ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 19, 2024

சாப வினை எப்படி வருகிறது…?

கடந்த காலங்களில் குடும்பத்தில் பற்றும் பாசத்துடன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதில் கொடுக்கல் வாங்கலிலோ… உணவாக உட்கொள்ளும் நிலைகளிலோ… அல்லது விசேஷங்களுக்குச் செல்லும் பொழுதோ அந்தச் சந்தர்ப்பம்… ஒருவர் அதிகமாகச் செலவழித்து ஒருவருக்கு அதைக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பேதங்கள் வருகிறது.

1.அவர் போகும் போது தனக்கு வேண்டியதை மட்டும் சௌகரியமாக எடுத்துக் கொண்டு செல்கின்றார்
2.நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார் என்ற இந்தப் பகைமை உணர்வுகள் விளைந்து விடும்.

பொறுத்திருந்து… அவர் போகும் போது கொடுத்திருக்கலாம் என்றாலும் அது வரை பொறுக்காது கோபம் மேலிட்டு… வெறுப்பு வந்துவிடுகிறது. அந்த வெறுப்பு ஊழ்வினை என்று வித்தாக ஆழமாகப் பதிவாகி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவர்களுக்குள் வெறுப்பு வளரத் தொடங்கி விடுகிறது.

அது பரவி வர வர அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு. வெறுப்பான உணர்வு கொண்டு அடுத்து சுடு சொல்லாகத்தான் வரும். பெரியவர்களாக இருந்தால் மதிக்கச் சொல்லாது.

ஆகவே… மதிப்பற்ற நிலைகள் நம் சொல் வெளிப்பட்டு நம்மைப் பார்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவில் சேர்த்த வெறுப்பான உணர்வுகளும் அவர்கள் சுவாசித்து நம் மீது வெறுப்படையும் தன்மையாக விளைந்து விடுகின்றது.
1.மூதாதையர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பொழுது
2.நாளுக்கு நாள் பகைமைகள் உருவாகி இத்தகைய இடையூறுகள் வந்துவிடுகிறது.

அடுத்து பாகப்பிரிவினை வரும் பொழுது எனக்கு இவ்வளவு தான் கொடுத்தார்கள் அவனுக்கு நிறையக் கொடுத்தார்கள் என்று பாசத்துடன் ஒன்றி வாழ்ந்த நிலைகளில் இதைப் போன்ற நிலைகள் தடைப்படுகிறது.

தடைப்பட்ட பின் ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்தாலும்… மூத்தவராக இருக்கப்படும் பொழுது அவர்கள் பிள்ளைக்குத் தனியாகச் சலுகை செய்கின்றார்கள்… என் பிள்ளைக்கு ஒன்றும் கொடுக்கவில்லை…! என்ற இந்த உணர்வு நஞ்சின் தன்மையாக விளைந்து விளைந்து “நாளடைவில் விஷத்தின் தன்மையாக விளைந்துவிடுகிறது…”

பின் யார் மீது இந்த வெறுப்பு அதிகமாக விளைந்ததோ “அடப்பாவி இப்படிச் செய்கின்றாயே… இப்படிச் செய்கின்றாயே…” என்ற நிலைகள் இந்த உடலில் அதிகமாக விளையப்பட்டு “வெளிப்படும் மூச்சுகள்…” அந்தக் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

ஒருவருக்கொருவர் வெறுப்பானாலும் வெறுப்பற்றவர்களோ…
1.எதற்காக நீங்கள் ஒருவர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றீர்கள் என்ற உணர்வுடன்
2.ஒன்று சேர்ந்து வாழ நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும்
3.பாகப்பிரிவினையால் விளைந்த பேத உணர்வுகள் அங்கேயும் சேர்த்து அறியாதபடி… அவர்களுக்குள்ளும் வெறுப்பின் உணர்வுகளே விளையும்.

