ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2024

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்

இயற்கையின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைச் சைவ சித்தாந்தங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஒவ்வொரு உணர்வும் அது இணைந்து கொண்ட பின்
1.உணர்ச்சியின் வேகங்கள் எவ்வாறு சூரியனால் மாற்றப்படுகின்றது…?
2.நுகர்ந்த உணர்வின் ஆற்றலை எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலையை
3.தாவர இனச்சத்தைக் கவர்ந்த சூரியனின் காந்தப்புலன்கள் தாவர இனங்களுக்கு இரையானாலும்
4.அதே உணர்வுகளை உயிரணு நுகரப்படும் போது – “சைவ சித்தாந்தமாக இருந்து… வேதாந்தமாக” அது மாறுகின்றது.

உணர்வின் ஒலியின் தன்மை கொண்டு உணர்வின் ஒலிகளை எழுப்பி அந்த உணர்வுக்கொப்ப உடல் மாறி… சைவம் அசைவமாக எவ்வாறு மாறுகின்றது…? அசைவத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது உணர்வின் அணுக்கள் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்பதைச் சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.

“சைவ சித்தாந்தம்” - தாவர இனங்களில் மாற்றம்… செடி கொடிகள் அது உருமாறுவதும் அதனுடைய உணர்ச்சிகளைக் கூட்டுவது.

“வேதாந்தம்” - உயிர் அணுக்கள் உருவான பிற்பாடு அதனின் உணர்ச்சியின் தன்மை கொண்டு இயக்கச் சக்தி என்று “உடல் பெற்ற அசைவம்” என்ற நிலை தான்.

ஆனால் சைவ சித்தாந்தம் படித்தவர்கள் வேதாந்தத்தைக் கண்டபின் அவர்கள்ள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வார்கள். நீ பெரிதா…? நான் பெரிதா…? நீ படித்தது இவ்வளவுதான்… நான் படித்தது இவ்வளவு…! என்று வாதித்துக் கொண்டு கற்றுக் கொண்ட உணர்வுகளை முழுமையைத் தெரிவதில்லை.

ஒருவருக்கொருவர் “நான் தெரிந்து கொண்டேன்… என்னால் அனைத்தும் முடியும்…!” என்று அகம் கொண்டு செயல்படுவார்கள்.

உதாரணமாக மிளகாயை எடுத்துக் கொண்டால் காற்றிலிருந்து காரத்தின் சத்தை எடுத்துத் தான் அந்த கார குணம் கொண்ட மிளகாயாக வளரும்.

இதைப் போன்று… “படித்துணர்ந்தவர்கள்” எதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டனரோ அதனின் இயக்கமாக… அதனின் நிலையிலேயே… மற்ற உண்மைகளை அறியாதபடி… எதன் வலிமை பெற்றார்களோ அதன் நிலைகளிலே சென்று அடைகின்றார்.

சைவ சித்தாந்தத்தின் உண்மை இன்று தலை கீழாக மாறிவிட்டது.

காரணம் அரசர்கள் போர் முறை கொண்டு வரப்படும் பொழுது இந்த உண்மையின் இயக்கங்களை அறியாது… காலத்தால் மாற்று அரசர்கள் வரும் பொழுது…
1.அன்று தத்துவஞானிகள் கொடுத்ததைத் தனக்குச் சொந்தம் என்று
2.தனக்குகந்த சட்டங்களாக இயற்றப்பட்டுக் காவியமாகப் படைக்கப்பட்டு
3.அதைத் தன் மக்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது “இதுவே அவர்களுக்குள் கடவுளாகிறது…”

கடவுளுக்கு இன்னென்ன சாங்கியங்களைச் செய்தால் போதும்… அதன் உணர்வின் செயல்கள் இப்படி இருக்கும்…! என்று இவ்வாறு அரசர்களால் உருமாற்றப்பட்டு “அசைவம்…” (என்றால் என்ன…?) என்ற நிலைகளை அறிய முடியாத நிலைகளாகக் காலத்தால் மறைந்து விட்டது.

இப்படி ஒவ்வொரு அரசனும் தான் கண்டறிந்தது மாற்று அரசர்கள் கண்டால் உண்மையின் இயக்கங்கள் அது போய்விடும்… மற்றவர்களுக்கு அது தெரியக் கூடாது என்று மறைத்து விட்டார்கள்.
1.அப்படி மறைக்கப்பட்ட உண்மைகளைத் தான் இன்று இதுவா… அதுவா…? என்று ஊசலாடிக் கொண்டு
2.கடவுளை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்…!

வேதாந்தங்கள் என்பது வேதங்களாக மாற்றப்பட்டு விட்டது தமிழ் மொழியின் இசை (ஒலி) வேதங்களில் உண்டு. சில ஒலிகள் அதனுடைய இசை தான் மாற்றப்பட்டுள்ளது.

தமிழில் இருந்து தான் வேதங்கள் உருவானதா…? வேதத்திலிருந்து தமிழ் உருவானதா…? என்றும் போர் முறை கொண்டு உண்மைகளை அலசி ஆராய்ந்து… தேடிக் கொண்டுள்ளோம்.

இதுதான் உண்மை… அது பொய்…! என்று போர் முறை கொண்டு மொழி அடிப்படையில் ஒருவருக்கொருவர் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளத்தான் முடிகின்றது.

உண்மையின் இயக்கங்களை நாம் அறிய முடியாதபடி
1.குறுகிய கால வாழ்க்கையில் நம்மை அறியாதபடி குறைகளை வளர்த்துக் கொள்வதும்
2.நிறைவு பெறும் நிலைகளை இழந்து நற்செயல்கள் இழக்கப்பட்டு
3.மனிதனல்லாத உருவை உருவாக்கும் உணர்வையே மனிதர்கள் இன்று வளர்த்திடும் நிலையாக வந்து விட்டது.