ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2024

தீமையை நீக்கும் ஆறாவது அறிவே நமக்குப் பாதுகாப்புக் கவசம்

தீமையை நீக்கும் ஆறாவது அறிவே நமக்குப் பாதுகாப்புக் கவசம்

 

இயற்கையின் செயலாக்கத்தைத் தன்னில் தான் கண்டுணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக “அகஸ்தியன்… துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக” ஒளியின் சுடராக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அதனின்று வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதன் வழிகளில்
1.இந்த வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நிலைகளை வென்று
2.இருள் சூழா நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு
3.இன்றும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலைகள் பெற்று
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் கண்டறிந்த உணர்வின் சக்திகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை எடுத்துக் கொண்டால்… பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் மற்ற கோள்கள் தனக்குள் கவர்ந்தாலும்… விஷம் கொண்ட கோள்கள் எத்தனை எத்தனையோ… விஷங்களை உருவாக்கும் கோள்கள் எத்தனையோ…!

இவை அனைத்தும் உமிழ்த்தி வரும் நிலைகளைச் சூரியன் வடிகட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக வாழ்கின்றது.

அதிலே உயிரணுவாகத் தோன்றியவன் பிற தீமையிலிருந்து விடுபட்டு… விடுபட்டு… விடுபட்டு… மனிதனாக உருவாக்கப்பட்டு மனிதனில் ஆறாவது அறிவாக வளர்ச்சி அடைந்து வந்தது.

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி நீக்கி…
2.தீமையற்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்து இந்த உடலை விட்டுச் சென்ற பின்
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்ட துருவ மகரிஷியின் நிலைகளை நாமும் அடைய முடியும்.

இது எல்லாம் ஞானிகள் நமக்குக் காட்டியது. அதை அனைவரும் நாம் பெறுதல் வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்கள் அனைத்தும் தெய்வங்களே. மனிதனாக உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் பெரும் சக்தி கொண்ட தெய்வங்களாக உங்களுக்குள் இருக்கின்றது.

உங்களை எவ்வாறு காக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அது உங்களுக்குள் கடவுளாக நின்று உயிர் உருவாக்கி உள்ளது… மனித உடலை…!

1.மனிதனின் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாக இணைத்துத் தீமைகள் அகற்றிடும் ஆறாவது அறிவாக “முருகு…!”
2.மாற்றியமைக்கும் சக்தியாக இருக்கிறது… என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது சாஸ்திரங்களில்.

அதன் வழி நாம் தெளிவாகச் செய்ய வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எவ்வாறு பெற முடியும்…? என்ற தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள் நம் ஞானியர்கள்.

ஆதியிலே முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்தான்… தன் உடலில் அதைச் சிருஷ்டித்தான்… வளர்த்தான்… துருவ மகரிஷி ஆனான்… வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரப்பிக் கொண்டுள்ளது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவரொருவர் தங்கள் உடலுக்குள் அதிகமாக நுகருகின்றனரோ
2.அவன் வழியிலே அங்கு அழைத்துச் செல்கின்றது… ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினை பிரித்து விட்டு ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது. இதைப் போன்று தான் உயிரின் தன்மை சூரியனாக உள்ளது.

1.அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு சூரியனுக்குப் பாதுகாப்பாக நஞ்சினை நீக்கிடும் நிலைகள் பெற்று
2.உணர்வினை ஒளியாக மாற்றிடும் நிலைகளை அது (சூரியன்) எப்படிப் பெறுகின்றதோ
3.அது போல் நாம் எத்தகைய தீமைகளைக் கண்டறிந்தாலும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பெற்று
4.தீமைகளை அகற்றித் தூய்மை பெறும் சக்தி பெற்றது தான் மனிதனுடைய ஆறாவது அறிவு.

அதாவது… தீமைகளை பிரிக்கும் எண்ணங்களை நாம் நுகர்ந்து தீமைகளை அகற்றிடும் செயலாக வருகின்றது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிர் மனிதனாக உருவாக்கி விட்டால் முழு முதல் கடவுள். ஓம் என்ற பிரணவத்திற்கு உரியவன் என்றும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அருள் உணர்வின் துணை கொண்டு நம் ஆன்மாவில் படும் தீமைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே விநாயகர் தத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்தார்கள் ஞானிகள்.

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்... அந்தாதியும்

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்... அந்தாதியும்

 

அபிராமி அந்தாதி பாட்டு பாட வேண்டும் பாடலின் கருத்து புரிந்து இசையோடு பாடிடுவாய் கருத்துடனே பாட்டிசைப்பாய்.

“இடைச்சக்கரத்தினுள்ளே நான் இருப்பேன்…!” என்ற பாட்டைக் கேட்டிருப்பாய். பாட்டைப் பாடு… பிறகு சொல்கின்றேன். ஜெப நிலையில் ஜெபித்ததெல்லாம் உன் சக்கரத்தில் உள்ளது.

பெரும் கோயில்களில் எல்லாம் பார்…
1.எல்லாக் கோவில்களிலும் உலோகத்தினாலான சக்கரம் உண்டு.
2.அச்சக்கரம் கடவுளின் சிலைக்குப் பின் புறமாவது முன்புறமாவது இருக்கும்… அல்லது கடவுளின் பாதத்தில் இருக்கும்.

தெய்வம் என்பது நீங்கள் நினைக்கும் கல் சிலையைத் தான். சிலையின் கல் உருவத்தைப் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டேன்.

சிலையின் பாதத்தின் கீழே உள்ள சக்கரத்தில் சித்தனால் ஜெபித்த ஜெபமெல்லாம் அந்த உலோகத் தகடான சக்கரத்தில் பதிந்துள்ளது. அந்நிலையில் அதைப் பாதத்தில் வைத்து விட்டுப் பிறகு தான் சிலையை வைப்பார்கள்.

தெய்வத்தின் எதிரில் நின்று
1.நீ ஜெபிக்கும் ஒவ்வொரு நிலையும் அந்த உலோகத்தில் பதிகின்றது (கல்லான சிலையில் ஒன்றும் இல்லை).
2.நீ ஒலிக்கும் ஒலியெல்லாம் சக்கரத்தில் பதிகின்றது.
3.ஒலிக்கும் குரல் சக்கரத்திலே பதியும் பொழுது அந்தச் சித்தனால் ஒலித்த ஒலியும் உன் ஒலியும் கலக்கின்றது
4.அப்படிக் கலக்கின்ற போது அந்தச் சித்தனே வெளிவந்து உன்னுள்ளே புகுகின்றான்.

பழனியில் உள்ள முருகர் சிலையே உலோகம் தான். சிறு தகட்டில் ஜெபித்த ஜெபமே அவன்...! அவ்வுருவம் முழுவதும் போகனால் ஜெபித்த நிலை.

அந்த முருகனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சக்தி வந்தது…? என்கின்றாய். அந்த முருகனின் உள் அர்த்தம் புரிந்ததா…?

நீங்கள் சக்கரம் வைத்து பூஜை செய்வதன் பொருள்… நீ இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு எந்தச் சொல் சொல்கிறாயோ எந்த நிலையில் மூச்சை இழுக்கின்றாயோ “அச்சொல் எல்லாம்… மூச்செல்லாம் என்னுள் வந்து ஐக்கியம் ஆகிறது…”

அதற்காகத்தான் அந்தாதியைப் படிக்கச் சொன்னது. படித்துச் சொன்னால் அதை நான் ஏற்பேன்.
1.நான் இயற்றிய அந்தாதியை நீ படித்தால் என் மனம் குளிர்ந்திடும்.
2.என் மனம் குளிர்ந்த நிலையில் உனக்கு அருள்வேன் எல்லாமே…!

சக்கரம் வைத்தால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் எந்தச் சுத்தத்தை நான் கேட்டேன்…? “மனச் சுத்தம் இருந்தால்” என்னுள்ளே வந்திடலாம்.

போகன் நிலையைப் பார்த்தாயா…? சக்கரத்தின் தன்மையே முருகராக வடிவெடுத்துள்ளார். வடிவெடுத்த நிலையிலேயே காலமெல்லாம் அருள்கின்றார்.

நீ “முருகா…” என்று ஒலிக்கும் உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது. உன் மனதிலிருந்து செல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் பதிவு செய்து… உனக்கு அவர் அருளும் சொல் பலவாக வருகின்றது.

1.அந்த முருகன் சிலை இந்த உலகையே ஆட்டுவிக்கும் சிலை.
2.இவ்வுலகில் எந்த இடத்திலும் அச்சத்தின் சொரூபம் இல்லை.
3.அச்சக்தியின் ரூபம் எல்லாவற்றையும் உணர்ந்து அங்கு செல்பவனும் யாரும் இல்லை.

இவ்வளவு காலமும் நீங்கள் பழனிக்கு சென்றீர்கள்…! இந்த நிலை புரிந்ததா…?
1.குறைகளுடன் கோவிலுக்குச் செல்லாதீர்கள்
2.மன நிறைவுடன் சென்று உன் மனதை அவனிடம் தா… அவன் அருள்வான் எல்லாமே…!

அந்த முருகனின் சிலையின் தத்துவத்தைப் புரிந்து சிலர் தன் தொழிலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள்… தொழிலுக்கு மட்டும் தான் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அதை பெற்ற மனிதனுக்கும் அந்தத் தத்துவம் தெரியாது. நல் உணர்வாக அவன் பயன்படுத்தி இருந்தால் அவன் நிலையும் உயர்ந்திருக்கும்.

முதலில் அவன் நிலை நன்றாகத் தான் தெரிந்திருக்கும்… பிறகு அவன் நிலை என்ன என்று யாருக்காவது தெரியுமா…? முருகர் சிலையில் உள்ள தத்துவமே சாமி (ஞானகுரு) எழுதியுள்ள சக்கரத்தில் உள்ளது… அச்சிலையில்.

ஐவர் மலையில் உள்ள நிலைக்கும்… உன் ஜெப நிலைக்கும்… “உன் வீட்டில் உள்ள சக்கரத்திற்கும்” உள்ள தொடர்பு தெரிந்ததா…?
1.சக்கரத்திற்கு எதிரில் நீ அமர்ந்து என்ன ஜெபம் ஜெபிக்கின்றாயோ
2.அந்த ஜெபத்தின் அருளை நீ பெறுவாய்…! என்ற பொருளும் இதுவே.

ஐவர் மலையில் உள்ள நல்ல நிலையைப் பெற்றிட உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள். சக்கரத்தின் முன் உணவு படைக்கச் சொன்னதன் நிலையில் நீ ஜெபிக்கும் பொழுது சக்கரத்திலிருந்து சித்தர் வெளிப்படுகின்றார்.

அதற்காகத்தான் ஆகாரம்…! ஆகாரம் எடுத்து அவர் புசித்துச் செல்வதில்லை ஆகாரத்தின் சுவையை அவர் எடுத்து மறு சுவையை உனக்கருள்வார்.

கடவுள் என்ன கேட்டாரா…? என்று சொல்ளும் வீண் வாக்குவாதம் எல்லாம் நமக்கு வேண்டாம். நீ வைக்கும் ஒரு துளி பாலையும் அவர் ஏற்கின்றார்.

