ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2024

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்ட சில நிகழ்வுகள்

பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் கதிரியக்கச் சக்திகளை ஒலிப்பேழைகளிலே விஞ்ஞானிகள் கவர்கின்றார்கள். அதே அலைவரிசையில் அனுப்பி 27 நட்சத்திரங்களின் நிலைகளை
1.இராணுவ ரகசியமாகவும் அந்த நாட்டினுடைய ரகசியமாகவும் வைத்துக் கொண்டுள்ளார்கள் விஞ்ஞான அறிவால்.
2.இதையெல்லாம் பத்திரிக்கை வாயிலாக நீங்கள் காண்பது மிகவும் கடினம்.

ஏற்கனவே இத்தகைய கதிரியக்கச் சக்திகளை நட்சத்திரத்திலிருந்து கவர்ந்து கொண்டுள்ளார்கள் என்று பல முறை சொல்லியும்… அதை ஏற்றுக் கொள்வார்கள் இல்லை.

ரஷ்யாவில் மனிதனின் உணர்வுக்குள் இயந்திரத்தினைப் பதிவு செய்து அந்த உணர்வின் ஓட்டத்தால் மனிதனின் கண்ணின் நிலைகள் கொண்டு விண்ணிலே பறந்து செல்லும் ராக்கெட்டினை அன்று வீழ்த்தினார்கள்.

ஆரம்பத்தில் அமெரிக்கா ராக்கெட்டுகளை விண்ணிலே ஏவும் போது அது மேலே சென்று கீழே இறங்கி வரும் நிலைகளில்
1.உடலில் பதிந்து கொண்ட உணர்வின் துணைகொண்டு மனித உணர்வால் பாய்ச்சப்பட்டு
2.அந்த ராக்கெட்டைச் செயலிழக்கச் செய்தார்கள்…. இவ்வாறு தான் வீழ்ச்சி அடைந்தது

முதலிலே வெற்றிகரமாக ஏவினார்கள்… அதைக் கொண்டாடவும் செய்தார்கள் அதற்கு அடுத்து இரண்டாவது ஏவப்படும் பொழுது அதை வீழ்ச்சி அடையச் செய்தார்கள் அதற்கடுத்து செலுத்தப்பட்டதும் வீழ்ந்தது… வெற்றி பெற முடியவில்லை.

முதலில் வெற்றி பெற்ற இயந்திரம் பழுதடைந்த பின் தான் சிந்திக்கத் அமெரிக்கா தொடங்கினான். அந்த நுண்ணிய அலைகளை… கதிரியக்க சக்தியால் கண்டறிந்த பின் ரஷ்யாவில் அணு உலைகள் வைத்திருக்கும் இடங்களை லேசர் கதிரியக்கங்களைப் பாய்ச்சி… அந்த அணு உலைகளை இவர்கள் தகர்த்தார்கள்.

அது வெடித்தபின் அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கங்கள் பூமிக்குள் பரவி… அதிக நிலநடுக்கங்கள் உருவாகி அந்த நகரமே குலுங்கி கட்டிடங்களும் சிதைவுண்டது… அந்த நாடே மிகவும் அல்லல்பட்டது.

இதைப் போன்று ஒன்றல்ல… இரண்டாவது அணு உலை அங்கே சிதறப்பட்ட பின்பு தான் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஏனென்றால்…
1.“நட்சத்திரப் போர்…” உருவாகி அணு உலைகள் வெடிக்குமேயானால்
2.அந்த கதிரியக்கத் துகள்களால் மொத்த நாடே அழிந்துவிடும் என்ற நிலையில்
3.இவர்களுக்குள் கம்யூனிசமா சோசியலிசமா போர் முறைகள் ஓய்ந்து சமாதான முறைகளுக்கு வந்தார்கள்.

இப்படிப்பட்ட யுத்தங்கள் தன் நாட்டைக் காக்க மதத்தின் அடிப்படையில் இயக்கப்பட்டது.

அதே சமயத்தில் முகமதியர்களும் போர் செய்து உலகம் முழுவதும் மதப்போராகி ஒவ்வொரு நாட்டையும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மக்களை தன் இனத்தில் சேர்த்துக் கொண்டால் கடவுள் உனக்கு எல்லாம் தருவார் என்று உலகம் முழுவதும் பரப்பி இந்த நிலையை உருவாக்கினார்கள்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் “எங்கள் கடவுள் உங்களுக்கு இன்னது செய்வார்…” என்று அவர்களும் இப்படிப் பறைசாற்றினார்கள். யூத மதத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரத்தின் நிலைகள் கொண்டு “கடவுள் உங்களுக்கு இதைச் செய்வார்…” என்று அவர்களும் செயல்படுத்தினார்கள்.

யூத மதத்திலிருந்து வந்ததுதான் முகமது மதமும் கிறிஸ்தவ மதமும் இப்படிப் பிரிக்கப்பட்டு உலகம் முழுவதும் மதப் போராக மாறி இந்தியாவுக்குள்ளும் பரவியது.

முகமதியர்கள் முதலில் இங்கே ஆட்சி செய்ய வந்தார்கள் அது உருவானாலும் அதற்கடுத்து வந்த கிறிஸ்தவ மதம் ரோமானிய மதம் என்று உலகம் முழுவதும் அப்படிப் பரவும் நிலை வந்தது. இஸ்ரேல் நாடும் ரோமானியர்களுக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது.

அரசர்களால் உலகம் முழுவதும் இப்படி ஏற்பட்ட நிலைகள் தான்… மதத்திற்குள் புகுந்த கடவுளும்… எல்லாமே.

அரசர்கள் மதத்தை உருவாக்கி கடவுள் என்று பெயரில் சட்ட நீதிகளையும் ஒழுக்க நெறிகளையும்
1.அந்த நாட்டு அரசனுக்கு ஏற்றவாறு இதைப் பதிவு செய்து அவர்கள் உடல்களிலே பதிவான பின்
2.யார் யாரெல்லாம் இதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கினார்களோ
3.ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.

அதாவது… “ஓ” என்று பிரணவமாக்கி அவர்கள் கூறிய உணர்வின் சத்தை “ம்” என்று உடலாக்கி… இந்த உடலிலிருந்து மீண்டும் நினைவைக் கூட்டும் போது அது இயக்கி… அந்த மதத்தின் அடிப்படையில் அவனைக் காத்திடும் உணர்வு வருகிறது.

அதையே கடவுளாக மதித்துக் கொண்ட பின்…
1.மற்றவர்கள் சொல்வதை எதிர்நிலை கொண்டு மற்ற மதங்களைச் சாடுவதும் தாக்குவதும் அழிப்பதும் தான்
2.அன்றைய அரசர்களால் உருவாக்கப்பட்டது… உலகம் முழுவதும் பரவி வந்தது.

இன்றைய படித்த விஞ்ஞானிகளாக இருந்தாலும் சாஸ்திரங்கள் தெரிந்த சாஸ்திரவாதிகளாக இருந்தாலும் அனைவருக்கும் இது தெரியும் ஆனால் இதனுடைய உண்மைகளை வெளிப்படுத்த முடியவில்லை.

விஞ்ஞான அறிவில் கற்று வளர்ச்சி அடைந்து இருந்தாலும்… மதத்தைச் சார்ந்த நிலையில்
1.தன் மதமே பெரிது என்றும் எங்களுடைய சாஸ்திரங்களே பெரிது என்றும்
2.மதத்தின் அடிப்படையில் தான் இன்று உலகம் முழுவதும் பரவி… அதுவே ஓங்கி வளர்ந்து கொண்டுள்ளது.