ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2020

ஆத்மா பிரிந்து விட்டது என்றால் “ஆத்மா என்பது என்ன…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்திட வேண்டும் என்று சொல்கிறோம். அந்த ஆத்மா என்பது எங்குள்ளது…?
 
இறந்து விட்டால் ஆத்மா பிரிந்து விட்டது…! என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் “உயிரணுதான்” முதலில் பிரிகின்றது.
 
1.அவ்வுயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
2.அவ்வுடலிலிருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான் அவ்வுயிரணு
3.அவ்வுடலின்  மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.
 
ஆத்மா என்பது என்ன…? அவ்வுயிரணு சேமித்த அமில சக்தி தான் ஆத்மா…!
 
அவ்வுடலை எந்த நிலைப்படுத்துகின்றோமோ அதன் பிறகுதான் அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா இந்த உயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.
 
எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல் நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக் கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.
 
மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் பல நாட்களாகின்றன.
 
1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித்தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும்… ஆவி ஆத்மாவிற்கும்.. ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?
4.ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இதுதான்.
 
ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்ட) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும். அதனால் தான் அதில் சிக்கிவிடக் கூடாது என்று சொல்கிறோம்.
 
நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
 
1.அனைத்திற்குமே ஆசை வேண்டும்
2.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
3.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்
4.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்
5.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.
 
பேராசைக்குத் தான் நாம் இடம் தரலாகாது…!
 
அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…?  இல்லையே…! 

ஆக… உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.