ஏன் சக்கரத்தில் தான் கடவுள் வருவாரா…? படத்திலும் வேறு இடத்திலும் வரமாட்டாரா…! என்று நினைக்கலாம்.

முதலிலேயே உங்களுக்கு எல்லா நிலையும் புரிந்து இருக்கும்
1.கடவுள் என்பவர் எங்கே எப்படி இருக்கின்றார்…? எந்த நிலையில் உள்ளார்…? என்னும் நிலை எல்லாம் பல தடவை சொல்லிவிட்டேன்.
2.எல்லா இடத்திலும் இருக்கும் கடவுளை ஒருநிலைப்படுத்தவே இச்சக்கரம்.
3.கடவுளுக்கு அல்ல அந்த நிலை.
4.உன் மனதை ஒருநிலைப்படுத்தத்தான் சக்கரம்.

பாட்டை பாடச் சொன்ன உண்மையும் இப்போது புரிந்ததா…?

அபிராமி அந்தாதி பாடும் பொழுது அவருடைய சந்தோஷம் நிலைகொள்ளாமல் இருக்கின்றது சந்தோஷ நிலை பெற்றிடவே உங்களை எல்லாம் பாடச் சொல்வது… புரிந்து பாடுவாயாக…!

ஒலியை ஒளியாக்கு...! இன்றல்ல நாளை அல்ல என்றாவது ஒருநாள் பழனிக்குச் சென்றால் காலை உதய பூஜைக்குச் சென்று அமர்ந்து நீ ஜெபித்தால்… அந்த நிலையில் உனக்கு ஐவர் மலையின் விளக்கங்களை உன் உதயத்திற்குத் தருகின்றேன்.

அதிலிருந்து எல்லாம் உனக்கு தெரியும்… அவசரம் வேண்டாம் பெரும் பதட்டம் வேண்டாம்…! உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பதின் ரகசியம் எல்லாம் இதுதான்.

சக்கரத்தின் தன்மையைச் சொல்வதும் இதற்காகத் தான்… முருகரைப் பற்றி விளக்கங்கள் சொன்னதும் இதற்காகத் தான்… விளக்கம் மட்டுமல்ல ரகசியமும் தான்.

முருகன் சிலையில் உள்ள தன்மை…. உண்மை தன்மை எல்லாம் புரிந்து விட்டதா…?

காட்சி:- முருகா முருகா சத்தம் கேட்கிறது… இங்கும் உள்ளேன் அங்கும் உள்ளேன் எங்கும் உள்ளேன் பாட்டு கைதட்டியபடி…! உட்கார்ந்து அந்த நோட்டை (குருநாதர் சொல்வதை எழுதிக் கொண்டிருக்கும்) எடுத்து படித்துக் கொண்டிருத்தல்.

உன் எழுத்தே உனக்குப் புரியவில்லை… உன் தலையெழுத்தை எழுதியவனைக் கேட்கின்றாயோ…? உன் நிலையை மாற்றிடவே இந்தப் பாடங்கள்.

1.நாளை முதல் இன்னும் துரிதமாகச் சொல்வேன்... என்னுடன் ஓடி வர நீயும் முயற்சி செய்.
2.முடியாது என்ற நிலை உனக்கு வேண்டாம் “முடித்திடுவேன்” என்று சொல்லைப் பகர்ந்திடப்பா.

என் தலையிலும் குட்டி விட்டார் என்று எண்ணாதே “உன்னுள்ளே நான் இருக்க உனக்கு ஏன் பயம்…?”

எழுதுவதற்கு மட்டு-ம் இந்தப் பாடம் அல்ல உன் நிலையைப் புரிந்து கொள்ளத்தான் இந்தப் பாடம்.

June 29, 2024

நம் குழந்தைகளைப் பற்றி அதிகமாக எண்ணுகிறோம்… தாய் தந்தை முன்னோரை அவ்வாறு எண்ணுகிறோமா…?

நம் குழந்தைகளைப் பற்றி அதிகமாக எண்ணுகிறோம்… தாய் தந்தை முன்னோரை அவ்வாறு எண்ணுகிறோமா…?

 

இன்று நாம் காணுகின்றோம்… கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகிறார்கள்…? எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று…!

ஆகவே நம் தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமை எது…?

1.என் தாய் தந்தையர் என்னைக் காத்திட என்னை வளர்த்திட
2.எத்தனை வேதனைகள் அனுபவித்தார்களோ அவை அனைத்தும் நீங்கிட வேண்டும்
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையை பெற வேண்டும்.
4.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைந்து விட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் அன்னை தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும்
6.”என்னை வளர்த்த தாய் தந்தையர் மகிழ்ந்திட” நாங்கள் பார்க்க வேண்டும்
7.அந்தப் பேரானந்தப் ப்ரு நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று இதை நாம் வினையாகச் சேர்க்க வேண்டும்.

இப்படித்தான் தாய் தந்தையரை வணங்கும்படி சொன்னார்கள் ஞானிகள்… நாம் அப்படி நினைக்கின்றோமா…?

என் தாய் என்னை எப்பொழுது பார்த்தாலும் சும்மா திட்டிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள்
1.தாயை கடவுளாக மதிக்க சொல்கின்றீர்களே…
2.அவர்களுக்காக என்னை வேண்டச் சொல்கின்றீர்களா…? என்பார்கள்…!

ஆனால் ஞானிகள் காட்டியது என்ன…?

தாய் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
2.இருள் நீக்கிப் பொருள் காணும் திறன் என் சிசு பெற வேண்டும்
3.இந்த உலகையே காத்திடும் உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று
4.உயர்ந்த ஞானத்தை அந்த கருவிலே வளரும் குழந்தைக்கு வினையாகச் சேர்க்க வேண்டும்

உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று கருவுற்ற அந்தத் தாய் எண்ணும் பொழுது இந்த உணர்வு கருவிலேயே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஆனால் இன்று நடப்பது என்ன…?

ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதையோ சிலர் வேதனைப்படுவதையோ “ஐயோ… இப்படி நடக்கிறதே…” என்று கர்ப்பமுற்றிருக்கும் நுகர்ந்து விட்டால் குழந்தைக்கு இது தான் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

பத்திரிகையில் பார்த்தால்… உலகம் கெட்டு விட்டது கொலை செய்தான்… கொள்ளை அடித்தான்… திருடினான்… என்று அதிகமாகச் செய்திகளைப் போட்டிருக்கின்றார்கள்.

ஐய்யய்யோ… இப்படியெல்லாம் உலகில் நடக்கிறதே…! இந்த உணர்வை தாய் நுகர்ந்தால் கருவிலே பதிந்து விடுகின்றது. காணாததற்கு டிவி எல்லாம் இன்று போட்டு வைத்திருக்கின்றோம்.

அசுரத்தனமான எத்தனையோ உணர்வுகளை அங்கே காட்டுகின்றார்கள் இரக்கமற்றுக் கொல்வதையும் ஒருவருக்கொருவர் தாக்குவதையும் காட்டுகிறார்கள்… இத்தகைய படங்களை ரசித்துப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகப் பதிவாகி விடுகின்றது.
1.இத்தகைய உணர்வு கொண்ட குழந்தைகள் பிறந்த பின் மற்றவர்களை “டமார்… டமார்” என்று தாக்கும் நிலைக்குத் தான் வரும்.
2.குழந்தைப் பருவத்தில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது.
3.டி,வி.யில் படத்தைப் பார்த்தது அங்கே காட்டும் தந்திரங்கள் அனைத்தும் இந்தக் குழந்தை செய்யத் தொடங்கிவிடுகிறது.

இந்த நிலைதான் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் ஒரு குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
7.என்னை பார்ப்போருக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியின் தன்மை பெற வேண்டும் என்று
8.இந்த உணர்வுகளை வினையாகச் சேர்க்கச் சொன்னார்கள்… அதையே கணங்களுக்கு அதிபதியாக்கச் சொன்னார்கள்.

இதுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழி…!

அன்னை தந்தையை மனிதனாக உருவாக்கிக் கொடுத்தது யார்...? நம்முடைய மூதாதையர்கள்…! அவர்களைக் குலதெய்வங்களாக கருதும்படி சொன்னார்கள் ஞானிகள்.

அந்தக் குல வழியில் தான் நம் தாய் தந்தையர் மனிதனாகப் பிறந்தார்கள் அவர்கள் வழி தான் நம்மையும் அவர்கள் மனிதனாக உருவாக்கினார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன…?

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அவ்வாறு உந்தி தள்ளிய பின்
1.உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் அங்கே கரைய வேண்டும்.
2.ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றும் அழியா ஒளியின் சரீரம் பெற்று என்றுமே ஒளியாக வாழ்ந்திட வேண்டும் என்று
3.எந்தக் குல வழியில் நாம் மனிதனாக உருப்பெற்றோமோ…
4.அகன்று சென்ற உயிரான்மாமக்களை மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் குடும்பத்தைச் சார்ந்தோர் விண்ணிலே செலுத்தினால்
5.பிறவி இல்லா நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளி சரீரமாக நிலைத்து அந்த பேரானந்த பெருநிலை அடைகிறார்கள்.

அவர்கள் அங்கே முன் சென்றால் அதன் வலுக் கொண்டு நாம் பின் செல்ல முடியும். இதன் வழி தான் நல்ல வினைகளை நமக்குள் உருவாக்க வேண்டும் என்று விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டுகின்றது.

ஆகவே மெய் உணர்வுடன் ஒன்றி இருளைப் போக்கி பொருள் காணும் உணர்வுடன் ஒன்றி இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளைப் போக்குவோம். மனித வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் திறன் பெறுவோம்.
1.பேரானந்த பேரின்ப வாழ்வாக
2.இந்த வாழ்க்கையிலேயே நாம் வாழ்ந்து காட்டுவோம் என்று அதைச் செயல்படுத்துவோம்.

ஒலி - ஒளி

ஒலி - ஒளி

 

“ஒளியைப் பற்றி சொல்கின்றேன்” என்று சொன்னேன்.
1.இவ்வுலகின் தன்மையிலேயே கலந்து இருப்பதும் ஒலி தான்
2.நீ பேசுவதும் ஒலி தான்
3.உன்னுள் இருந்து வரும் மூச்சும் ஒலி தான்
4.சிறு அசைவும் ஒலி தான்
5.பெரும் மின்னலும் ஒலி தான்
6.மழைத்துளியிலும் ஒலி உள்ளது.
7.மலர் மொக்கு விரியும் பொழுதும் ஒலி உள்ளது.

உலகம் ஒலியுடனே உருளுகின்றது ஒளியுடன் மட்டும் உலகம் இல்லை… ஒலியுடனும் கலந்து இருக்கின்றது. சிறு எறும்பின் வார்த்தையிலும் ஒலி உள்ளது… நம் உலகச் சுழற்சியிலும் ஒலி உள்ளது.

ஒலி அழிவதில்லை… காலமுடன் கலக்கின்றது.
1.உடல்கள் அழிகிறது… ஆனால் நாம் விட்ட மூச்சும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது.
2.ஆத்மாவானது மறு உடல் பெறுகின்றது… ஆனால் “ஒலி” அவன் எடுக்கும் எந்த ஜென்மத்திலும் அழிவது இல்லை… மாறுவதும் இல்லை.

