ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2024

நமக்குத் தெரியாமலே நம்மை இயக்கும் சில சக்திகள்

 

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைப் படிக்கின்றோம் ஒரு அதிர்ச்சியான செயலை… “ஓடும் ரயிலிலே கொள்ளையடித்தான்…” என்று கேள்விப்படுகிறோம். அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.

அந்தப் பதிவு என்ன செய்கின்றது...?

அடுத்து ஒரு சந்தர்ப்பம் நாம் ரயிலில் பயணம் செய்கிறோம் என்றால்… நாம் பதிவு செய்த்து அதிர்வின் தன்மை ஆன உடனே அச்சுறுத்தும் உணர்வாக வருகிறது.

“கொள்ளையன் இங்கே வந்து விடுவானோ…!” என்ற இந்த உணர்வு அச்சுறுத்தினால்… (கொள்ளையடிப்பவன் மற்ற பெட்டிகளுக்கு அநேகமாகச் செல்லவில்லை என்றாலும்)
1.இங்கிருந்து வெளிப்படும் அச்சுறுத்தும் உணர்வலைகள் படரப்படும் போது
2.கொள்ளை அடிப்பவன் இந்தப் பெட்டியிலேயே வந்து கொள்ளையடிப்பான்… இதைப் பார்க்கலாம்.

இதே போன்று பேருந்துகளில் பயணம் செய்யப்படும் பொழுது “விபத்தில் சிக்கி விடுவோமோ…” என்று அதிர்ச்சி ஆகி அந்தப் பேருந்தின் டிரைவரை எண்ணினால்
1.இந்த உணர்வலைகள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு அவன் வண்டியைத் திருப்பி அங்கே விபத்து ஆகும்.
2.இவன் எண்ணியபடி அந்த வண்டியை அணைத்து… இவன் வண்டிக்குள் இருந்தாலும் இவனை உராய்ந்து அடிபடும் நிலை வரும்.
3.ஆனால் மற்றவர்களுக்கு ஒன்றும் ஆகாது.
4.இவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப டிரைவரையும் இயக்குகின்றது தன்னையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… நம்மை அறியாது இயக்கும் உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

ஒரு கம்ப்யூட்டரில் ரிமோட் செய்து… அதிலே ஆணையிடும் அழுத்தத்திற்கொப்ப இயக்கச் சக்தியாக எப்படிக் கொண்டு வருகின்றார்களோ அது போன்று
1.நமது உயிரும் ஒரு எலக்ட்ரிக்காக இருக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை (அழுத்தத்திற்கொப்ப) அது எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் வழி தான் இந்த உடலையே அது இயக்குகின்றது என்பதை
4.இன்று நாம் விஞ்ஞான அறிவில் இருப்பதால் அந்த வழிப்படி உணர்ந்து கொள்வது மிகவும் நல்லது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? நம்மை அறியாது தவறுகள் எப்படி வருகிறது…? நுகர்ந்த உணர்வு நம்மை எப்படி நோய்க்கு அழைத்துச் செல்கின்றது…? நோயின் தன்மை இந்த உடலை எப்படி நலியச் செய்கின்றது…? என்ற நிலைகளை மெய்ஞானிகள் தெளிவாக்குகின்றார்கள்.

தெளிவாக்கினாலும் அஞ்ஞான வாழ்க்கையே இன்று வாழ்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களும் அருள் ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வை நுகராது அதை வளர்த்திடாது தணியப்படும் போது… அஞ்ஞான வாழ்க்கையே பக்தி மார்க்கத்திலும் வளர்கின்றது.

ஆலயத்திற்குள் சென்றால் அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது நாம் எண்ண வேண்டியது எது…?

தீபத்தால் வெளிச்சத்தைக் காட்டிய பின்…
1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.தொழில் செய்யும் இடங்களில் உள்ளோர் அனவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்… அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது மறைந்திருக்கும் பொருள்கள் தெரிகின்றது. அந்த வெளிச்சத்திலே தெய்வத்தைப் பார்க்கின்றோம். “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்” என்று காட்டப்படுகிறது… இது துவைதம்.

தெய்வச் சிலைகலாக உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாகப் படிக்கும் போது (மேலே சொன்ன மாதிரி) பத்திரிக்கையில் படிக்கும் பொழுது அந்த அசம்பாவிதங்களைக் கண்ட பின்… “உணர்ச்சிகள் எப்படித் தூண்டப்படுகின்றதோ… அதே போல் அருள் உணர்வுகளை நமக்குள் நம்மை அறியாமலே தூண்டச் செய்வதற்கு” அன்றைய ஞானிகள் இவ்வாறு வழி காட்டிச் சென்றார்கள்.

கொள்ளையர்கள் வந்துவிடுவார்களோ என்ற உணர்ச்சியின் தன்மை “நாளை என்ன செய்வது…?” என்ற அச்சுறுத்தும் உணர்வுகளைத் தூண்டுகின்றது. அப்பொழுது நாம் பயந்தே வாழும் நிலை வருகின்றது.

வாகனங்களில் செல்லப்படும் பொழுது இந்த உணர்வுகளே அதிகமாகத் தோன்றி நாம் நுகரும் உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அது வீரிய உணர்வாக உணவாக ஊட்டி… அச்சுறுத்தும் அணுக்களாக நமக்குள் விளைந்து விடுகிறது.

அதனால் இந்த உடலை நலியச் செய்யும் உணர்வுகளாக ஆகி நல்ல உணர்வுகளை நாம் பறிகொடுத்து விடுகின்றோம். அவன் அங்கே பொருளைப் பறிகொடுத்தான்..
1.ஆனால் பத்திரிக்கையைப் படித்த பின் நுகர்ந்த உணர்வோ இங்கே நமக்குள் நோயாகி
2.இந்த உடலையே பறிகொடுக்கும் நிலையாக வந்து விடுகிறது

இதையெல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டி அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் உணர்வின் துணை கொண்டு… பத்திரிக்கையைப் படித்த அடுத்த கணமே அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவாந்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

பின்… நாளை நடப்பதெல்லாம் மகரிஷிகள் காட்டிய வழியில் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணி “அதிர்ச்சியான உணர்வுகள் நமக்குள் புகாதபடி” தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இந்தத் தியானப் பயிற்சியைச் சீராகப் பயன்படுத்தி அருள் வழியில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றித் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றினால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

தீமை என்ற உணர்வுகள் அதிகமாகப் பற்றிவிட்டால் அந்தப் பற்றின் தன்மை கொண்டு மீண்டும் பிறவியின் நிலைக்கே வருகின்றோம். நோயின் உணர்வுகளை நுகர்ந்தால் இந்த மனித உருவை அழிக்கத் தான் அது உதவும்.

ஆகவே…
1.மகரிஷிகளின் ஆற்றலை உங்களில் பெருக்கி… அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை அகற்றி அருள் ஞானத்துடன் நீங்கள் வளர்ந்து
3.வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி…
4.அருள் உணர்வைப் பற்றுடன் பற்ற வேண்டும் என்று உங்களை வேண்டிப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).