ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2024

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்

விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். உடல் பற்றுடன் இருப்போம் என்றால் மருத்துவமனைகளில் இன்று பார்க்கலாம்… ஒரு மனிதனுக்குக் கேன்சர் வந்து விட்டால் எத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்…?

நோயைக் கண்டுபிடிப்பதற்காக மனம் உவந்து
1.மூக்கிலும் வாயிலும் மற்ற இடங்களிலும் டியூபுகளைச் சொருகுவதும்
2.தலையோ மற்ற இடங்களில் உள்ள உறுப்புகளை அறுத்துப் பரீட்சிப்பதும்
3.சில நேரங்களில் அந்த உறுப்புகளை அகற்றி மாற்று உறுப்புகளையும் வைத்துச் செயல்படுத்துகின்றார்கள்.
4.எத்தகைய நரகலோகத்தைச் சந்திக்கிறோம் என்று பாருங்கள்.

இதை எல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆனால் ஞானிகள் அன்றே இதைக் காட்டினார்கள். சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று…!

கண்களால் பிறரை உற்றுப் பார்த்து பரிவுடன் அவர்கள் வேதனைகளைக் கேட்டறிந்தாலும்… கண்களால் பார்த்து நுகர்ந்த அவருக்குள் விளைந்த (வேதனை) உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது அது புத்திரனாக… அணுக்களாக இங்கே வந்துவிடுகிறது.

அவன் கஷ்டப்படுகிறான்… கஷ்டப்படுகிறான்… என்று
1.பாசத்தால் நாம் சொன்னால் பாசக் கயிறாக வழி தொடர்ந்து சிந்திக்கும் திறன் அனைத்தும் இழக்கப்பட்டு
2.எமன் எருமை மீது வாகனமாக வருவது போன்று சிந்தனையற்ற நிலைகள் ஆகி
3.தீய வினைகளாக நம் உடலில் அது விளைந்து உறுப்புகள் கெடுகிறது.

அந்த உறுப்புகளைச் சீர்படுத்த நாம் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்று அந்த எமலோகத்தைக் காட்டியிருப்பார்கள்.

அதாவது… நம் எண்ணமே தீமைகளை விளைய வைக்கும் உறைவிடமாக எமலோகமாக மாறி… நல்ல உணர்வுகளை அது எப்படி அழிக்கின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்காகக் காவியமாக எடுத்துரைத்துள்ளார்கள். நாம் எளிதாகப் புரிந்து கொள்வதற்குப் படங்களாகவும் வரைந்து காட்டி உள்ளார்கள்.

எமலோகத்தின் செயல்கள்…
1.எமன் அழைத்துச் சென்ற பின் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு ஆட்டுவதும்
2.மண்டையை ரம்பத்தை வைத்து அறுப்பதும் கை கால்களைத் துண்டிப்பதும்
3.தலைகீழாகத் தொங்க விடுவதும் நெருப்பிலே வைத்து எரிப்பதும் போன்ற எத்தனையோ நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து எத்தனையோ நிலை நமக்குள் விளைந்தது… இந்த உடல் என்ற சொர்க்கலோகத்தில்… எண்ணத்தால் எமலோகத்திற்குள் சிக்கி அறியாமலே நம் உடலுக்குள் எத்தனை அறுவை சிகிச்சைகள் (ண்ஹரக வேதனைப்படும்படியாக) நடக்கிறது…? அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.

விஞ்ஞான அறிவால் கண்கூடாக நம் உடலுக்குள் அனுபவிக்கின்றோம்.

உடல் இந்த சொர்க்கலோகத்தை நாம் மறந்திடலாகாது. அதிலே நாம் எண்ணியது அனைத்தும் இந்திரலோகமாக மாறி உடலாக மாறிக் கொண்டுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

1.மெய் உலகான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நீங்கள் ஒன்றி வேகா நிலை என்ற முழுமை அடைந்திட
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

எல்லோரும் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தியை அவர்களுக்குள் விளைய வைத்து என்று நீ செயல்படுகின்றாயோ
1.அந்த உணர்வுகளால் நீயும் உயர்ந்த நிலை பெறுகின்றாய்
2.அவர்களும் உன்னுடன் ஒன்றி வருகின்றார்கள்.
3.அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் மகிழ்ந்து வாழும் நிலை பெற வேண்டும்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார். அவர் காட்டிய நெறிகளைக் கடைப்பிடித்து… பத்தாவது நிலையான கல்கி என்ற “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்.