அழிவதும் இல்லை மாறுவதுமில்லை என்றேன் அல்லவா. அப்போது இந்த ஒலியெல்லாம் என்னவாயிற்று…? என்று நினைக்கின்றீர்கள். இவ்வுலகம் தன்னைத்தானே சுற்றுகிறது என்கின்றீர்கள்…! அது சுற்றுவதற்குச் சக்தி எதிலிருந்து வந்தது தெரியுமா…?

இந்த ஒலியின் தன்மை எல்லாம் ஒன்று சேர்ந்து… காற்றுடனே கலந்து உலகைச் சுற்றிவிடும் நீ விட்ட நல் மூச்சும்.

நல் மூச்சு…! என்பதன் பொருள்… நல்லவர் உள்ள நாட்டில் எல்லாம் மழை பெய்கிறது என்று சொல்லும் பழக்கத்தில் இல்லையா…!

நல்லுணர்வு உள்ள வீட்டில் இலட்சுமி களை உள்ளது என்கிறோம். தன் உணர்வை மறந்து விட்ட நிலையில் உள்ள வீட்டில் எல்லாம் நாதியற்ற நிலைதானப்பா. அந்த வீட்டைப் பார்த்தவுடன் மூதேவி குடி இருக்கின்றாள் என்பதும் இது தான்.

இலட்சுமியும் பிறக்கவில்லை… மூதேவியும் பிறக்கவில்லை… ஒலியில் தான் எல்லாம் உள்ளதப்பா…!

ஒளியைப் பற்றி நினைத்து வந்தால் ஒலியின் பாடம் என்பது தான் முதல் பாடம். எல்லாம் முதல் பாடம் என்கின்றீர்கள் இரண்டாம் பாடம் இல்லையா…?
1.எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டுமப்பா
2.முதலாவதாகவே இருக்கட்டும்… முடிவு நிலை வேண்டாம்
3.எல்லாத் தன்மையுமே முதல்… முதல் தன்மை தான்.

குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிலையும் முதல் தான் குழந்தைக்கு. என்றும் முதலாகவே இருந்திடும் நிலையிலேயே பாடங்கள். முதல் பாடம்… முதல் பாடம்…! என்பதன் பொருள் இதுவே தான்.

மூல முதல்வர் என்று சொல்கின்றோம் அது போல மூல இரண்டாமவர் என்று சொல்கின்றோமா…? “எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டும்…”

ஒலியின் தன்மையை உணர்ந்திடுவாய். ஒலிக்கும் இசையில் உணர்ந்திடுவாய். ஒளியை அமைப்பது இந்த ஒலி தான். ஒளிமயமான எதிர்காலம் என்று சொல்கின்றோம். ஒளிமயமான எதிர்காலம் ஒலியில் இருந்து தான் வருகின்றது.

ஒலிக்கும் ஒலியெல்லாம் எதிலிருந்து என்கின்றாய்…? ஒளியின் தன்மை தானே புரிந்திடும். இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா.

நீ ஜெபிக்கும் ஜெபமும் என்னிடம் தான்… நீ துவேஷித்த சொல்லும் என்னிடம் தான். உன் ஜெபம் மட்டும் தான் என்னிடம் அடையும்… துவேஷம் எங்கு செல்கிறது என்று நினைக்கின்றாய்…?

ஜெபம் துவேஷம் காற்றில் தான் கலக்கின்றது புரிந்ததா…? ஒளியின் தன்மை சொன்னேன்… ஒளியின் தன்மை புரிந்ததா…? ஒலியில் தான் ஒளியின் தன்மை இருக்கின்றது.

இதைப் புரிந்து கொண்டால் ஒலியின் தன்மை புரியும். ஒளி எங்கிருந்து வருகின்றது…? ஒலியிலிருந்து தான் ஒளி உள்ளது.

1.சுவாச நிலை என்பதும் இது தான்
2.சுவாச நிலை ஒன்றுபட்டால் ஜெப நிலை கூடிவிடும்
3.ஜெப நிலை கூடிவிட்டால் ஒளியின் தன்மை தெரியும் என்கிறோம்.

சுவாச நிலை என்னும் பொழுதே ஒலியாக ஆகிறது. அந்த ஒலி தான் ஒளியப்பா. விளக்கில் தான் ஒளியுள்ளது. விடியும் விடிவில் தான் ஒளி உள்ளது. சந்திரனும் சூரியனும் தான் ஒளி தருகின்றது.

நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒலி எல்லாம் ஒளி என்கிறார்கள். அந்த ஒலி ஒளி அல்ல. ஒலிதானப்பா ஒளியே. நம்முடைய சுவாசத்தில் உள்ள ஒலி நல் ஒலியாக உள்ள நேரத்தில் தான் நல்ல பூவும் பூக்கும் நல்ல கனியும் கனியும்.

என் தாயார்… என் தாயாரின் தாயார் சமைத்த ருசி… இப்பொழுது இல்லை என்கிறாய்.
1.காலநிலை மாற மாற மன நிலையும் மாறிவிட்டது.
2.மனிதனும் மூச்சுக் காற்றும் மாறிவிட்டது.
3.அந்நிலையில் இருந்து வரும் தன்மையில் இருந்து தான் விளையும் பயிரின் ருசி எல்லாம்.

தர்மம் நியாயம் எங்கு உள்ளது…? அன்றுள்ள நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

பிறகு எப்படி இருக்கும் நிலை எல்லாம்…? “சுவாச நிலையை மாற்றிக்கொள்” என்பதும் இது தானே. சுவாச நிலையைப் பற்றிச் சாமி விடிய விடியச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டீரா…? இப்பொழுது புரிகின்றதா ஒலியின் தன்மையும் ஒளியின் தன்மையும்.

உன்னுள்ளே ஒளி பிறந்திட “ஒலியை முதலில் கற்றிடு…” குழந்தைக்கும் புரியும்படி இந்தப் பாட நிலை உள்ளது.

ஒளியின் தன்மைக்குப் புதுப் பாடம் வேண்டுமா…? ஒளியைப் பற்றி இன்னும் கேட்டால் நான் ஒலியைப் பற்றி தான் மீண்டும் சொல்வேன்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பெரும் மேகங்கள் வந்தால் மறைந்துவிடும். மேகத்தின் தன்மையே மின்னல் வந்தால் மறைத்திடும்.

அது போல
1.நல் உணர்வை எடுத்து நல் மூச்சு விட்டிடுவாய்.
2.நல் மூச்சு விட்டால் ஆயிரம் நஞ்சின் தன்மை இருந்தாலும் “ஒருவரின் நல் மூச்சு அதை மாற்றிவிடும்…”

வைரத்தின் தன்மை வார்த்தையில் வேண்டுமென்றேன் அல்லவா வைரத்தின் தன்மை எல்லாம் அதன் ஜொலிப்பில் தான் உள்ளது அதற்குள்ள மதிப்பை பார்த்தாயா…?

அது போலத் தான் எல்லாமே. நல்லுணவை நான் சமைத்தேன். உனக்குள்ளே ஊட்டி விட்டேன் இந்த நிலையை மாற்றி விடாமல் ஊக்கமுடன் இருந்திடுவாயா…? புது பானையில் விறகு வைத்துச் சமையல் செய்யும் காட்சி…!

1.நான் (ஈஸ்வரபட்டர்) இங்கும் உள்ளேன்… அங்கும் உள்ளேன்…
2.எங்கும் உள்ளேன்… எல்லாமில் எல்லாமாக உள்ளேன்.

June 28, 2024

நாம் பழக வேண்டிய நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடர்

நாம் பழக வேண்டிய நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடர்

 

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு...
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது...!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்... அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்...
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே... உருவை மாற்றி... “உருச்சிதைந்து வாழ்கின்றான்....!”

நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும்

நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும்

 

அகஸ்தியன் தன்னுடைய கூர்மையான எண்ண வலு கொண்டு விண்ணுலகை உற்றுப் பார்த்து அதிலிருந்து வரும் பேராற்றல்களை எடுத்துத் தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிர்களாக மாற்றிக் கொண்டான்.
1.அதைத்தான் குருநாதர் எனக்குள்ளும் (ஞானகுரு) பதிவு செய்தார்...
2.எடுத்து அதை வளர்க்கும்படியும் செய்தார்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் நீ இதைப் பெற்றால் உனக்குள் அந்த அகஸ்தியனின் ஆற்றல்கள் வளரும் என்றார்.

இதையே மற்ற மக்கள் மத்தியில் நீ பதிவு செய்யப்படும் பொழுது அவர்களும் அதே எண்ணம் கொண்டு எடுத்தால் அவர்களாலும் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு கூட்டமைப்பின் நிலைகளை நீ உருவாக்க வேண்டும்... என்றார்.

1.எனது வலிமை கொண்டு... பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டுதான்
2.எனக்குள் பெற்ற சக்தியை... உனக்குள் கொடுத்து... அதை எடுக்கச் செய்கின்றேன்
3.ஆனாலும் நீ ஒருவனே இதனுடைய பலனைப் பெற முடிகின்றது...!

ஆனால் பலரும் இந்தப் பலனைப் பெற வேண்டுமென்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்...? என்று எனக்கு உபதேசித்து அருளினார்.

நீ கண்ட அந்த ஞான வித்தை ஒவ்வொரு உடல்களிலும் விதைக்கப்படும் பொழுது அது பதிந்து அந்த அருள் உணர்வுகள் அங்கே பெருகி விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி செய்ய வேண்டும் என்றார்.

1.அவர்களுக்குள் அந்த வளர்ச்சி பெற வேண்டுமென்று
2.நீ எடுத்துக் கொண்ட சக்தியால் நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நீ தியானிக்கின்றாய்... உனக்குள் விளைய வைத்தாய்...! ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அவ்வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்ற நிலையை என்னைத் தவம் இருக்கும்படி செய்கின்றார் குருநாதர்.

அவர் சொன்ன வழிப்படித் தான் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு) நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்று...!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன். அதே எண்ணத்தை நீங்களும் எண்ணி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் எளிதில் பெற முடியும்.

1.ஏனென்றால் எனது வேலை கடவுளை நான் எங்கும் தேடவில்லை…!
2.உங்கள் உயிரைத்தான் குருநாதர் கடவுளாக வணங்கும்படி சொன்னார்.
3.அவன் அமைத்த கோட்டை தான் உங்கள் உடல் என்று சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் இதன் உணர்வைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கி உள்ளது உயிர். அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து
1.இந்த மனிதனை உருவாக்கும் உணர்வுகள் அனைத்தும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று தான் நான் எண்ணுகின்றேன்.

உலக வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்தத் தீமைகளின் நிலையை நீக்குவதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

June 27, 2024

உனக்குள்ளே… “நான் வந்து அமரும் நிலை பெற வேண்டுமப்பா…!”

உனக்குள்ளே… “நான் வந்து அமரும் நிலை பெற வேண்டுமப்பா…!”

