ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2025

கண்கள் தோன்றிய விதம்

கண்கள் தோன்றிய விதம்


உடல் என்பது திரேதா தான். திரேதா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்.
1.வாசுதேவன் - சுவாசித்ததை உருவாக்கக் கூடியவன்.
2.தேவகி - பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள்.
 
சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வு மோதினால் அதிர்ச்சி என்ற நிலை வருகின்றது. அதிர்ச்சி என்ற நிலை வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
 
எந்தச் செடியின் சத்தைது (கண்ணில்லாத புழு) எடுத்து வளர்த்ததோ அதன் உணர்வின் தன்மை இக்கப்படுகின்றது. விஷமான செடியின் சத்தை நுர்ந்த பின் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
 
ஆனால் மோதிய பின் அதன் வழியாகத் தெரியப்படுத்துகின்றது. எதை…?
 
1.”அறிய வேண்டும் என்ற உணர்வுகள்…”
2.துவாரகா இந்த உடலுக்குள் அதைச் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.ஒளிக்கற்றைள் சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி அணுக்களாகி அது அறியச் செய்யக்கூடிய கற்களாக மாறுகின்றது.
4.உறையும் தன்மை வரும் பொழுது கருவிழி என்ற உணர்வுகள் ணுத்  தன்மை அடைந்து
5.நரம்பு மண்டலங்கள்ழுப்பதை ஒளிப் படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.
 
இந்த ஒளிப் பிளம்புகள் கரு விழியிலே மறைந்து விட்டால் ஒளிப் படலங்கள் அதாவது கண் பார்வை தெரியாது.
 
கண்ணில்லாத புழு “பார்க்க வேண்டும்…” என்று தான் எண்ணிய உணர்வு கொண்டு கற்களாக கருவிழியாக கண்கள் எப்படி உருவானது…?
1.சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர் அதனால் தான் வாசுதேவன்.
2.தேவகி… பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது (கண்களாக) வருகின்றது.
 
இந்த மனித உடலுக்குள் நாளை என்ன செய்வோம் என்று கற்பனை செய்கின்றோம்…? அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். வடிவமைத்தது தனக்குள் பதிவாகின்றது.
 
துவாரகா புறத்தால் கண்களானாலும்
1.அகத்திற்குள் முதலிலே அதைப் படமாக்குகிறது.
2.படமாக்கிய பின் புறத்திலே எழுதுகின்றோம். உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எழுதவே முடியாது.
 
ணர்வின் தன்மை பதிவாகும் பொழுது பதிவின் நினைவுகளை நினைவாக்குகின்றோம். துவாரகா இந்த உடலுக்குள் சிந்தனைகள் எடுத்துத் தான் மனிதன் தன் செயல்களைச் செயல்படுத்த வேண்டும்.
 
இந்த வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு தான் இதையெல்லாம் உங்களுக்கு உணர்த்துவது.
 
பதிவைத் தான் மீண்டும் எழுத்தில் கொண்டு வருகின்றோம். புறத்தால் நாம் எழுதினாலும் அதில் குறைகள் வந்தால் திருத்துகின்றோம்.
 
இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது... கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)
 
ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்... பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.
 
தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.
 
அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.
 
அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.
 
ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.
 
1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.
 
இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
 
ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

November 29, 2025

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்


இன்று சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களை வைத்து வெகு தொலைவிலிருந்து ஒளிபரப்பு செய்வதையும் வீட்டிலே டிவி மூலம் நேரடியாக மிகவும் தெளிவாக தை நாம் காணும்படி செய்கிறார்கள்.
 
அதைப் போல விண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் மகரிஷிகள் ஞானிகள் உணர்வுகளை அந்த விண்ணினுடைய ஆற்றல் வெளியிலே படர்ந்தாலும் அங்கிருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர முடியும். நீங்கள் அதைப் பெறுவதற்குத் தான் உணர்த்துகின்றோம்.
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை எந்த அளவுக்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கேட்கின்றீர்களோ
2.அதை உணரச் செய்யும் கண் ஈர்ப்பு நிலைகள் உங்கள் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்கிறது
3.அதன் மூலம் கவர முடியும்.
 
