ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2019

உலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்...” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்...?

கேள்வி:-
நீங்கள் கூறிய பதிவுகளில் உலக மாற்றங்கள் குறித்துச் சொல்லியுள்ளீர்கள். மற்றும் நாஸ்டர்டாமஸ் (NOSTRADAMUS) அவர்கள் சொன்ன பதிவுகளை எல்லாம் படித்தேன்.

அதில் தென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் இனிமேல் நடக்கும் விஞ்ஞான மாற்றத்திலிருந்து உலகைக் காத்திடும் நிலையாக வரப் போகிறது என்றும் நம் குருவும் இதைத் தான் குறிப்பிட்டார் என்றால் இது எப்போது நடக்கும்...?

பதில்:-
நாஸ்டர்டாமஸ் 17ஆம் நூற்றாண்டிலும் நம் குருநாதர் 20 ஆம் நூற்றாண்டிலும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அது உண்மைதான்...!

ஆனால் அது ஒரே ஒரு குழந்தை என்று அர்த்தம் அல்ல...!

ஏற்கனவே உலகைக் காக்கக்கூடிய அத்தகைய உயிராத்மாக்களின் எண்ணிக்கை
1.ஏற்கனவே 2010 ஆம் ஆண்டிலிருந்தே பெருகத் தொடங்கி விட்டது.
2.இதனுடைய வெளிப்பாடுகளை 2020 ஆண்டில் முழுவதும் பார்க்க முடியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைச் சீராகக் கடைப்பிடிப்போரும்
2.அவருடைய உணர்வுகளைப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உள்ள பூர்வமாக ஏற்றுக் கொண்டு...
3.உலகைக் காக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும்
4.எல்லோரையும் மொத்தமாகச் சேர்த்துத் தான் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
5.நமக்கெல்லாம் அந்தத் தகுதி உண்டா...?
6.இல்லையே..! என்று (யாருமே) கருத வேண்டியதில்லை.
7.உலகைக் காக்கும் அந்தச் சக்தியில் நீங்களும் கூட ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள்.

அதே சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானகுரு மூலமாக வெளிப்படுத்திய ஞான உபதேசக் கருத்துக்களைப் படித்து... அதைத் தனக்குள் பதிய வைத்து... முழுமையாக அதன்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு “இனி செயல்படுவோர் அனைவருமே அந்தத் தகுதி உடையவர்களாகின்றார்கள்...!”

தனித்த சக்திக்கு வலிமை இல்லை. ஒன்று சேர்ந்தால் தான் வலிமை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் எல்லாம் சேர்ந்து தான் உலகைக் காக்கப் போகின்றோம்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வுகளை
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உள்ளபூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே
3.உலகைக் காக்கும் சக்தியாக உருவாகின்றார்கள்.

(இந்தக் கருத்தைக் ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இரண்டு வருடத்திற்குள் அத்தகைய காக்கும் சக்தியைக் காணலாம்.)