 

நம் காலம் கலியுகம்…! அங்கு சொல்வது விஞ்ஞான காலம். அவன் விஞ்ஞானம் எல்லாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு…?

விஞ்ஞானத்தில் விளையாடுபவன் சித்தனாக இருந்தான். சித்தனே தான் விஞ்ஞானி. எஞ்ஞானத்தையும் வெல்பவன் விஞ்ஞானத்தை வெல்ல மாட்டானா…?

இந்நிலையில் நீ இருந்தால் இந்நிலை என்பது
1.இப்பொழுது நீங்கள் தியானிக்கும் நிலையில் விஞ்ஞானத்தை வெல்லும் மெய் ஞானத்தைக் காண்பாய்
2.இந்த நிலையில் இருந்து கொண்டு எஞ்ஞானத்தையும் வென்று விடலாம்.

விடியும் காலத்தையும் நீ காண்பாய்… விடியும் காலத்தை என்னும் பொழுது உன் நினைவில் “வான மண்டலத்தின் நிலை” தெரிந்து இருக்கும்.

முதல் பாடம் பூமியின் நிலையைத் தெரிந்து கொள் என் நினைவை நீ தெரிந்தவுடன் இப்பூமியின் நிலையைத் தெரிந்து கொள்வாய்…
1.உனக்குள்ளே நான் வந்து அமரும் நிலை பெற்றுவிட்டால்
2.இந்தப் பூமியை இயக்கும் தன்மை புரியும்… மனித நிலை மாறியதன் தன்மையும் புரியும்.

மாற்றுடலைப் பெற்றிடலாம்…! மாறிடும் காலத்திற்கு முன்னே இந்த உடலிலேயே எல்லா நிலையையும் உனக்குத் தந்திடுவேன்.

பூமி இயங்கும் தன்மையே ஆகர்ஷண சக்தி என்பதை வைத்து உன் நிலையைப் பறக்கச் செய். இம்மண்டலம் விட்டு பிற மண்டலம் நீ சென்று வரலாம். பிற மண்டலத்தில் நடக்கும் நிலையை நான் தருவேன். நீ இருந்த நிலையிலேயே எல்லாம் உண்டு.

உன் மனதை நீ அடக்கு என்பதன் பொருள் இதற்காகவே.

1.முதலில் உள் மனதை அடக்கும் தன்மை வந்து விட்டால் வெளி மனதும் அடங்கிவிடும்
2.உள் மனதை அடக்கி விட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை கண்டிடுவாய்.
3.மிக சீக்கிரத்தில் ஆகர்ஷண சக்தியை வென்றிடலாம்.

ஆரியபட்டா பறந்ததன் நிலை என்ன…? (ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும்). அவனே செய்தானா…? ஈஸ்வரப்பட்டா சென்றல்லவா அதைப் பார்த்தான்.

“ஆரியபட்டா” என்னும் பெயர் வர அவனுள்ளே நான் இருந்தேன். நீ இருக்கும் இந்தியா மட்டும் உலகம் அல்ல…
1.உலகில் உள்ள மறுபகுதியில் உள்ளவனுக்கும் நான் உள்ளேன்.
2.இங்கும் சித்தன் உள்ளான் அங்கும் உள்ளான்
3.நாம் நினைப்பது இங்கு தான் சித்தன் உள்ளான் என்று
4.அங்கிருக்கும் நிலையை அவன் வெளிப்படுத்துவதில்லை.

உன் மூளையை நீ உபயோகித்தால் அவனையும் நீ வென்றிடலாம். அவனையும் வென்று விட்டால் போதுமா…? அவனுக்கும் மேலே உள்ளவனை யார் வெல்வது…?

அவன் அவனையே தான் வென்று கொண்டிருக்கின்றான்… அவனுக்கு மேல் உள்ளவன் அவனை வெல்ல எவ்வளவு நாள் செல்லும்…?

விஞ்ஞான நிலை கொண்டு அழிக்கும் நிலை நமக்கு வேண்டாம். நம் ஞானத்தின் நிலை இந்த விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் இல்லையப்பா.

1.இந்தத் தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்
2.நீ வேறு அவன் வேறு அல்ல என்ற நிலையை நீ பெற்றிடு.

நான் சொல்லும் பாடம் எல்லாம் இதுவே தான்.

இவ்வுலகில் நீ பிறந்த நிலை வேறு எந்த உலகத்தில் இல்லை. நம் மனத்தையே தெய்வமாக்கிக் கொள்ளும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான் தெய்வம் என்பது இல்லாமல் மனதையே தெய்வமாக்கிடுங்கள்.

உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். தியான நிலையின் பொருள் எல்லாம் புரிந்திருக்கும் நாசியில் நீ பெற்றிடும் வாசனையை உன் மனதில் ஆக்கு.

சுவாச நிலை என்பதன் உட்பொருள் இதுவே தான் உன் மனதை வாசனையாகப் பெற்று விட்டால் கோடி இன்பம் அதுவே தான்.

நுகரும் தன்மையில் நீ இருந்திடப்பா மலரும் கழிவும் வேறல்ல என்ற நிலை தெரிந்திடும்.

கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு… உனக்கும் உண்டு…! மணம் என்னும் வாசனையைப் பெற்று விட்டால் எல்லா நிலையும் மாறிவிடும்.

யோகியாகச் சென்று தான் அடைய வேண்டும் என்னும் நிலை உனக்கில்லை. இருக்கும் நிலையில் எல்லாம் தெரியத்தான் இந்தப் பாடங்கள்.

பாட்டின் தன்மை புரிந்திருக்கும் பாடத்தின் தன்மைகளும் புரிந்திருக்கும் முதல் படி தாண்டி விட்டாய் என்று சொன்னேன்… அடுத்த படி ஏறத்தான் இந்தப் பாடங்கள்.

எல்லா நிலையும் வென்றிடும் சக்தி உனக்கு உண்டு.
1.பறக்கும் நிலை பார்த்திடுவாய்.
2.காட்சி:- உடல் இருக்க சாமி (ஞானகுரு) பறந்து போகும் நிலை
3.இந்த நிலையை உனக்கு அருள்வேன்.

June 26, 2024

மகரிஷிகளின் அருள் சக்தியை வளர்த்து “உலகெங்கிலும் நாம் அதைப் பரவச் செய்வோம்”

மகரிஷிகளின் அருள் சக்தியை வளர்த்து “உலகெங்கிலும் நாம் அதைப் பரவச் செய்வோம்”

 

இன்று உலகெங்கிலும் நடக்கும் எத்தனையோ அசம்பாவிதங்களை நாம் பார்த்தும் கேட்டும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்று
2.நாம் நம் சிந்தனைகளைச் செலுத்த வேண்டும்.

ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும். ஞானிகள் உணர்வை வளர்த்து அதைப் பரப்பி இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் தீமைகளை… அந்த நஞ்சான உணர்வுகளைப் பிளக்க வேண்டும்.

1.நம் ஆன்மாவை மட்டும் தூய்மைப்படுத்துவது என்பது அல்ல…!
2.பரமான இந்தப் பூமியில் இருக்கும்… பரமாத்மாவில் படர்ந்துள்ள தீமைகளைப் பிளக்க வேண்டும்.

அதைப் பிளக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும்.
1.அந்த உணர்வின் சொல்லாக… செயலாக…
2.எல்லாவற்றையும் (வாழ்க்கையை) அதனின் செயலாக்கமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

நான் (ஞானகுரு) சாதாரணமாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். குருநாதர் எனக்குள் உயர்ந்த உணர்வுகளைப் பதிவு செய்தார். எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

அதை நீங்களும் பெற வேண்டும்… நீங்கள் பெறுவீர்கள்…! என்ற நம்பிக்கையுடன் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் “அந்த ஞானமே” உங்களைக் காத்திடும் சக்தியாக தக்க உபாயங்களைக் காட்டும்.

தீமை செய்தவனைப் பதிவு செய்து மீண்டும் அவனை நினைவுக்குக் கொண்டு வந்தால்… தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அது அழைத்துச் செல்கின்றது.

தவறு செய்கிறான்… தன்னை எதிர்த்துப் பேசி விட்டான்…! என்றால் உடனே பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அவனைப் பழி தீர்க்கச் செல்கின்றோம்.

ஆனால் பழி தீர்க்கும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் அது நம் நல்ல குணங்களையும்… நம் உடல் உறுப்புகளையும்… நம்மையும்… அழித்து விடுகின்றது.

இதைப் போன்று தான்… இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலையாக “தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்” அதை வளர்த்து நம்மைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆலயங்களிலே அதைத்தான் நமக்கு ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். பிறருடைய தீமைகளை அகற்றிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

1.உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின்ன் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த மகரிஷிகள் அடைந்த… அவர்கள் பெற்ற ஆற்றலை நாம் பெறுகின்றோம்

இந்த முறைப்படி எல்லோரும் நீங்கள் சொல்லிப் பாருங்கள்
1.காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகன்று விடும்
2.காற்று மண்டலம் பரிசுத்தமாகிவிடும்.

நினைத்தவுடன் நான் வருவேன்… என் நினைவைக் கூட்டிக் கொள்

நினைத்தவுடன் நான் வருவேன்… என் நினைவைக் கூட்டிக் கொள்

 

48 நாட்களில் கலசம் வைத்ததின் மகிமை புரியும். எதற்காகக் கலசம் வைத்தது என்று புரிந்ததா…?
1.நினைவலைகள் வருவதற்காக… சுவாச நிலைக்காக…!
2.நாம் ஒரு காரியத்தை நினைத்துக் கலசம் வைத்திருக்கின்றோம். அதே நினைவில் ஈஸ்வர நினைப்பின் ஈர்ப்புக்காக.
3.அதாவது… 4+8=12 குணாதிசயங்கள்
4.சக்தி சொரூபத்தில் உள்ள பல விதமான குணங்களை 12 கோடு போட்டு ஒன்றாகச் சேர்த்தல்…
4.12 விதமான மனத்தையும் ஒருநிலைப்படுத்தல்.

குழந்தைகளுக்கு எப்படிப் பல துறைகளில் அறிவை ஊட்டி வளர்த்திருக்கின்றார்களோ அப்படியே தியான வழிபாட்டையும் கொடுக்க வேண்டும்.

விளையாட்டுப் போக்கு கடின சொல் இல்லாமல் ஆத்மீகப் பாடத்தை ஆரம்பி… நிதானமாக வரவேண்டும்.

1.நாள்… நட்சத்திரம்… பார்ப்பதெல்லாம் மனதை ஒருவழிப்படுத்தவே
2.நேரம் காலம் என்பது ஒன்றுமில்லை… மனதை தடைப்படுத்தவே நேரம்-காலம்.
3.மன பயம் உனக்கில்லை. அதன் பொருள் இதுதான்.
4.சந்தோசமான நிலையைக் கூட்டி வா நலிவும் நோவும் பயமும் வேண்டாம்.

