ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2020

மனிதனான பின் தனக்குள் வரும் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் பயிற்சியே பிரம்ம சூத்திரம்

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசம் செய்கின்றோம். பெரும்பகுதியான படித்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள்...? யாம் சொல்வதை சரியா தப்பா...! சரியா தப்பா...? சரியா தப்பா...? என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். 
 
ஆனால் அந்த அளவுக்குப் படிப்பில்லாதவர்கள்
1.யாம் என்ன சொன்னாலும் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
2.குருநாதர் சொன்னார் அல்லவா... இதை நாம் செய்து பார்ப்போமே...! என்று
3.அந்த உணர்வுகள் தூண்டும்போது அவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள். 
 
படித்தவர்கள் என்ன செய்கின்றார்கள்...?
 
நான் மகாபாரதத்தைப் படித்தேன் கந்த புராணத்தை படித்தேன்... பிரம்ம சூத்திரத்தையும் படித்தேன். ஆனால் அதையெல்லாம் இங்கே சாமி (ஞானகுரு) சொல்லவில்லை.
 
ஆக அவர்கள் படித்ததைப் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் இங்கே யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகள்
1.அந்த அருள் ஞானிகள் பெற்றதைச் சொல்லும்போது இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
2.காலி செய்து கொண்டே இருப்பார்கள்...
3.தான் பதிவும் ஆக்க முடியாது. அதைப் பெறவும் முடியாது.
 
அவர்கள் படித்த பிரம்ம சூத்திரத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.
 
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.மனிதனான பின் இந்த தீமைகளை அகற்றுவது எப்படி...?
2.தீமையை அகற்றியவன் யார்...?
3.தீமையை அகற்றிய உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது...? என்று
4.இந்த மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு.
 
மனுஷாள்...! என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்தச் சாஸ்திரத்தை தெளிவாக்கும் நிலைகள் இல்லை.
 
மனு நீதி சாஸ்திரத்தை நான் படித்து இருக்கின்றேன்... இவர் சொல்வது எங்கே இருக்கின்றது...? காணவில்லையே...! இந்த நிலைகள் தான் படித்தவர்களுக்கு எண்ணமாக வரும்.
 
மகாபாரதத்தைப் படிக்கும்போது படித்த நிலைகள்... அந்தப் படித்தது மட்டும் தான் இருக்கும். குருநாதர் சொல்வதை அதிலே காணோமே...! என்பார்கள்.
 
உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசியைச் சாப்பிடுகின்றார்கள். அதனின் ருசி வேறாக இருக்கின்றது. இங்கே நாம் பொன்னி அரிசியைப் போட்டுச் சாப்பிட்டோம் என்றால் அந்த ருசி வேறு இருக்கும்.
1.அந்த ருசியை இதிலே காணோமே... என்பது போன்று
2.அந்தப் படித்த உணர்வுகள் எதுவோ அதே தான் வரும்.
 
நம்மிடம் மொக்கை அரிசியைச் சாப்பிடச் சொன்னால் பார்த்தவுடனே பொன்னி அரிசியின் ருசி அதில் வரவில்லையே என்று தான் சொல்வோம்.
 
ஏனென்றால் அந்தந்த உணர்வின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே போல் தான் உணர்வினை இயக்கும். ஆக மதங்கள் ஆனாலும் இனங்கள் ஆனாலும்
1.எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ
2.அதன் சுவை தான் அவர்களுக்கு ரசிப்பாக இருக்கும்.
 
நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நாம் பெற வேண்டும். இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்று இங்கே யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவாக்கிக் கொண்டால் அதன் சாரமாக நமக்குள் அருள் ஞானியரின் உணர்வைப் பெருக்கி நமக்குள் அறியாது வரும் தீமைகளை மாற்ற முடியும்.
 
படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டுமென்றால்...
1.படித்தது பாதைகளை அறிவதற்கு உதவும்.
2.ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு அருள் ஞானியின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.
3.ஞானத்தை வைத்துத்தான் படித்த கல்வியின் நிலைகள் ஞானத்தில் கொண்டு செல்ல முடியும்.
 
கல்வி உடலின் உணர்வுக்குதான் உதவுமே தவிர... உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.
 
நமக்கு நற்பாதையை காட்டுவதற்குத்தான் கல்வி. அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி
1.அந்த அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால்
2.இன்றைய விஞ்ஞான உணர்வின் தீமையான விளைவுகளை மாற்றியமைக்கலாம்.