ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2024

அறுபது வயதை “முதுமை” என்று ஏன் சொல்கிறோம்…?

நமது உயிர் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை நுகர்ந்து உடல் பெறுகின்றது. அவ்வாறு உடல் பெற்ற நாள் தான் “சிவன்ராத்திரி…” உயிரோ ஈசனாகின்றது… உணர்வு இயக்கும் சக்தியாகின்றது நுகர்ந்த உணர்வு சத்தாக உயிருடன் ஒன்றப்படும்பொழுது உடலாகின்றது… சிவம் ஆகின்றது.

நமது உயிர் வான் வீதியில்…
1.அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் உயிராக உருப்பெற்ற நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்று
2.இந்த ஆறுபது ஆண்டுகளில் நமது உயிர் உருப்பெற்ற நாளாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

பொதுவாக உயிரணுக்கள் வான்வீதியில் உருப் பெற்ற நாளை நினைவுபடுத்தும் நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்பது. உயிரின் இயக்கச் சக்தியை ஈசன் (ஈஸ்வரன்) என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

சூரியனோ… மற்ற தாவர இனங்களின் சத்துக்களை எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

தாவர இனத்தில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் போடும்போது… நிலத்தின் ஈர்ப்புத் தன்மை கொண்டு தன் தாய்ச் செடி உணர்வின் சத்தை நுகர்ந்து அந்த இனத்தின் செடியாக அது உருப்பெறுகின்றது.

ஆனால் உயிரோ… எந்தச் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கியதோ இதற்குப் பெயர் “ஈசன்…” இந்த உணர்வின் சத்து நம் பூமிக்குள் வந்து இந்த உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி உடலாக்கப்படும் பொழுது “சிவம்…”
1.ஈசனான உயிர் இல்லை என்றால் உடலான சிவம் சவம் தான்.
2.ஆகவே “அவனின்றி அணுவும் அசையாது” என்று சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஈஸ்வர ஆண்டு என்று ஆரம்பித்து… இதனுடைய சுழற்சி அறுபது ஆண்டுகள் முடிவடையும் தருணம்… மீண்டும் ஈஸ்வர ஆண்டு என்று வரும்.

இது எல்லாம்… மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் அறுபது ஆண்டு நிறைவடையப்படும் பொழுது அந்த அறுபது ஆண்டுக்குள் பெற்ற சக்திகள் வேறு. அடுத்த அறுபது என்பது வேறு…!

அந்த அறுபதைக் கடந்து செல்லப்படும் பொழுது
1.மறுபடியும் பிரபஞ்சத்தில் சூரியனின் காந்தப் புலனறிவு மற்ற கோள்களின் திசை மாற்றங்கள் வரும்
2.இந்த அறுபது ஆண்டில் மற்ற கோள்கள் திசை மாறும் பொழுது நட்சத்திரங்களின் இயல்புகளும் மாறுகின்றது.

அவ்வாறு மாற்றி வரப்படும் பொழுது அறுபது வருடத்திற்குள் இருந்த நிலை வேறு… அதற்குப்பின் உருமாற்றங்கள் வேறு…!
1.முதுமை அடைகின்றது… உணர்வுகள் சோர்வடைகின்றது.
2.சோர்வின் பால் “மற்ற உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது” உணர்வின் தன்மை உடலைக் குறையச் செய்கின்றது.

அடுத்த அறுபதுக்குள் இந்த உடலில் விளைய வைத்த உணர்வினை இதே உயிர் இந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலாக உருமாற்றி அதனின் செயலாக்கத்திற்குக் கொண்டு வருகிறது.