வைரத்தின் ஜொலிப்பு வார்த்தையில் வேண்டும்
பூவின் வாசனை நாசியில் வேண்டும்
சிங்கார இசையின் ஒலிகள் செவிக்கு வேண்டும்
வளர்ந்த பின் எனக்கு அந்நிலை தா ஈஸ்வரா…!
இந்தப் பாடல் புரிந்ததா…? பாட்டின் தன்மையைப் புரிந்து பாடவும். சொல்கிற வார்த்தைகளும் செய்கிற செயலிலும் உன் நினைவு வேண்டும்.

எந்த ஒரு துளி நிலையும் வீண் பண்ணாமல் காலத்தை உபயோகப்படுத்து. உன் நிலை நல் வழியாக இருக்கட்டும்… “என்னுடன் நீ இருப்பாய்…”

1.எனக்கு நல்ல மனம் கொடு ஈஸ்வரா…! என்று சொல்லும் பொழுது எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை
2.பக்குவ நிலையில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

நேரத்தை வீண் செய்யாதே… உன் காலம் குறுகியது… படிப்படியாக வெற்றி கொள்… இந்தப் பாடம் எல்லோருக்கும் தான். காலநிலை குறுகிவிட்டது… காற்றுடன் கலந்து வா…!

“கஷ்டங்கள் வந்தாலும் என் அருள் உன்னுடனே…”

ஜெப நிலையைக் கூட்டிக் கொள்
ஜெபத்துடனே நான் இருப்பேன்
ஜெபமெல்லாம் உன்னுடனே
ஜோதி மயம் தந்திடுவேன்

ஜெபித்ததெல்லாம் உன்னுள்ளே
ஜெபித்ததெல்லாம் நானல்லவோ
இந்நிலையில் நானிருக்க
உனக்கு இனி கவலை இல்லை

பாடும் பாடல் நானல்லவோ
பாடிய குரல் எனதல்லவா – புரிந்ததா…?
உன் நிலை மறந்து விடாமல்
ஜெப நிலையில் வந்து விட்டால்
எந்நிலையும் கிட்டி விடும்
என்ற பொருள் இதுவே

ஜோதி நிலை தந்திடுவேன்
ஜோதியுடன் கலந்திடுவாய்
ஜோதியாகி உலகத்தையே
ஜோதி மயம் ஆக்கிடுவாய்

“உனதல்ல… எனதல்ல… இந்த உலகம்” என்று ஏற்கனவே சொல்லி உள்ளேன். ஆத்மீக வழிக்கு வயது வரம்பு இல்லை… ஏற்றுக் கொள்ளும் நிலையும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு.

உங்கள் ஆசையைத் தூண்டத்தான் இந்தப் பாட்டு. உன் பாடலை எனதாக்கு… என் பாடலை உனதாக்குகிறேன்.

உன் நிலையை மாற்றிக் கொள்… காலம் உனக்குக் கனிந்து வரும்… மனப்பக்குவம் வந்துவிட்டது… பாத்திரத்தில் சாதம் உள்ளது. எடுத்துச் சாப்பிடுவது அவன் வேலை…!

1.நம்பி வந்த பாதையை வென்று வா… சித்தன் நிலை காண்பாய்
2.சித்து நிலை தந்து விட்டேன்... சித்தனாகிச் சித்தனுடன் கலந்திடுவாய்.

சித்து நிலை ஞான நிலை எல்லாமே ஜோதியுடன் கலப்பதுவே. இந்நிலையைச் சீக்கிரம் பெற்றுக் கொள்… வழி அமைத்துக் கொள்… உன் நிலைக்கே எல்லாம் புரியும்.

இன்றைய பாடம் புரிந்ததா…?

June 25, 2024

எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

 

பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது “இப்படித் தவறு செய்கின்றார்களே…” என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த நேரத்தில் “அவர்கள் தவறிலிருந்து விடுபட வேண்டும்…” என்று நாம் எண்ண முடியவில்லை.

அதற்குண்டான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலையாகத்தான்
1.உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் தினசரி போக்குவது போன்று
2.வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நம்மை அறியாது வந்து சேரும் அழுக்கைப் போக்க
3.விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
4.நாம் கேட்டறிந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும்படி… ஆன்மாவைத் தூய்மைப்படுத்தச் சொன்னார்கள் ஞானிகள்.

பல முறை இவ்வாறு செயல்படுத்த… இந்த வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை. இருப்பினும்
1.என்னைப் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர வேண்டும்.
2.அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
5.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
6.நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரிடம் கேட்டால் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய...”

ஓ… …ம் நமச்சிவாய ஓ… …ம் நமச்சிவாய என்று வெறும் வாயில் சொல்வதில் பொருள் இல்லை. அது வெறும் சொல்.

காரணம்… நாம் எந்த உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது ஓ…ம் நமச்சிவாய…! அந்த அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வினை நமக்குள் சிவமாக்க (உடலாக) வேண்டும்.

ஆக…. எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

சாஸ்திரங்களில் ஓ…ம் என்றால் பிரணவம் என்று காட்டப்பட்டுள்ளது. “அதையே சொன்னால் ஜீவன் வந்துவிடும்” என்று தவறான வழிகளில் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

அவன் சொன்ன உள் பொருளே… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கிட “மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது…”
1.நமது உயிர் அதை ஓ… என்று அதைப் பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக ஆக்குகின்றது

அதாவது… மகரிஷிகளின் அருள் சக்திகளை உன் உடலாக்கு உனக்குள் அதை ஜீவ அணுவாக ஆக்கு என்று தான் காவியத்தைப் படைத்துள்ளார்கள்.

ஆனால் வெறுமனே ஓ… …ம் நமச்சிவாய என்று சொன்னால் “சிவன்” தன்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று… எதையாவது ஓடி வந்து செய்வார் என்று “இப்படிப்பட்ட நம்பிக்கையை” ஊட்டி விட்டார்கள்.

சந்தர்ப்பத்தில் ஒருவன் விபத்துக்குள்ளாகின்றான். “இப்படி ஆகிவிட்டதே” என்று பதட்டமாகி வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது ஓ…ம் நமச்சிவாய. பய உணர்வுகளை எடுக்கும் பொழுது அது உடலாக… சிவமாக ஆகிவிடுகிறது.

அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது.

உன் உயிர் நீ நுகர்ந்ததை எவ்வாறு உடலாக ஆக்குகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.
1.நடந்த விபத்தை கண்கள் உற்றுப் பார்க்கும்படி செய்தது… அந்த உணர்வினை கவரும்படி செய்தது
2.உயிர் ஓ… என்று பிரணவமாக்குகின்றது உணர்வினை உனக்குள் உணர்த்துகின்றது
3.உணர்வினை உடலாக (சிவமாக) உறையச் செய்கின்றது என்று தான் சாஸ்திரங்கள் தெளிவாக நமக்குக் காட்டியுள்ளது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தில் தான் அந்த விபத்து நடந்தது. வேண்டுமென்று அவன் விழுகவில்லையே…! அவன் வாழ்க்கைக்குச் சென்றான்… எதிர்பாராது வண்டி மோதுகின்றது… அடிபட்டு அவன் துடிக்கின்றான்.

அவன் உடலிலிருந்து துடித்து வெளிப்படுத்தும் உணர்லைகளைச் சூரியன் கவர்கின்றது… அலைகளாகப் பரப்புகின்றது.

நம் கண் அவனைப் பார்க்கின்றது… உணர்வினை கருவிழி (படமாக) பதிவாக்குகின்றது. அவன் வெளிப்படுத்திய அலைகளைக் கண்ணின் காந்தப்புலன் நமது ஆன்மாவாக மாற்றி… சுவாசிக்கும்படி செய்து… உயிரிலே பட்ட பின் உணர்த்துகின்றது… உடலில் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆக நாம யாரும் தவறு செய்யவில்லை… நம்முடைய புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது… தீமை என்று உணர்த்துகின்றது.

ஆனால் ஆறாவது அறிவின் துணை கொண்டு “அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமே…!”

தீமைகளிலிருந்து விடுபடுவற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் காட்டிய வழிப்படி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று “உயிருடன் ஒன்றினால்” ஓ…ம் நமச்சிவாய.
2.அவன் (மகரிஷி) தீமைகளை எப்படி அகற்றினானோ “சிவாய நம ஓ…ம்” நம் தீமைகளை அகற்றச் செய்கின்றது.

நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் இது ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்.
1.அந்த அரும் பெரும் சக்திகள் நம் உடலாகின்றது
2.மற்றவரின் தீமைகளை அகற்றும் சக்தியாக நம்மிடமிருந்து வெளிப்படுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

இலட்சுமணக் கோடு

இலட்சுமணக் கோடு

 

சூது வாது பொய் புரட்டு ஆசை கோபம் குரோதம் வஞ்சனை இது தான் இன்றைய உலகம். தர்மம் நியாயம் என்பதெல்லாம் ஒரு சிலருக்குப் பேச்சளவில்தான்.

தான் வாழ வேண்டும்… தன் குடும்பத்தார் வாழ வேண்டும்… தன் சுற்றத்தார் வாழ வேண்டும்… நான் பெரியவனா…? நீ பெரியவனா…? “பிறருக்கு மேல்… தான் “உயர்ந்த நிலையில்” இருக்க வேண்டும்…”

உயர்ந்த நிலை என்பது
1.இன்றைய மனிதர்களுக்குச் சோம்பேறித்தனமாக
2.எல்லா வசதிகளுடனும்… தானாகக் குவியும் பணத்துடனும்… வேலை வெட்டி ஒன்றும் செய்யாமல்
3.எல்லோரும் பார்த்து “நீ பெரிய பணக்காரன்… எல்லா வசதியும் உள்ளவன்” என்று சொல்வது தான்
4.இன்றைய மனிதர்கள் நினைக்கும் உயர்ந்த நிலை.

அவனது உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும் பிரிந்து சென்ற பின் அவனுடைய ஆத்மாவின் நிலையும் அதே நிலையில் தான் இருக்கின்றது. மறு பிறவியிலும் அதே ஆசையுடன் தான் வந்து பிறக்கின்றான்.

1.உள்ளதை வைத்துத் தர்மம் நியாயம் என்பதைக் கடைப்பிடிப்பவன்
2.ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குறிக்கோளுடன் தான் அவன் பாதையில் செல்கிறான். அந்தந்தக் குறிக்கோள் அவனுக்கு முடிவு பெறுவது இல்லை. அதனால் தான் அவன் மறு ஜென்மம் எடுக்கின்றான்.

சொல்லிய பாடத்தையே திரும்பவும் ஏன் சொல்கிறேன்…? என்று நினைக்கலாம். உங்கள் பாடத்திற்கு முதல் பாகம் இது தான்.

இராமாவதாரத்தில் வால்மீகி எழுதிய கதையில் - (கதை என்று சொல்லாதே…!) எழுதிய நூலில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுடனும் பிற்கால மனிதர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாக எழுதி உள்ளார்.

அதைப் படிப்பவர்களும் அந்த நூலின் தத்துவத்தைக் கேட்பவர்களும் அதைக் கதையாகத்தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர… புரிந்து ஏற்பது இல்லை…!

