ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2024

பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் ஆன்மாக்களையும் நண்பர்கள் உறவினர்கள் ஆன்மாக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் கவர்ந்து அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.
1.காரணம் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால்
2.அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ள முடியும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளி அலைகள் நிலைத்திருக்கும்.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா. கார்த்திகேயா என்றாலே ஒளி… அனைத்தையும் அறிந்து கொண்ட நிலை. பல கோடிச்ச் சரீரங்களில் வந்த தீமைகளை நீக்கி மனித உடல் பெற்றது.

அத்தகைய ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளினை மாற்றி உணர்வினை ஒளியாகப் பெறச் செய்யும் முறைதான் இப்பொழுது துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி.

மூதாதையர்கள் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அவருடைய உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலையாக நிற்கும்.

அவர்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்து விட்டால்
1.அவர்கள் விண் சென்ற உணர்வை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது
2.அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் பதிவான சில தீமையான உணர்வுகளை மாற்றி விடலாம்.

அதாவது… அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட
1.வேதனையோ வெறுப்போ மற்ற நோய்களோ அதிகமாக இருப்பினும்
2.அதன் தொடர் வரிசையில் நமக்குள் வந்திருக்கும் இந்த நோய்களை மாற்றிவிடலாம்.

அல்லது அவர்கள் வாழ்க்கையில் சாப அலைகள் விடப்பட்டிருந்து… அந்த அலைகள் உடலில் இருந்தால் அந்த சாபச் அலைகள் நம்மையும் சாடும். ஆனால் அவர்களை விண் செலுத்தி விட்டால் அதன் உணர்வின் துணை கொண்டு அவர் வழியில் வந்த சாப உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கலாம்.

ஆகவே… யார் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த ஆன்மாக்களை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். விண் செலுத்தி அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அவர் உடலில் உள்ள நோய்களோ மற்றதுகளோ நமக்குள் வளராது தடுக்க முடியும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… எப்படியும் நாம் பிறருடன் பழகத் தான் செய்கின்றோம். அவருடைய உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமலே வளர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் கரைப்பதற்கு… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பௌர்ணமி அன்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்து உடல் பெறற நஞ்சுகளைக் கரைக்கப் பழகிக் கொடுக்கின்றோம்.

அப்படிச் செய்து பழகிவிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் முறைப்படி செய்யப்படும் பொழுது
1.இந்த உடலுக்குப் பின் நாம் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடையலாம்.
2.இல்லையென்றால் மற்றவருடைய பழகிய உணர்வுகளில் புவியின் ஈர்ப்புக்குள் நம்மை அழைத்து வந்துவிடும்

இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்வதற்குப் “பௌர்ணமி தியானத்தைச் சீராக நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்…”