ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 24, 2020

இயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…!

மனிதனுக்கு மனிதன் இங்கே நாம் நேரடியாகப் பழகி ஒருத்தருக்கொருத்தர் நண்பர்கள் என்று உதவி செய்து கொண்டால் உதவி செய்த உணர்வு இரண்டும் கலந்து வெளி வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கிறது.
 
இது அலைகளாக மாறும்போது… நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும்
1.நண்பன் ஒரு நல்ல காரியம் செய்யும் பொழுது
2.நான் அமெரிக்காவிற்கு வந்ததே அந்த நண்பனின் உதவியால் தான்…! என்று எண்ணும்போது
3.உடனடியாக அங்கே அந்த நண்பனுக்கு விக்கலாகின்றது.
 
அதே சமயத்தில் ஒரு நண்பருடன் சந்தோஷமாக இருந்து பழகி பின்னாடி.. தொழில் விஷயத்தில் ஒருவருக்கு ஒருவர் பகைமையாகி விட்டால் இருவருமே என்ன நினைக்கின்றோம்…?
 
1.இவரால் தான் நஷ்டமானது… இவனெல்லாம் உருப்படுவானா…? என்று
2.இருவருக்குள்ளும் இந்த உணர்வுகள் கூடி.. இரு உடலிலிருந்தும் இப்படிப் பரவச் செய்துவிடுகின்றோம்.
 
அடுத்து இவர் அமெரிக்காவிற்குச் சென்றாலும் இன்னொரு நண்பர் இங்கே வருகின்றார். நான் அமெரிக்காவில் உன் நண்பரைப் பார்த்தேன். அந்த நண்பர் உயர்ந்த நிலை பெற்று நல்ல நிலையில் இருக்கின்றார் என்று சொல்கிறார்.
 
சொன்னவுடன் பாவிப்பயல்… எனக்கு மோசம் செய்தவன் அங்கே போய் விட்டானா…! அவன் எல்லம் உருப்படமாட்டான்…! என்று அந்த உணர்வை வெளிப்படுத்தினால்
1.அது அங்கே சென்று அவனுக்குள் ஊடுருவுகிறது.
2.ஏற்கனவே பதிவானதன் துணை கொண்டு இந்த வீரிய உணர்வுகள் அவரின் உடலில் பாயத் தொடங்குகின்றது.
 
அந்தச் சமயத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால்… இந்த உணர்வுகள் அந்த நேரத்தில் இது பாய்ந்தால்… உறுப்புகள் சீராக இயங்காதபடி புரை ஓடும். புரை ஓடும்போது நுரையீரல் பாகம் ஒரு சோற்றுப் பருக்கை இழுத்து விட்டால் போதும். திக்கு முக்காடச் செய்துவிடும்.
 
உதாரணமாக வாய்க்காலில் ஒரு பக்கம் தண்ணீர் போகின்றது என்றால் அதில் ஒரு பக்கம் சிறு ஓட்டை விழுந்தால் போதும்…!
1.அதன் வழி தண்ணீர் சென்றால்…
2.தண்ணீர் வரும் நிலைகள் இருந்து காற்றின் நிலைகள் வரும்.
3.ஜிர்ர்..ர்ர்ர்… என்று இழுக்கும்…. இந்த இடத்தில் சுழிக்காற்று வரும்.
4.இனம் புரியாத நிலையில் அந்த பக்கம் ஒரு ஓசையும் வரும்.
 
அதைப்போலத்தான் இங்கே இந்த உணர்ச்சியின் தன்மை வரப்படும்போது குறுக்காட்டி நுரையீரலில் அந்த உணர்வின் வேகம் கூடிய பின் நாம் உணவாக உட்கொள்ளும் நிலையை இடைமறித்து வேகமாக இழுத்துவிடும்.
 
நுரையீரலில் உணவுப் பொருள் சென்றுவிட்டால் நாளடைவில் நாற்றமாகி அதிலே புழுக்கள் உருவாகி நுரையீரல் பின்னமாகிக் கடும் நோயாகி… மரணமடையவும் நேரும்.
 
அதே போல் ஒரு காரையே ஓட்டிச் சென்று கொண்டிருந்தாலும் கண் கொண்டு முன்னாடி உற்றுப் பார்த்து… உணர்வினை நுகர்ந்தறிந்து இந்த வாகனத்தைச் சீராக ஓட்டினாலும்..
1.ஓட்டிக் கொண்டிருக்கும் போது இங்கே நண்பர் வந்து
2.உன் நண்பர் அமெரிக்காவில் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால்
3.அவன் எங்கே சென்றாலும் தொலைந்து போவான்… அடிபட்டுச் சாவான்…! என்று எதாவது உணர்வினைச் சொன்னால் போதும்.
 
அந்த உணர்வின் தன்மை இங்கே ஊடுருவி… அவன் உணர்வை நுகரக்கூடிய தன்மை வந்து…
1.அதே சமயத்தில் இந்த இரண்டு எண்ணங்கள் கலந்து உயிரிலே பட்ட பின் 
2.வேகமான உணர்வுகள் வந்து சிந்திக்கும் தன்மை இழந்து
3.வாகனத்தைச் சீர்படுத்த முடியாத நிலையில் எங்கேயாவது ஆக்சிடெண்டாகும்.
 
எதிரே ஒரு மனிதர் வந்தாலும் பிரேக்கை அணைக்கும் தன்மை இழந்துவிடும். மோதியபின் தான் தனக்குள் தெரிய வரும். இப்படி எல்லாம் மனிதனை அந்தச் சந்தர்ப்பங்கள் இயக்கிடும் நிலை வருகின்றது.
 
உதாரணமாக கர்ப்பத்தில் குழந்தை இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் யாராவது சாபமிட்டு இருந்தால் அதன் வழியில் அந்தக் குடும்பத்தின் சார்புடையோர் வேதனைப்பட்டால் போதும்.
 
இப்படிச் செய்தார்களே… அவர்கள் குடும்பம் உருப்படுமா…! என்று இந்த உணர்வின் சாப அலைகள் கர்ப்பிணித் தாய் நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய இந்தச் சிசுவிற்கும் பாதிப்பாகிறது.
 
அந்த நேரத்தில் வீட்டிற்குள்ளும் ஒரு நெடி கலந்த உணர்வுகள் வரும்.
 
ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பியோ சகோதரர்களோ வீட்டிற்குள் பாகம் பிரிப்பதில் தவறான முறையில் பிரிக்கப்பட்டால் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அது வீரியம் கொண்டதாக மாறுகிறது.
 
கண்ணின் நினைவலைகளை இங்கே ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் போது அந்த எல்லையில் வரும்போது இந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது. அதே எண்ணத்தின் உணர்வுகளை இங்கே பரப்புகின்றது.
 
1.ஒரு இயந்திரத்தைக் காட்டிலும் கண்ணின் நிலைகள் வெகு தூரம் ஊடுருவி
2.அந்த உணர்வின் தன்மை அறியும் தன்மையும் அதை இயக்கும் தன்மையும் வருகின்றது.
 
இதை போன்று இந்த இயற்கையின் நியதிகள் இருப்பதை குருநாதர் ஒவ்வொரு செயலாக்கங்களிலும் எமக்குக் காட்டுகின்றார்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெற்றவன் என்பதனையும் உணர்த்தி அகஸ்தியனின் ஆற்றலை நாம் அனைவரும் பருக வேண்டும் என்று தெளிவாக்கினார் குருநாதர்.