ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 9, 2024

பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது

மற்றவர்கள் வேதனைப்படுவதை நுகர்ந்து “அவர்களுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசித்து அத்தகைய உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து விட்டால்… அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் குடும்பத்திற்குள் பண்பு கொண்ட நிலைகள் என்று இருப்பினும்… வேதனையை ரசித்த உணர்வுகளை… அந்த விஷத்தன்மையை இங்கே கொண்டு வரப்படும் பொழுது… அவர்களும் சிந்திக்கும் திறன் இழக்கின்றனர்.

சிந்திக்கும் திறன் இழக்கப்படும் பொழுது…
1.பாசத்தால் தன் பையனை இதைச் செய்… அதை செய்… இப்படியெல்லாம் நீ இருக்க வேண்டும்…! என்று அடிக்கடி சொல்வார்.
2.அவர் சொல்லச் சொல்ல இவருக்கு சும்மா இதே தான் வேலையாகிப் போய்விட்டது என்று
3.வெறுத்திடும் உணர்வாக… வெறுப்பை ஊட்டும் அணுக்கள் இங்கே விளையத் தொடங்குகிறது.

அடுத்தவர்கள் துயரைப்படுவதைக் கண்டு அந்த வேதனைகளை ரசித்து நுகர்ந்ததன் நிலையில்… தன் குழந்தை க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இவர் வெளிப்படுத்தும் உணர்வு
1.“தன்னுடன் இணைந்த மக்களைப் பிரித்து விடுகின்றது….”
2.அதே சமயத்தில் தன்னுடன் இணைந்து வாழும் தன் சமூகத்தினருடனும் “வெறுப்படையும் தன்மையை” உருவாக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வேகங்கள் கூடும் பொழுது… விஷம் கலந்த உணர்வின் சொல்லாக மற்றவர் செவிகளில் கேட்கப்படும் பொழுது… தன்னை அறியாமலே நண்பனையும் (மறைமுகமாக) எதிரியாக உருவாக்கி விடுகின்றது…

ஆதே விஷம் கொண்ட உணர்வுகளைத் தன் வியாபாரத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொழுது… அதாவது சொல்லால் பொருளின் தரங்களைப் பற்றிப் பேசப்படும் பொழுது… தன்னை அறியாது அங்கே “உணர்ச்சிகள் மாறுகிறது…”

நல்ல பொருளுக்குள் விஷத்தின் தன்மை பட்டால் அதன் வேகத் துடிப்பு கொண்டு அதனைப் பயன்படுத்துவோரை எப்படி அது மயங்கச் செய்கின்றதோ இதைப்போல கேட்பவரின் சிந்தனையைக் குறைக்கச் செய்து விஷத்தின் துடிப்பால் வாடும் பொழுது… “நல்ல சொல்களைச் சொன்னால் கேட்க முடியாது…”

அடிக்கடி பிறருடைய வேதனையைக் கண்டு ரசித்த அவர்கள்…
1.தன் இன மக்களிடமோ நண்பர்களிடமோ பேசும் பொழுதெல்லாம் விஷம் கலந்த உணர்வுகள் தோன்றி
2.அவருடன் பற்று கொள்ளும் பொழுது விஷ அணுக்களை உருவாக்கி
3.நாளடைவில் இவர் உணர்வே பகைமையாக்கிவிடும்… இவரை வெறுக்கும் உணர்வே அங்கே வளர்கின்றது.

இதையெல்லாம் யார் செய்வது…? இதைத் தான் “கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…” என்று சொல்வது.

ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அவனுக்குள் இருக்கும் வேதனை (வேதனை என்பதே நஞ்சு) என்ற வலிமை கொண்ட உணர்வுகளை நுகர்ந்தறியப்படும் போது அது தனக்குள் வளர்ச்சியாகி அது நம்மை நலியச் செய்கின்றது வலு இழக்கச் செய்கின்றது நல்ல குணத்தை.

இதை எதைக் கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்…?

வெப்பத்தின் தணல் கொண்டு உலோகத்தினை உருக்கி இளகச் செய்து நமக்கு உபயோகமாகக் கூடிய ஒரு பொருளாக அதை மாற்றுகின்றோம்.

அப்படி மாற்றுவதற்கு என்ன செய்கிறோம்…?

நெருப்பிலே அந்த உலோகத்தைன் வைத்து அது சிவந்த பின் ஒரு இடுக்கி கொண்டு அதை நகர்த்தி… சம்மட்டி கொண்டு அடித்து வேண்டிய உருவாக மாற்றுகின்றனர்.

அதே போல் அந்த உலோகத்தை உலையில் வைத்து தண்ணீர் போல் உருகச் செய்து
1.தனக்குத் தேவையான உருவத்திற்கு மோல்டுகளை (MOULDING) வைத்து அதிலே உருக்கிய உலோகத்தை ஊற்றப்படும் போது
2.மோல்டிற்குள் இருக்கும் சந்து இடங்களில் நுழைந்து (FILLING)… எண்ணிய உருவமாக உருவாக்குகின்றார்கள்.
3.உறைந்து ஆறிய பின் எடுத்து… அதில் பிசிறுகள் இருந்தால் அகற்றித் தூய்மையாக்குகின்றனர்.

இப்படித்தான் பல பொருள்களையும் இயந்திரங்களையும் மோல்டுகளாகச் செய்து உருவாக்குகின்றார்கள் மனிதன் தன் அறிவாற்றல் கொண்டு.

இதைப் போன்று தான் நாம் பிறருடைய குறைகளையும் துயரங்களையும் வேதனைகளையும் கேட்டறிந்தால்
1.அந்த விஷத்தின் தன்மைகளை உருவாக்கும்… “நமக்குள் உருப்பெறும் உறைவிடமாக” அது மாற்றி விடுகின்றது.
2.நல்ல குணங்களுடன் இது கலந்து செல்லப்படும் பொழுது அதைச் செயலற்றதாக (தீமையின் உணர்வுகள் கலந்து மோல்ட் போன்று) ஆக்கி விடுகின்றது.
3.நன்மை செய்யும் உணர்வுகள் குறைந்து தீய விளைவுகளை உருவாக்கச் செய்கிறது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…! நம்மை நாம் எப்படிக் காப்பது…?

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றவன் துருவன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன். விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் வலிமை கொண்டு வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன்.

தான் பெற்ற சக்தியை… தான் கண்டுணர்ந்த பேராற்றல்களை… திருமணமான பின் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.
1.அகண்ட அண்டத்தில் உருவாகும் நிலையும்… அணுக்களின் தன்மையும்
2.”தீமைகளைப் பிளக்கும் நட்சத்திரங்களின் இயக்கமும்”
3.இதைப் போன்று அவன் கண்டுணர்ந்த உணர்வுகளை எல்லாம் தன் மனைவியின் செவிகளில் ஓதுகின்றான்.
4.இவன் சொல்வதை மனைவி “கண் கொண்டு கூர்ந்து உற்றுப் பார்க்கின்றது…”
5.இவனின்று வரும் உணர்வினை அது நுகரும்படி செய்கிறது
6.உயிரிலே இந்த உணர்வுகள் பட்ட பின் அறியும் ஆற்றல்மிக்க அணுக்களாக விளைகிறது.

இருவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து… இரு உயிரும் ஒன்றாக இணைந்து உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக… அழியாத நிலையாக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெற்றால் அவர்களைப் போன்றே நாமும் நஞ்சினை அடக்க முடியும்… “உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்…” மகிழ்ந்து வாழ முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையவும் முடியும்.