காட்சி:-
சீதை உட்கார்ந்து இருத்தல்… லட்சுமணன் கோடு போட்டுக் கோட்டைத் தாண்ட வேண்டாம்…! என்று சொல்லிச் செல்தல். இரட்டை மாட்டு வண்டியில் மாடு கோட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பி செல்கிறது.

இதனுடைய அர்த்தம் புரிகின்றதா…?

1.ஒன்று வேண்டாம் என்று சொல்லும் பொழுது
2.சொல்லியும் அதைத் தாண்டிச் செல்லும் பொழுது “படும் இன்னல்” அந்த நூலில் இருக்கின்றது.

ஆறறிவு படைத்த மனிதனுக்குச் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடிவதில்லை. ஐந்தறிவு படைத்த மாடு கோட்டைத் தாண்டாமல் திரும்பிச் செல்கிறது.

ஆறு அறிவு படைத்தவன் புரிந்து கொள்ளாததை எல்லாம்… அதாவது…
1.தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது
2.எல்லா வசதிகளும் கண்டுபிடித்து விட்டோம்
3.இந்த மண்டலத்தில் இருந்து பிற மண்டலத்திற்குக் கூட “செல்லும் வழியைக் கண்டுபிடித்து விட்டோம்…”
4.மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை…! என்று ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர்.

ஆனால் ஐந்து அறிவுடைய மிருக வர்க்கங்கள் பறவைகள் புழு பூச்சி இவைகளுக்கு இருக்கும் மனச்சாந்தி கூட எந்த மனிதனுக்கும் இல்லை. எனக்கும் தான்…! (குருநாதர்).

எனக்கும் மனிதர்களை நல்ல வழியில் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஒன்று இருக்கிறது அல்லவா… அதைத்தான் சொல்கின்றேன்.

இந்தக் கால சூழ்நிலையில் தனி ஒரு மனிதனால் எதுவும் செய்ய முடியாது. காலத்துடன் ஒத்துத் தான் செல்ல வேண்டும்.

1.ஆசையை அடக்க ஈஸ்வர தியானத்தில் இருந்து
2.இந்த யுகம் மாறி அடுத்த யுகத்திலாவது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளாமல்
3.நல்ல நிலையில் இருக்கத்தான் இந்தப் பாடங்கள் எல்லாம்.

பேய் பிசாசு என்பதெல்லாம் உண்மை. பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொல்கின்றார்கள். அதுவும் உண்மைதான்…! அவனுடைய மனதே அவனுக்குப் பேய்தான்.

பேயாக இருக்கும் மனதை அடக்கி மனிதனாகி தெய்வமாகலாம். ஒவ்வொரு மனிதரிலும் பேயாகவும் மனிதனாகவும் தெய்வமாகவும் இருக்கின்றார்.

பேயான மனதை அடக்கி மனிதனாகித் தெய்வீக அருள் பெறலாம்.
1.அதற்கு வயது வரம்பு வேண்டாம்.
2.வயதான பிறகு தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம்
3.தன்னைத்தானே உணரும் வயது முதற் கொண்டே இந்த நிலைக்கு வரலாம்.

June 24, 2024

கல்கி

கல்கி

 

உலகெங்கிலும் தோன்றிய ஞானிகள் அனைவருமே
1.மனிதனின் உயிரைக் கடவுளாக மதி
2.மனிதனுக்கு மனிதன் மனிதனாக நீ மதி
3.மனிதனை ஒரு கடவுளாக மதி என்று தான் அனைவரும் சொல்லி உள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள்
1.மனிதனை மதித்தார்கள்… மனித உடலை மதித்தார்கள்
2.மனிதன் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்தார்கள்
3.மனிதன் அவன் அறியாத இருள்களில் இருந்து மீள வேண்டும் என்ற சதா தியானித்தார்கள்.
4.மனிதன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் பிறவிக் கடலை நீந்தி ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள் அது தான் கல்கி…!

கடவுளின் அவதாரத்தில்… என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள்.

மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான், பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிரின் பரிணாம வளர்ச்சியில் இறுதியானதும் உறுதியானதுமான அழியா ஒளிச் சரீர வாழ்வே மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுரைத்தார்கள் ஞானிகள்.

ஆனால்
1.இந்தக் கலியில் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் விளைய வைத்து
2.எவர் ஒருவர் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுகிறார்களோ அவரே கல்கி.
3.வாழ்க்கையில் வரும் இருளை யாரெல்லாம் மாய்க்கின்றார்களோ…
4.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை அடக்குகின்றார்களோ… அவரே கல்கி.

கல்கி அவதாரத்தில் வரப் போகும் “சித்தன்”

கல்கி அவதாரத்தில் வரப் போகும் “சித்தன்”

 

உன்னையே நீ உணர்ந்து கொள் மற்றவர்களின் புகழுக்காகவும் வேடிக்கைக்காகவும் அல்ல தியானம்.

காட்சி:-
உருண்டைப் பந்து - உலகம் - சுற்றி வெளிச்சம். இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் கலியுகம் வெளிச்சம்…!

ஒவ்வொரு அவதாரத்தின் போதும் உலக நிலை மாறி இருந்தது. வர இருக்கும் கல்கி அவதாரத்தில் காலநிலை மாறும். ஒவ்வொரு அவதாரத்திலும் நடந்து நிலையைத் தனித்துப் பிரித்துச் சொல்கின்றேன்.

இராமாவதாரத்தைப் பற்றி சாமி சொன்னது புரிந்ததா…?

காட்சி:-
குருநாதர் தன் நெஞ்சைப் பிளந்து காட்டுகின்றார். நெஞ்சுக்குள் உருவம் தெரிகின்றது. இராமர் தசரதரின் மகனாகப் பிறந்தார் வில்லை ஒடித்துச் சீதையை மணந்தார் தந்தையின் சொல்லுக்காக 14 வருடம் காட்டிற்குச் சென்றார் சீதையின் கற்பைச் சோதிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வைத்தார் என்பதெல்லாம் “வால்மீயால் இராமாவதாரம் நடக்கும் காலத்தில் எழுதப்பட்ட கதையே…”

இராமாவதாரத்தில்
1.ஜனங்களுக்குத் தெய்வ பக்தியும் தந்தை சொல் தட்டாத நிலையில் நற்குணமும் பண்பு பற்று பாசம் எல்லாம் நிறைந்து இருந்தது.
2.மனிதர்களும் சூது வாது அற்றவர்களாக இருந்தார்கள்.
3.இராமாவதாரம் நடக்கும் பொழுது புனிதத் தன்மை இருந்தது.
4.அப்போது இருந்த காலத்தில் மாமிசம் யாரும் புசிப்பதில்லை.
5.பிறரின் சந்தோஷத்திற்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் நிலை இருந்தது.

அப்போது இருந்த ரிஷிகளில் ஒருவர் தான் வால்மீகி. அந்த யுகத்துக்குப் பெயர் வைத்தவரும் வால்மீகி தான். இன்னும் அவர் வாழ்கிறார். பிற்கால மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கட்டும் என்று அவர் எழுதிய நூல் தான் இராமாயணம்.

“ஸ்ரீராமஜெயம்” என்று ஜெபிக்கும் பொழுது எந்த நம்பிக்கையோடு ஜெபிக்கின்றோமோ அந்த ஜெபத்தை ஜெயிக்க வைப்பது இராமாயணம் எழுதிய “வால்மீகி தான்…”

அவர் எழுதிய நூலை… அவருக்குப் பிறகு எழுதியவர்கள் அவரவர்கள் மனப்பக்குவப்படிச் சில விஷயங்களைத் திரித்தும்… கூட்டியும்… குறைத்தும் எழுதி விட்டார்கள்.

ஸ்ரீராமஜெயம் எழுதிய பக்தை நீ…! உனக்கு என்றும் ஸ்ரீராமராகவே வால்மீகியின் அருள் கிட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆசி என்றும் உண்டு.

நீ ஜெபித்த ஒவ்வொரு ஜெபமும் என் நெஞ்சில் பதிந்துள்ளது. இது மிகவும் ரகசியம்

இப்போது இருக்கும் ஈஸ்வரபட்டராகிய சற்குருநாதர் யார்…?

படிப்படியாக விளக்கம் சொல்கின்றேன். கலியுகத்தில் ஈஸ்வரபட்டராகவும் அபிராமி பட்டராகவும் இருந்தார். கிருஷ்ணாவதாரத்தில் கீதை உபதேசித்த அந்த ரிஷி யார்…? உன் யோசனைக்கு விடுகின்றேன்.

கீதா உபதேசத்தின் போது வந்த ரிஷி - குருநாதர் தான். இராமாவதாரத்தில் வால்மீகியாக இருந்தார். இன்னும் பல நிலையில் இருந்திருக்கிறார். தொடர்ந்து தியானத்தில் இருந்தால் இன்னும் பல வழிகள் புலப்படும்.

கலியுகம் முடிந்து கல்கி அவதாரம் வரும் பொழுது
1.சாமி சொன்னபடி சித்தன் வெளிப்படுவான் என்றார் அல்லவா… அந்தச் சித்தன் யார் என்பது உங்களுக்குப் புரியும்.
2.ஒரு குழந்தை பிறந்திருக்கிறது 2000 ஆண்டில் அவன் வெளிப்படுவான் என்று சாமி சொன்னார் அல்லவா.
3.அந்தக் குழந்தையின் ரூபத்திலும் “குருநாதர் தான்” சித்தனாக வெளிப்படுவார்.
4.கல்கி அவதாரத்தைப் பார்க்கச் சீக்கிரம் நடை போடு…!
5.“இப்போது நடக்கும் நிலையே கல்கி அவதாரத்தின் ஆரம்பம் தான்…”

மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்… கேலி செய்வார்கள்…!

June 23, 2024

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

 

உடலை நாம் சொந்தமாக்கினாலும்… இந்த உடலின் சொந்தத்தை வைத்து… மனித உடலின் தன்மை கொண்டு தான்…
1.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வந்த இருள்களை நீக்கி
2.உயிர் ஒளியாக இருப்பது போன்று நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றிட முடியும்.

ஆனால்
1.மாற்றத் தவறினாலோ மீண்டும் பிறவிக்கே திரும்பச் செல்கின்றோம்.
2.”பிறப்புக்கு” என்று வந்தாலும் அதிலே மீண்டும் மனிதனாகப் பிறப்பது “எத்தனை கோடி ஜென்மங்களோ…!” என்று சொல்ல முடியாது.

இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் மனிதக் கருவாக உருவாக முடியும். மனித உடலுக்குள் செல்லாது நாம் வேறு ஒரு உடலுக்குள் சென்று மனிதனாக உருப் பெற முடியாது (இது முக்கியம்).

