ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2019

மனித வாழ்க்கைப் பயணத்தின் திசை எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்...?


ஆறாவது அறிவின் தன்மையில் மனிதன் என்ற நிலைகளில் நமக்குள் தீமையின் நிலைகள் பொங்கிடாது அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து மகாமகமாக எல்லா இடத்திலும் பிணிகளை நீக்கும் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்வதே “மகாமகம்...!” என்பது.

மாசி மாதம் தான் மகாமகத்தின் ஆற்றல் மிக்க சக்தியினை சாதாரண மக்களும் பெறும் வண்ணம் அருள் ஞானிகள் இதைக் கூட்டினார்.

மாசியில் தான் “உத்தராயணம்...” என்ற நிலைகளும் வருகின்றது. அதாவது
1.இந்த மனித வாழ்க்கையில் உடல் பெறும் நிலையை மாற்றிவிட்டு - திசையை மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று
3.அடிக்கடி நாம் தியானிப்பது தான் உண்மையான தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்...! என்று உங்களால் எத்தனை தடவை எண்ண முடியுமோ எண்ணுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்ட பின்
1.எங்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்,
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெறவேண்டும்,
3.எங்கள் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்,
3.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும்,
4.எங்கள் தொழில்கள் அனைத்தும் சீராக வேண்டும்,
5.எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும்,
6.எங்களுக்குள் ஒற்றுமை ஓங்கி வளரவேண்டும்,
7.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அமைதி பெறவேண்டும் என்று
8.இந்த உணர்வினை நீங்கள் எடுத்து செல்லுங்கள்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்தால் மகிழ்ச்சி பெறும் நிலையாக “உத்தராணயம்...!” உங்கள் திசை மாறி அந்த மெய் ஞானி உணர்வுடன் செல்லத் தொடங்கும்.

நாம் இது வரையில் அறியாத நிலைகள் கொண்டு வளர்ந்து வந்திருந்தாலும்
1.இனிமேல் நமக்குள் தீமைகள் வளராது
2.மீண்டும் உடலுடன் உடல் பற்று கொண்டு புவியின் ஈர்ப்புக்குள் வராது
3.புவியைக் கடந்து சென்று உத்தராணயம் - ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக நாம் அந்த மகரிஷியுடன் ஒன்றி வாழும் நிலையாக
4.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

முழுமையின் நிலையாக உத்தராணயம் என்ற நிலையை நாம் பெறுவோம் என்று இதை எல்லோரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வயலைப் பன்படுத்தி நல்ல வித்தினை விதைத்து நீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை இட்டு வந்தால் அதனுடைய ராசிகளை நாம் பார்க்க முடிகின்றது.

மனிதனின் வாழ்கையில் நாம் கேட்டறிந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் பொறாமை கோபம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் தீய வினைகளாக நம்மை அறியாமலே வந்து சேர்ந்து விடுகிறது.

அந்தத் தீயவினைகளை (களைகளை) அகற்றிட ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பல முறை செலுத்துங்கள்.

அதிகாலையில் கண விழித்ததும் (சூரிய உதயம் ஆவதற்கு முன்) உங்களால் முடிந்த மட்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

இது உங்களுக்குள் கூடக் கூட உங்கள் வாழ்கையில் வந்த தீமைகளை அது அகற்றி விட்டு திசை மாறி ஞானியின் உணர்வு கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் செல்லும்.

இவ்வாறு நீங்கள் ஜெபித்து வந்தீர்கள் என்றால்
1.உங்களை அறியாது சேர்ந்த நோய்கள் போகும்,
2.உங்கள் அறியாது வந்த தீயவினைகள் மறையும்
3.உங்களை அறியாது உட்புகுந்த சாப வினைகள் நீங்கும்
4.உங்கள் அறியாது வந்த பூர்வ புண்ணியத்தால் அமைந்த தீமைகளும் அகலும். 

மெய் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக என்றுமே நாம் முழுமையின் நிலை அடைய முடியும்.