அதாவது… மெய் ஞானிகள் ஆற்றலைக் கவரும் விதமாக… “உங்கள் கண்களை மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுவதற்குத் தான்…” இதை உபதேசிப்பது.
 
எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் போது
1.எவ்வாறு அவர் சொல்லும் உணர்வைக் கூர்ந்து கவனித்தேன்
2.என் நினைவை அவர்பால் செலுத்தி அந்த ஆற்றலை நான் நுகர்ந்தேன்
3.அதனின் நிலைகள் கொண்டு கண் புலனறிவு ஆற்றல் மிக்கதாக மாறியது
4.அவர் உபதேசித்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் பதிவானது
 
அதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுதெல்லம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு ஏற்படுத்தினார்.
 
நீங்களும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம். உபதேசிக்கும் போது யாரெல்லாம் நினைவு கொண்டு கூர்ந்து கேட்கின்றீர்களோ
1.அந்தச் சக்திகள் உங்கள் கண்களுக்கு உரமாக ஏறி
2.ஆற்றல்மிக்க சக்தியாக ஆண்டென்னா வர் கூடுகின்றது.
 
சாதாரண ஆண்டனாவை டிவியில் இணைக்கப்படும் பொழுது அருகில் இருக்கக்கூடிய ஸ்டேஷன்களை அது கவர்ந்து ஒளிபரப்பு செய்கின்றது. அதே சமயம் சக்தி வாய்ந்த ஆண்டனாவைப் பொருத்தப்படும் பொழுது வெகு தொலைவில் இருக்கக்கூடியதைக் கவர்ந்து டிவியில்தைக் காட்டுகின்றது.
 
இராக்கெட்டுகளை ஏவிப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய கோள்களைப் பற்றி அறிந்தாலும்… அந்த உணர்வின் தன்மையைக் கீழே தரையில் வைத்திருக்கக் கூடிய ஆண்டென்னா வர்ந்து தெளிவாகக் காட்டுகின்றது.
 
அதே போல் மகரிஷிகள் காட்டிய ணர்வினை “இந்த உபதேசத்தின் மூலம் கேட்டறியப்படும் பொழுது…”
1.விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிவரும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து எடுக்கும் ஆற்றலை
3.உங்கள் கண்களுக்கு ஆற்றல்மிக்க ஈர்ப்பு சக்தியாக அதைப் பெற முடியும்.
 
இந்த உபதேசத்தினை எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.
 
அதைப் பெருக்கி நம் எண்ணத்தை விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் சக்திகளை…
1.நாம் எண்ணும் பொழுதெல்லாம் சுவாசித்து உடலுக்குள் வினையாகச் சேர்த்து
2.நம்மை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்து விடலாம்.

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!


ஜாதகம் ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா…? என்று பார்த்து நல்ல நேரம் பார்த்துத் தான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
 
ஆனாலும்
1.திருமணம் முடிந்து வந்தவுடன் இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில் இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன.
2.இதனால் கணவன் மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன.
 
இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும் வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள் எல்லோரையும்தான் சாரும்.
 
ஏனென்றால் பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன.
 
நாம் இவ்வேதனையின் உணர்வுகளைக் கேட்டறிய நேரும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. பதிவின் நிலை கொண்டு நாம் நுகர்கின்றோம்.
 
நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றி விடுகின்றோம்…அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.
 
கணவனும் மனைவியும் வெறுப்பு என்ற நிலைகளோ வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி
1.அதிகாலையில் துருவ தியானத்தில் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.என் கணவர் / மனைவி பெற வேண்டும்... எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
3.எங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.
 
இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.
 
நமது வாழ்க்கையில் இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும். வெப்பம் காந்தம் விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து ஒரு அணுத் தன்மை அடைகின்றது.
1.காந்தம் ஆதிலஷ்மி  எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும்
2.வெப்பம் ஆதிபராசக்தி  அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும்
3.விஷம் ஆதிசக்தி  எதனிலும் மோதலாகி அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும்
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
 
அதாவது பெண்பால் ஆகித்தான் ஆண்பால் ஆகின்றது. பெண்பால் என்னும் பொழுது அது தாயாகின்றது. பெண்பால் தான் தாய் என்னும் நிலையில் தன் குழந்தைகளையோ மற்ற நிலைகளையோ சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது.
 