எனக்கு இப்படிச் செய்தானே… அவன் குடும்பம் உருப்படியாகுமா…? என்ற இந்த உணர்வுகள் அதிகரித்து விடுகிறது. இது போன்ற சாப உணர்வுகளை வெளியிட்டால்… வெளியிட்ட அந்த அலைகள் அவர்கள் உடலில் மறைந்து “வித்தாக” விளைந்து வரத்தொடங்கும்.

இரண்டு தலைமுறைக்குப் பின் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் கரு உருவாகிக் குழந்தைகள் பிறந்த பின்…
1.அதே சாப அலைகள் தொடரப்பட்டு
2.மூதாதையர்கள் உடலில் விளைந்த உணர்வின் உமிழ் நீர் (அமிலங்கள்) கூடி… அந்த உணர்வின் சத்து வித்தாக மலர்ந்தது
3.இங்கே சொல் வடிவில் இணை பிரியாது வந்து கொண்டே இருக்கும்.
4.சாப அலைகளாக குடும்பங்களில் அது இயக்குவதை இன்றும் பார்க்கலாம்… நம்மை அறியாமலே மறைமுகமாக வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் எத்தனை இன்னல்கள் பட்டோமோ… மனிதனான பின்னும் இப்படிப்பட்ட தீமைகளில் சிக்குண்டு… தீமைகளை அகற்ற முடியாத நிலைகள் தான் நாம் சுழன்று கொண்டுள்ளோம்.

மூதாதையர்கள் குடும்பத்திற்குள் இட்ட சாப அலைகள் பதிந்து அவருக்குள் விளைந்தது அலைகளாகப் பரவி உள்ளது. அதிலே ஒருவருக்கொருவர் தான் எண்ணியதற்குத் தடை வரும் போது பகைமையாகி அதனால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அடுத்தவருக்குப் பல இன்னல்களை ஏற்படுத்தி… அதைக் கண்டு ரசித்து மடிந்தவர்களும் பலர் உண்டு.

வேதனைப்பட்டவர்களைக் கண்டு ரசித்த உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது குடும்ப குடும்பத்தின் சந்ததியினருக்கும் இது வருகின்றது. உடல்களில் இருந்து குல வழியில் இது வருகின்றது.

1.உதாரணமாக ஆஸ்த்மா போன்ற நோய்கள் எல்லாம் மூதாதையர்களால் விளைந்தது தான்
2.ஒருவருக்கொருவர் இன்னல் படும் பொழுது “தான் என்ன செய்வது…?” என்று பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
3.அதே சமயத்தில் வேதனைப்பட்ட உணர்வுகளால் உறுப்புகள் சீராக இயங்காது
4.உமிழ் நீர்கள் சுரக்கப்படும் பொழுது உறைந்து அது நெஞ்சுச் சளியாக உருவாகின்றது.

விஷத்தன்மை கொண்டு அங்கே உருவான அத்தகைய உணர்வுகள் அணுவாக மலர்ந்து வித்தாக உருப் பெற்று வருகின்றது. அதன் வழிகளிலும் குல வழிகளில் பின் தொடர்ந்து வருகின்றது.

தனித்த மனிதர் நம்மிடமிருந்து இப்போது அந்த நோய் வரவில்லை. முந்தி எத்தனையோ நிலைகள் விளைந்தது… குல வழியில் நமக்குள் பின் தொடர்ந்து வருகின்றது.

ஒருவருக்கொருவர் பேசிய அந்த சாப அலைகள் கொடூரத் தன்மை கொண்டது.
1.கொடூரத் தன்மை கொண்டு நமக்கு கிடைக்கும் நல்ல நிலைகளை அது கிடைக்க விடாதபடி தடுத்து
2.இருள் சூழ்ந்த நிலையாக்கி மனிதனுக்குள் எதிர்நிலையாக வருகிறது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் வாழ்க்கையில் இது போன்ற நிலை வருகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!