குடும்பத்தில் நம் குழந்தை மீது அன்பைச் செலுத்துகின்றோம் அல்லது உற்ற நண்பன் மேல் அன்பைச் செலுத்துகின்றோம்… பாசத்தைச் செலுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

தன் குழந்தை மீது அன்பையும் பாசத்தையும் செலுத்தி விட்டால் கடைசியில் உடலை விட்டு நம் உயிரான்மா செல்லும் பொழுது யார் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்தோமோ “அந்த உணர்வு தான் முன்னணியில் இருக்கும்…. அந்த உடலுக்குள் தான் புகுவோம்…” (நண்பனோ அல்லது நம் குழந்தையோ)

ஆனாலும்
1.உடலை விட்டு ஆன்மா வெளியே செல்லும் பொழுது கடும் நோயுற்றுத் தான் வெளியே செல்கின்றது.
2.அதாவது… உடலின் இயக்கம் சீராகாதபடி உடல் நலிந்து உறுப்புகள் பின்னமாகி
3.அதன் பின் தான் இந்த உயிரான்மா வெளியே செல்கின்றது.

நாம் எந்த நிலையில்… எந்த நோயின் காரணமாக… இந்த உடலை விட்டு வெளியே செல்கிறோமோ பாசமாக இருக்கும் அந்த உடலுக்குள் தான் உயிரான்மா செல்லும்.

அவ்வாறு அந்த உடலுக்குள் உயிரான்மா சென்றால் இந்த உடலிலே எந்தெந்த நோய்கள் உருவாகி அவஸ்தைப்பட்டோமோ… அதே உணர்வை அந்த உடலிலும் செயல்படுத்தும்.

இந்த உடலில் எந்த ஆசைகள் பட்டோமோ… எதை எதையெல்லாம் செயல்பட வேண்டும் என்று எண்ணினோமோ… இதே உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்பட்டு யார் மேல் பாசமாக இருந்தோமோ… அந்தப் உடலுக்குள் நாம் சென்ற பின் “பேயாகத்தான்” ஆட்டிப் படைப்போம்.

நம் ஆசைகளை நிறைவேற்ற… இந்த உணர்வுகளை இங்கே தூண்ட இந்த ஆசையின் நிமித்தமே நோய் இங்கே (முதலில்) விளைந்தது.

அதே விளைந்த உணர்வின் தன்மை உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிர் தன்னுடன் அதனை அழைத்துச் சென்று… யார் மேல் பாசம் கொண்டோமோ அவர் உடலுக்குள் சென்று… அந்த உடலுக்குள் அதே தீய விளைவை உருவாக்கி… அந்தக் குடும்பத்திலும் கஷ்டத்தை உண்டாக்கி நோயையும் உருவாக்கி… பேயான ஆசைகளைத் தூண்டி… வேதனையான உணர்வுகளை அங்கே அதிகமாக உருவாக்கி… “அந்த உடலையும் வீழ்த்தும்…”

பின் அந்த உடலில் வளர்த்த அந்த உயிரான்மா… அவர் உடலில் என்னென்ன ஆசைகள் வந்ததோ… இதே பேயின் உணர்வு கொண்டு “இன்னொரு உடலுக்குள் சென்று பேயின் தன்மையாக (இப்படி வரிசையாக) இயக்கும்…”

இந்த உடலில் இருந்து ஆன்மா (முதலில் புகுந்தது) வெளிவந்த பின் மனிதனுடைய சிந்தனையே அதற்கு இருக்காது.

காரணம் ஒரு துளி விஷத்தை உட்கொண்டால் நம் நினைவு தடுமாறுகின்றது. கூட ஒரு துளி விஷம் உட் கொண்டு விட்டால் மனிதனுடைய நினைவே இருப்பதில்லை… இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.விஷத் தன்மை அதிகமாகி… உயிரான்மா மனிதனுடைய நினைவை இழந்து…
2.எத்தகைய விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அந்த விஷத்துடன்
3.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவில் மிதந்து கொண்டே இருக்கும்.

அப்படி மிதந்து கொண்டிருக்கும் பொழுது அதனின் விஷத்தின் அளவுகோலுக்கு ஒப்ப… ஒரு விஷத் தன்மை கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் செல்லும். மனித உரு பெறும் தகுதி இழக்கப்படுகின்றது.

இதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆகவே வாழக்கூடிய நாள்களில் உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே மகரிஷிகள் உணர்வை உடலில் விளைய வைத்து
1.(நம்மை) உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து
2.யாருடைய ஈர்ப்புக்குள்ளும் சிக்காது நாம் விண் செல்ல வேண்டும்.

நானே வழிகாட்டிச் செல்கின்றேன்... எல்லாம் புலப்படும்…!

நானே வழிகாட்டிச் செல்கின்றேன்... எல்லாம் புலப்படும்…!

 

சத்தியம் என்பது என்ன…? உனக்கு மேல் என் சிஷ்யனுக்குத் (ஞானகுரு0 தெரியும்.
1.சிஷ்யன் என்றால் அவன் மட்டும் அல்ல…
2.எல்லோரும் என் சிஷ்யர்கள் தான்.

சத்தியம் தான் ஜெயிக்கும் என்று சொல்கின்றோம். உண்மைதான் சத்தியம். எவன் ஒருவன் உண்மையில் இருந்து விலகாமல் அந்த உண்மையைக் கடைப்பிடிக்கின்றானோ அது தான் சத்தியம்.

சத்தியம் என்பதே உண்மை. ஒரு உண்மையை நாம் மறைக்கும் பொழுது சத்தியத்திலிருந்து விலகுகின்றோம்.
1.இடம் பொருள் சூழ்நிலை அறிந்து எந்தக் காரணத்தினாலும்… கடவுளாகவே இருந்தாலும் சத்தியம் செய்யாதே.
2.உன் உடலால் மனதால் சத்தியவானாக இரு.

நான் சொல்வதெல்லாம் உனக்கு மட்டுமல்ல… என்னிடத்தில் மனதை ஐக்கியப்படுத்தியுள்ள எல்லோருக்காகவும் தான்.

(ஒருவர் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ள ஈஸ்வரன் கோயில் அது அமைதியான இடம் தியானத்திற்கு ஏற்ற இடம் என்று சொன்னார்). அதற்கு குருநாதரின் விளக்கம்.

தியானத்தில் இருக்க தனிமையான இடமும் சோலைகள் அடர்ந்த அமைதியான இடமும் பிற சத்தங்கள் வராத இடமும் தான் தியானத்திற்கு ஏற்ற இடமா…? இல்லை…!
1.எந்த நிலையிலும்… எங்கு இருந்தாலும்…
2.எவன் ஒருவன் ஒரு நிமிடமாவது ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்துகிறானோ “அதுவே தியானத்திற்கு ஏற்ற இடம்…”

சித்தர்கள் முனிவர்கள் இருப்பது போல் உலகப் பற்றை விட்டுத் தியானத்தில் இருந்தால் தான் தியான நிலை என்பது அல்ல. உலகத்தில் உள்ள எல்லோரும் அது போன்று செய்ய முடியாது.

1.அவரவர்கள் ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்து கொண்டே
2.ஈஸ்வர தியானத்தில் இருப்பவர் எல்லோருமே ஈஸ்வரனின் அருளைப் பெறுகின்றார்கள்.

நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்… குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்த பிறகு நமது கடமை எல்லாம் முடித்துப் பிறகு தெய்வீக வழியில் ஈடுபடுகின்றோம் என்று…!

குழந்தைகளுக்குக் கல்யாணம் ஆனவுடன் நம் கடமை தீர்ந்து விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
1.தீர்ந்து விடுமா…? எந்தக் கடமையும் தீர்ந்து விடாது.
2.நீங்கள் இருக்கும் வரை நினைப்பது போல் எல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்.
3.நினைப்பது எல்லாம் நடந்து விடுமா…?
4.நீங்கள் இருக்கும் வரை கடமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே “கடமை பந்தம் ஆசைகளை விட்டு விடலாம் என்று நினைக்காமல்…” இப்போது செய்யும் முறையிலேயே தியானத்தைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

கடமைகள் தீர்ந்த பிறகு தான் இதிலே ஈடுபாடு வைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.
1.நானே வழிகாட்டிச் செல்கின்றேன்... இதிலிருந்தே எல்லாம் புலப்படும்.
2,என் அருளும் ஆசீர்வாதமும் என்றும் உண்டு.

தன்னையே தான் பார்த்து விட்டான்…! தன்னுள் ஈஸ்வர சக்தி இருக்கும் என்று உணர்ந்து விட்ட பிறகுதான் இது தெரிந்திருக்கும்.

சாமியிடம் (ஞானகுருவிடம்) சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவான்.

காட்சி:- ஜோதி - மயில் - கிண்ணம் - கிண்ணத்தில் இருந்து பெரிய பாத்திரம் - கிண்ணம் போய் விடுதல் - பாத்திரம் பெரிய கிண்ணமாக - அந்தரத்தில் – கிண்ணத்தில் வெள்ளை ஆகாரம். முனிவர்கள் கிண்ணத்தில் இருந்து ஆகாரம் கிரகிக்கின்றார்கள்.

உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்.

June 22, 2024

நெற்றிக் கண்ணைக் காட்டுதல்

நெற்றிக் கண்ணைக் காட்டுதல்

 

அன்பே சிவம்… அன்பே சத்தியம்… அன்பு இல்லார்க்கு இந்த உலகம் இல்லை… அன்பு… அன்பு…! என்று பாட்டுப் பாடுகின்றார்கள். அந்த அன்பு என்பது ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் முதலாம் மந்திரம்.

எல்லோரும் ஞானிகள் சித்தர்கள் ஆகிவிட முடியாது. ஞானிகளாகவும் சித்தர்களாகவும் ஆகித்தான் கடவுள் அருளைப் பெற முடியும் என்பது இல்லை.

சாதாரண மனிதனுக்கு வெறும் அன்பை மட்டும் வைத்துக் கொண்டு ஜீவிதம் செய்து விட முடியாது. அவனவன் காலத்திற்குத் தகுந்த மாதிரி மேடு பள்ளம்… நெளிவு… சுளிவு… எல்லோர் வாழ்க்கையிலும் எல்லாம் இருக்கும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு அன்பை மட்டும் ஊட்டி வளர்த்தால் அந்த மகன் உருப்படுவானா…?

ஈஸ்வரன் படத்தைப் பார். அவர் கழுத்தில் இருக்கும் பாம்பு… கையில் இருக்கும் சூலாயுதம்… அவர் ஜடாமுடி… நெற்றிக்கண்… தலையில் பிறைச்சந்திரன்… தண்டை சலங்கை… புலித்தோல்… உடுக்கை…! எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கும் உருவம் தான் சித்தர்களால் சிவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் தரித்துக் கொண்டு
1.அவர் முகம் மட்டும் அன்பாக சாந்தமாகக் காட்டுகிறார்.
2.இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா…?

உருவம் இல்லாத சிவனுக்குச் சித்தர்களால் கொடுத்த உருவத்தில் அவர் அங்கத்தில் தரித்திருக்கும் பொருள்கள் எதற்காக என்று தெரிகிறதா…?

இதன் உள் அர்த்தம்…
1.காட்சி:- வாயைத் திறந்து ஏதோ உள்ளே விடுதல் இந்த மாதிரியான உருவத்தில் பார்க்கும் பொழுது உனக்குப் பயமாக இருக்கும்.
2.காட்சி:- நெற்றிக்கண்ணை எடுத்துக் காட்டுதல். இதைப் பார்த்தவுடன் பயமாக இருக்கிறது அல்லவா…?