1.ஆகவே நாம் பெண்களைத்  தாயாகவும் நம்மை ஒரு சேயாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.இது போன்று பெண்கள் ஒவ்வொருவரும் தான் ஒரு தாயாகவும் தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும்.
 
தைத்தான் இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நம்முடைய எண்ணங்களை (கணவன் மனைவி) ஒன்று சேர்த்து இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான் நாம் விண் செல்ல வேண்டும்.
 
நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால் நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.
 
நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்வுகள் படரும்.
 
ஒரு இல்லத்தில் பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது… 
 
அந்த இல்லத்தில் உள்ள பெண்களில் யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே குடும்பமே நரக லோகமாக மாறிவிடும். ஆகவே நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.
 
1.இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ
2.பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ
3.இதனின் உணர்வுகள் கொண்டு அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும் இருளை அகற்றும் சக்தியும்
4.அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும்
5.அன்பான உணர்வுகள் நமக்குள் பெருகவும் மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்ச்சிகள் வளரவும்
6.பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு.
 
பெண்களை மதித்து நடங்கள்ஆதிசக்தி அதுதான்…!
 
இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுது தான் உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது.
 
எந்தக் குணத்தின் தன்மை உடலானதோ அதனின் உணர்ச்சியாக ஞானமான சரஸ்வதி நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
 
ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் வெறுப்படைந்து விட்டால் அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
 
வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால் அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள் மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு குறை கூறும் நிலையில் அங்கே குறையின் உணர்வுகளே வந்து விடுகின்றது.
 
முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும்,  இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்கின்றோம்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.  
 
முதுமை நிலையில் இருக்கும் நாம் தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம் காலை துருவ தியானத்தில்
1.தன் மகன் மருமகளுடன் இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இதனின் உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
 
ஏனெனில் ஒரு குடும்பத்தில் பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும் அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.
 
ஆகவே அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும் வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வுகளையும் நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும். 
 
இது போன்று செய்து வரும் பொழுது
1.நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி தோஷங்கள் ஆகிவிட்டது என்றாலும் சரி
2.அல்லது நம்மை றியாமலேயே சாப வினைகள் வந்தாலும் சரி
3.அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு அந்தத் தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.
 
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.
 
ண்மையான யாகம் எது…?
 
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெற வேண்டும்என்ற உணர்வை
1.உயிரான நெருப்பினுள் போட்டு இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால்
2.வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும் எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.
 
கணவன் மனைவிக்கிடையே எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும் மனஸ்தாபங்களும் வரும் போது பெண்கள் நரக வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள் இங்கே புவியில் படர்கின்றது.
 
இது போன்ற வேதனையின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறியும் பொழுது நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
 
நாம் இனியாவதுநமது குடும்பம் நமது குழந்தைகள் நமது ஊர் நமது நாடு என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெற வேண்டும். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும்.
 
நாம் ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என் கணவர் பெற வேண்டும் ங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற வேண்டும் ங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெற வேண்டும் ங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெற வேண்டும். இந்த உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நாம் எல்லோரும் பரப்புவோம்.
 
இதனின் தொடர் கொண்டு நமது குடும்பத்திலும் நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் இருளை அகற்றும் வல்லமையும் மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும். 
 
குடும்பமும் ஊரும் நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து அவர்களையும் பண்படச் செய்து மகிழ்ச்சியுடன் வாழச் செய்கின்றது.
 
மனிதர்களான நாம்
1.கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று ணர்ந்து
2.தனுசுகோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு
3.தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி இனி பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.
 
இதனின் உணர்வு கொண்டு மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று இருளை வென்று மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றுப் பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்றுப் பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

வீட்டைச் சொர்க்கமாக்கும் வழி

வீட்டைச் சொர்க்கமாக்கும் வழி


மிருகங்களில் ஆண் பெண் என்ற நிலை இருக்கப்படும் பொழுது ஆணுக்கு ஆணே போர் செய்கின்றன… பெண் மிருகங்களைப் போரில் இணைப்பதில்லை. 
 
