பின் அந்த மனிதனுடன் யாரெல்லாம் தொடர் கொண்டு பேசுகின்றார்களோ அல்லது பழகுகின்றார்களோ
1.அவருடைய சுவாசத்திற்குள் அந்த விஷ அணுக்கள் சென்று உடலில் அரிப்புத் தன்மையாகி
2.சுவாசப் பைகளிலும் அரிப்பாகி… தன்னை அறியாது வேதனைப்படும் நிலை வரும்.

ஒரு மனிதனில் விளைந்த அந்த நோயின் உணர்வு இங்கே வந்து விடுகின்றது. ஏனென்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட அத்தகைய உணர்வுகளை நாம் நுகரப்படும் போது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது… நோயாக உருவாக்கி விடுகிறது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய செயல்கள். இதையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

1.வாக்குடன் கொடுக்கின்றேன்… புரிந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.