ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2024

இரு நிலை கொண்ட இயக்கத்தை ஒரு நிலையாக்க வேண்டும்

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில் மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையை வங்கிட்டு… அதை மறைத்து விட்டு… ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி… அழியா ஒளி நிலை பெற நமக்கு வழிகாட்டுவது தான் “விநாயகர் தத்துவம்…”

அதற்காகத் தான் இந்தப் பிள்ளையார்…? என்று கேள்விக்குறி இட்டு நம்மைச் சிந்திக்கும்படி வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

உயர்ந்த ஒளியின் உணர்வாகத் தனக்குள் அரசாட்சி புரிந்து வருவது அனைத்தையும் மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தோம் என்றால் “அவனுடன் ஒன்றிய அவனாக” நாம் மாறுகின்றோம்.

1.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் “நான்” என்றாலும் தனித்த நிலைகள் கொண்டு உயிரே இயக்குகின்றது
2.அதிலே நாம் எண்ணிய உணர்வுகள் எது எதுவோ… அதனுடன் இணைந்து செயல்படும் பொழுது தானாகின்றது.
3.ஆனாலும் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது
4.அது தான் “நான் தானாகி - தான் நானாகின்றது.

உயிர் ஒளியின் தன்மையாக இருந்தாலும்… நுகரும் உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி மறைத்தாலும்
1.”தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதே”
2.பின் உணர்வின் ஒளியாக மாறிய பின் - மீண்டும் “ஒளி சிகரமாக மாறிய பின் நானாகின்றது…”

நான் தானாகி… தான் நானாகின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆகவே இந்தப் பிள்ளை யார்…? என்று நினைவுபடுத்தி நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகப் பயன்படுத்தி விண் செல்ல வேண்டும் என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தியவர்கள் ஏழாவதாக ஒளி என்ற நிலை அடைந்து என்றும் பதினாறாக விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சை அடக்கும் சக்தி பெற்ற சூரியனோ அது கொதிகலனாகும் போது நஞ்சினைப் பிரித்தாலும்
1.அதிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் அதே நஞ்சினைக் கவர்ந்து ஓர் இயக்கச் சக்தியின் நிலையாகப் படர்கின்றது.
2.இருப்பினும் இந்தச் சூரியன் அது அழிந்திடும் நிலை தான்.

ஆனால் அதனின்று விளைய வைத்த உயிரின் ஒளி நிலைகள் தான் கவர்ந்த உணர்வை ஒளியாக மாற்றிவிட்டால் பின் எதிலுமே அது வேகுவதில்லை.
1.அத்தகைய வேகா நிலை பெற்றது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்
2.அந்த நிலையை நாமும் அடைதல் வேண்டும்.