மிருகங்களில் ஆணுக்கு ஆண் தான் மோதுகின்றதே தவிர பெண்பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால் மனிதர்களாக இருக்கும் நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இருக்கின்றது. 
1.பெண்களைத் துன்புறுத்தும் நிலையில் வேதனை என்ற உணர்வுகள் கலந்தால்
2.ஆண் பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும் வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது…” என்பதை உணர்வதில்லை.
 
காரணம் பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை ஆண்பால் நுகர நேர்ந்தால் வெறுப்பாகவோ வேதனையாகவோ இருந்து அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது.
 
பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது கேட்போர் மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும் கூட அது பதிவாகின்றது.
 
ஆகவே பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழக வேண்டும்.
 
ஏனென்றால் பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ
1.ந்த உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது வேதனையின் உணர்வுகள் புவியின் காற்றில் பரவுகின்றது.
2.பெண்களைத்  துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால் ஆண்களும் நரக வேதனை என்ற நிலைகளை அனுபவிக்க நேரும். 
 
ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் திருமணமானபின் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம் காற்று மண்டலத்தில் படர்கின்றன.
 
சோகமும், வேதனையும் கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும் பொழுது நம் பூமியின் நிலைகளில் மாற்றங்களே ஏற்படும்… இங்கு மட்டுமல்லஉலகெங்கிலுமே பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது.
 
மற்ற உயிரினங்களில் பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில் அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.
 
மனிதனானபின் பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும் பொழுது இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட வேதனையும் சோகமும் உருவாக்கப்படுகின்றது.
 
ஆகையால் இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற் இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில் இதனைச் சாப அலைகள் என்று சொல்வார்கள்…
 
துன்புறுத்தும் உணர்வுகளும் சரி வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில் மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே வருகின்றது.
 
இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து
1.பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி  இருளை அகற்றி
3.நம்மையும் நம் நாட்டு மக்களையும் இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச்  செய்வோம்.
 
ஆண் பெண் என்ற நிலைகளில் பெண்களும் ஆண்களை மதித்து அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால் ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர்குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற நிலை உருவாகின்றது.
 
மகரிஷிகள் என்பவர்கள் தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும் கணவனும் மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து உணர்வின் சக்தியினை வளர்த்தனர்.  அதன் தொடர் கொண்டே நமக்கு காவியத் தொகுப்புகள் கிடைத்தன.
 
ஆனால் பிற்காலத்தவர்களோ இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலன்களுக்கேற்ப மாற்றியமைத்து உண்மைகளை மறைத்து விட்டனர்.
 
இதன் நிலையாக இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்குப் பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது.
 
தான் சுகமாக வாழ வேண்டும் என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து விட்ட்து. தீமைகளை அடக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில் நாட்டாசையும் உடலாசையும் பொன்னாசையும் பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச்  செய்யும் நிலைகளையே வளர்த்துள்ளனர்.
 
மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள் புவியில்  துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.
 
இந்தச் சந்ததிக்குப்பின் பெரும் புயல்களைப் போன்று சூறாவளிகளைப் போன்று பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி பெரும் பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும் மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும் வந்து கொண்டே இருக்கின்றது.
 
இது போன்ற தீமைகளிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். 
3.ஒவ்வொரு நிமிடமும் பெண்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நாமும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் உயர்வு தரும்.
 
ஏனென்றால் குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது. இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில், இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்துச் சிவலிங்கம் அமைத்து பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது.
 
ஏனென்றால் இராமன் என்ற எண்ணங்கள் இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.
 
ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்  என்ற உணர்வை நமக்குள் கலந்து விட்டால் கடைசி என்ற நிலைகள் வரும்தனுசுகோடி
 
நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனுசாக நமக்குள் உட்செலுத்தித் தீமைளை அகற்றி
2.உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றி… இனி பிறவி இல்லை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்ல வேண்டும்.