ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2024

பிறரின் வேதனைகளை “இரக்கப்பட்டுக் கேட்டறிந்தால்” வரும் தீய விளைவுகள்

உதாரணமாக கோழியோ பாம்போ கருவுற்றால் அவைகள் கேறும். குருவி மற்ற அதைப் போன்ற முட்டையிடும் சில இனங்கள் அனைத்துமே கேறத்தான் செய்யும்.

மனிதனின் வாழ்க்கையில் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து (சுவாசித்து) விட்டால் அது இரத்தத்தில் கலந்துவிடுகிறது. பின் கருத்தன்மை அடைகின்றது.

1.மீண்டும் மீண்டும் அவரின் வேதனையை எண்ணி நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் இந்த உணர்வுகள் முழுமை அடைந்தால்
2.எந்த உடலிலே அந்த வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்ததோ
3.அதே மாதிரி நம் இரத்த நாளங்களிலும் அந்த அணுவை உருவாக்கும் “கரு முட்டைகளாக” மாறி விடுகின்றது.

அவ்வாறு கரு முட்டைகள் ஆகும் பொழுது அந்த இரத்தம் இரத்தநாளங்கள் வழியாகச் சுழலும் போது அந்தக் குறித்த காலம் வரும் பொழுது என்ன நடக்கின்றது…?

வேதனைப்படுவோரை… “அடப்பாவமே… நல்ல மனிதன் இப்படி அவதிப்படுகின்றானே…!” என்று தான் அவர்கள் நோயாக அல்லது துன்பத்தில் வாடுவதை நாம் எண்ணுகின்றோம்.

கோழி எப்படிக் கருவுற்ற பின் அது கேறுகின்றதோ அதைப்போல நுகர்ந்த உணர்வுகளை “மீண்டும் மீண்டும் திரும்ப எண்ணும் பொழுது” அது கோழி கேறுதல் போன்று ஆகிவிடுகிறது

அவர் உடலிலே நோயாக உருவாக்கிய அணுவின் தன்மை நம் இரத்தங்களிலே கருவுற்று முட்டையாக மாறுகின்றது.
1.அந்த முட்டை இரத்தத்தில் சுழன்று வரும் பொழுது உடலுக்குள் சிறு மூளை பாகம் வரை செல்லும்… மற்ற எல்லா பாகங்களுக்கும் சென்று வரும்.
2.முட்டையாக இருக்கும் பொழுது முதலில் அந்த வேதனை நமக்குத் தெரியாது.

ஆனால் இரத்த நாளங்கள் வழியாக நம் உடல் உறுப்புகளுக்குள் சுழன்று வரும் பொழுது… இருதய வாயில்களில் இரத்தங்களை வடிகட்டி வரும் அந்த இடத்தில் இந்த முட்டை சென்றால்… இது வடிகட்டும் திறன் கொண்டு இழுத்து அனுப்பப்படும் பொழுது துடிப்பின் தன்மை அழுத்தமாகும் பொழுது அந்த முட்டை வெடித்து விட்டால் போதும்.

வேதனையை உருவாக்கும் அந்த விஷமான அணு அந்த இருதய பாகத்தில் சேர்ந்து விடுகிறது. சேர்ந்த பின்
1.அந்த மனிதன் எப்படி வேதனைப்பட்டானோ அதே வேதனை உணர்வுகள் இருதய வாயிலே தோன்றி
2.பளீர்… பளீர்… என்று மின்னும்… ஊசி குத்துவது போல் இருக்கும்.
3.நெஞ்சு வலிக்கின்றது… எப்படியோ எனக்கு மயக்கமாக வருகிறது என்று சொல்லத் தொடங்குவோம்.

நெஞ்சு வலிக்கின்றது என்று ஒரு அணுத்தன்மையாக முதலில் அடைந்தாலும்… முட்டை வெடித்து முட்டையை விட்டு வெளிவந்த குஞ்சுகள் தன் இரைக்காக (வேதனைப்படும்) உணர்ச்சிகளை உந்தும்.

கோழி முட்டைகள் பொரிந்த பின் வெளி வந்த குஞ்சுகள் கத்தும். அப்போது தாய்க்கோழி கூவி இரையைத் தேடித் தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றது.

அதைப் போல நமது உயிர் நாம் எண்ணியதை அணுக்களாக உருவாக்கிய பின் உணவு கொடுக்கும்.
1.இருதய வாயிலில் உருப்பெற்ற அணுக்களுக்கு… அந்தக் குஞ்சுகள் இரைக்காக உணர்ச்சியைத் தூண்டும்.
2.அப்போது வலி வரும்… மீண்டும் வலிக்கின்றதே வலிக்கின்றதே என்று எண்ணும் போதெல்லாம்
3.அந்த வலியின் உணர்வை எடுத்து அந்த அணு தன் இனத்தையே பெருக்கத் தொடங்கும்.

முதலிலே லேசாகத்தான் நெஞ்சுவலி இருந்தது பின் அது அதிகரித்து அணுக்களின் தன்மை தன் இனத்தைப் பெருக்க ஆரம்பிக்கும் பொழுது “இருதய வால்வுகள்” விஷத்தன்மையான நிலைகள் கொண்டு “அது விரிவடையும்… அல்லது ஒடுங்கி நிற்கும்….”

விஷ வாயுவின் தன்மை உற்பத்தியாகத் தொடங்கினால் அதனுடைய முடிவு… தாங்காதபடி அந்த ரத்த நாளங்கள் வெடித்து விடும். வெடித்தால் ஒன்றும் செய்ய முடியாது… இது ஒரு பக்கம்.

ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்…. திடீரென்று இயக்கச் சக்தி குறைவு.

ஆனால் அவர் ,மீது பற்று கொண்ட ஒருவர் அவர் மீது நினைவாற்றலைச் செலுத்தி… “திடீரென்று இறந்து விட்டாரே…” என்று அடிக்கடி இந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் இந்த அணுத்தன்மை சிறு மூளை பாகம் செல்லும் பொழுது அங்கே வெடித்து விட்டால் இந்த உணர்வின் தன்மை கூடும்.

அது உயிர் பாகம் வரும் பொழுது… நமது உயிரோ கண் காது மூக்கு உடலுக்கு ஆணையிடும். எந்த மனித உடலிலிருந்து இந்த விஷத்தன்மை நுகரப்பட்டு அணுவானதோ அதைக் கவர்ந்து அதே உணர்வின் தன்மையை இங்கே நமக்குள் உருவாக்கும்.

பின்…
1.சிறு மூளை பாகங்களில் இருதயத்தை இயக்கக்கூடிய அந்த நரம்புகளில் தொடர்பு இழந்து விட்டால்
2.இருதயம் இயங்காதபடி ஒரு நொடிக்குள் நாளை மாய்த்து விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… எத்தகைய தீமைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் பார்க்க… கேட்க… நுகர நேர்ந்தால் அதை மாற்றிட நமது குருநாதர் காட்டிய வழியில்
1.உடனுக்குடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
2.இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை இணைத்து.
3.தீமைகள் இரத்தத்தில் கருத்தன்மையாக உருவாகதபடி தடுத்து நம் வாழ்க்கைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு தான் உணர்வின் இயக்கங்களை உங்களுக்குள் தெளிவாக்கி வேதனைகளை மாற்றி அமைக்கும் உபாயங்களைச் சொல்லி… அருள் வழியில் இந்த வாழ்க்கை வாழ்ந்திட… “அதற்குண்டான ஒரு பழக்கமாக… ஒரு பயிற்சியாக… இதைக் கொடுக்கின்றோம்…”