தெய்வமாக நெற்றிக்கண்ணைக் காட்டியது… முதலில் பயந்த பிறகு… கடவுளே நெற்றிக்கண்ணைக் காட்டியபோது எனக்கு என்ன பயம்…? என்று இருந்தாய்.

இது போல தந்தை… அன்பினால் மட்டும் மகனை வளர்க்க முடியுமா…? என்று கேட்டேன் அல்லவா. ஈஸ்வரர் நெற்றிக்கண்ணைக் காட்டியது போல் காட்டித் தான் அவனைத் திருத்த வேண்டும்.

இதே மாதிரி தான் அவர் தரித்திருக்கும் ஒவ்வொரு பொருளின் விளக்கமும். சித்தர்கள் மனிதர்களுக்குப் புரிவதற்காக கொடுக்கப்பட்ட உருவங்கள் அனைத்தும் இது போன்றுதான்.

மனதில் பதிய வைத்துக் கொள்.

அன்பினால் மட்டும் வென்று விட முடியுமா…? அன்புடன் மட்டும் இருந்தால் வாழ்க்கையினை நடத்திச் செல்ல முடியுமா…? சாமியிடம் (ஞானகுரு) கேட்டுத் தெரிந்து கொள்.

சாமி வரும் பொழுது வீண் கதைகள் பேசாமல் அவரிடத்தில் விளக்கங்களைக் கேட்டு தெரிந்து கொள்.
1.அவன் என்னிடம் உத்தரவு கேட்பான்
2.நான் சிவனிடம் வாங்கித் தருகின்றேன்…!

பார்த்தாயா…! யாரும் யாரையும் வெல்ல முடியாது.

June 21, 2024

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும்

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும்

 

குருநாதர் காட்டிற்குள் எம்மை அழைத்துச் சென்று கேன்சர் போன்ற நோய்களைப் போக்கும் சில பச்சிலைகளைக் காட்டினார். அதை வைத்து நோயினை அகற்ற நீ உதவி செய்தாலும்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள்.
2.இதனை வாக்காக நீ அவருக்குக் கொடு.
3.இந்த அணுவின் தன்மை அங்கே விளையும்.
4.அவர்கள் அதை வளர்த்தார்கள் என்றால் அவரை அறியாது சேர்ந்த பாவ நிலையைப் போக்கும் நிலை வருகின்றது.

அவர்கள் எண்ணியதை அவரின் உயிர் உருவாக்குகின்றது. அணுவின் தன்மையை உடலுக்குள் பெருக்குகின்றது.

உதாரணமாக ஒருவன் கோபமாகப் பேசுவதை “நாம் கேட்டறிந்தால்” நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
1.ஆனால் கேன்சரை நீக்கும் உணர்வை நீ நுகர்ந்தாய்.
2.அந்த விஷ அணுக்கள் செயலற்றதாக ஆக வேண்டும் என்று “இந்த வாக்கினைக் கொடு…”

இந்தப் பதிவின் நினைவு கொண்டு யாரெல்லாம் தியானிக்கின்றார்களோ நஞ்சினை வென்ற துருவ மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் பெறுவார்கள் அந்த விஷத்தின் தன்மை அப்பொழுது தணியும்.

எதை எண்ணி ஏங்கிப் பெறுகின்றார்களோ அதை அவர்கள் உயிர்தான் இயக்குகின்றது.

“நான் செய்தேன்…” என்று (பெருமைக்காக) நீ இதைச் செய்தால் அவர் செய்யும் தீமைகளில் இருந்து விடுபட மாட்டார்.

உடல் நலம் பெற்று நல்லது வந்த பின்… மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் அவர் (அறியாமலே) செயல்பாடுவார். வேதனையைத் தான் மீண்டும் மீண்டும் நுகர்வார்.

அதே நோய் வரத் தொடங்கும் அவரின் விளைந்த உணர்வுகள் மற்றவருடன் உறவாடும் பொழுது அவர்களிலும் அந்த உணர்வு பதிவாகும். பதிவின் நிலையே அங்கே செயலாகும்.

இதை முழுமையாக மாற்றும் நிலை இல்லை…!

முழுமையாக நீக்க வேண்டும் என்றால்
1.நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால்
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரையும் நுகரச் செய்.
3.இந்த உணர்வின் துணை கொண்டு இருளை மாய்க்கச் செய்…!

பிறவியில்லா நிலை அடையும் பருவம் பெற்றது தான் இந்த மனித உடல். ஆகவே ஓவ்வொருவர் உயிரையும் ஈசனாக மதி… உடலைக் கோவிலாக மதி… உடலைச் சிவமாக மதி.

அருள் சேவை என்ற நிலையில் அருள் ஞானத்தின் உணர்வை ஊட்டும் ஊழ் வினை என்ற ஞான வித்தாக ஊன்று…!

அந்த வித்தினை எவர் எவர் வளர்த்துக் கொள்கின்றார்களோ அவர்கள் இந்த பாவ வினையும் சாப வினைகளையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள்… தீய வினைகளிலிருந்து விடுபடுகின்றார்கள்.
1.இதை மீண்டும் வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை வளருகின்றது
2.இப்படி வளர்த்தால் தான் அந்த நிலையை அடைய முடியும்

மாறாக… உன் கையால் பலருக்கு நீ நன்மைகளைச் செய்து கொடுத்தாலும் நல்லதான பின் “அந்த நேரத்திற்குத் தான்” எண்ணுவார்கள்.

அடுத்து பிறரை வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்வார்கள். நுகர்ந்த பின் வேதனைப்படும் சொல்லே மீண்டும் அவர்களுக்குள் வரும்.

இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாக முதலில் பதிவான நிலை மீண்டும் தன் சத்தினை நுகர்ந்து அந்தத் தீய அணுக்களையே உருவாக்கும். நீ செய்த நன்மையும் பயனற்றுப் போய்விடும் என்றார் குருநாதர்.

ஆகவே நீ சக்தி பெற்ற நிலைகளில்
1.அருள் ஞான வித்தினை அங்கே ஊன்றி விடு
2.அதை வளர்க்க உபாயத்தைக் கூறு
3.அதன் வழிகளிலே அவர் நுகரட்டும்
4.அருளைப் பெறட்டும் இருளை அகற்றட்டும்.

விநாயகர் தத்துவப் பிரகாரம் மனிதன் தான் முழு முதல் கடவுள். தீமைகளை அகற்றிடும் உணர்வினை விளைவித்து தீமைகள் அகன்றிட வேண்டும் என்று “கூட்டுத் தியானங்கள் அமைத்தால்… அருள் சக்திகளைப் பரவச் செய்தால்… தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும் அதிகரிப்பார்கள்…!”

1.அந்த உணர்வுகள் அதிக அளவிலே விளையப்படும் போது
2.அந்த அலைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலை வளரும்… அதை நீ செய்…! என்று சொன்னார் குருநாதர்

அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

 

உன்னை நீ நம்பு... ஈஸ்வரனின் அருள் இங்கே வட்டமிட்டுக் கொண்டே உள்ளது.

முதல் பாடத்தைச் சொல்லிவிட்டேன் இனி அடுத்ததெல்லாம் ஆன்மீக வழிக்குத் தான். உன் தியான நிலையில் மனதை ஒரு நிலை நிறுத்தி ஆண்டவனிடம் ஐக்கியப்படுத்து.

1.உன்னை நீ நம்பு என்பது…
2.உன்னுள் இருக்கும் என்னை நீ காண்… “புரிந்ததா…?”

நீயே நீ அல்ல என்னும் பொழுது உன்னுள் இருக்கும் என்னை நீ சீக்கிரம் காண்பாய்.

மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று கவலைப்படாதே. எதுவும் நினைத்தவுடன் தானாக நடக்கும் என்று நினைக்காதே.
1.உன்னுள் இருக்கும் “என்னையே”
2.நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கும் பொழுது ஏன் குழப்பம் அடைகின்றாய்…?

நீ கஷ்டத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று பார்த்தாய்…! தப்பித்து எங்கே சென்று விடலாம் என்று பார்த்தாய்…? தப்பித்து என்னிடம் தான் சேரலாம் என்று இருந்தாய்.

1.நானே உன்னுள் இருக்கும் பொழுது
2.என்னிடம் வந்து சேரலாம் என்று ஏன் இருந்தாய்…?

ஓவ்வொரு உடலிலும் இருக்கும்
1.என்னைப் பரிபக்குவமாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் யார் யாருக்கு உள்ளதோ
2.அவர்களுக்கு என் அருள் சீக்கிரமாகவே கிடைக்கும்.

காட்சி:-
ஜக்கில் சுடச்சுட காப்பி…! தட்டில் விட்டு ஆற்றிக் குடிக்கின்றார்.

மனம் கொதிக்கும் நிலையில் இருந்தாலும் “மனதை ஈஸ்வரனிடம் கொடு...! நான் உன்னுள்ளே இருக்கும் பொழுது நீ ஏன் கவலைப்படுகின்றாய்…?

எல்லாம் அவன் செயல் என்கிறாய்…! மரம் நட்டவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா…? என்பது பழமொழி.

மரம் நட்டவன் நிச்சயம் தண்ணீர் ஊற்றுவான். அதை ஏற்று உறிஞ்சுவது மரத்திடம் தான் உள்ளது. மரம் நட்டதும் தண்ணீர் ஊற்றியதும் ஆண்டவனாக இருக்கின்றான்.
1.மரம் தண்ணீரை ஏற்று எந்த அளவில் காயாகவும் பழமாகவும் பலன் கொடுக்கிறதோ
2.அது மரத்தின் வேலை தான்.

ஒரே இடத்தில் பக்கம் பக்கமாக மரம் வைத்தாலும் சில நன்றாகவும் சில சரியாகவும் காய்ப்பது இல்லை. சில பட்டுப் போகின்றன இதே நிலைதான் மனிதனுக்கும்.

விதியை மாற்ற ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து.
1.எல்லாம் அவன் செயல் என்று இருக்காதே
2.அவனே உன்னுள் இருக்கும் பொழுது “பாரத்தை” ஏன் அங்கு போடுகின்றாய்…?

உன்னையே நீ காணும் நாள் சீக்கிரத்தில் உண்டு. அந்த நிலைக்கு நீ உன் மனதைக் கொண்டுவர முயற்சி செய்.

இதையெல்லாம் தினசரி வரிசையாக எழுதிக் கொண்டு வா. நான் உத்தரவு தந்த பிறகு புத்தகமாகப் போடலாம். சரியாக எழுத வேண்டும்.

பிற்கால சந்ததியருக்கு இப்பொழுது இருக்கும் அளவுக்குக் கூட கடவுள் பக்தி இருக்காது. கோவில் என்பது அவர்களுக்கு சினிமா நாடகம் போல பொழுது போக்கு இடமாகப் போய்விடும்.

கோயில் என்பது அவரவர் அந்தஸ்தை காட்டும் இடமாகத்தான் உள்ளது… புரிந்ததா…?

வரும் சந்ததிகளின் காலத்திற்கு “கடவுளின் உண்மை சொரூபம் என்ன…?” என்பதற்கு புத்தகம் தனியாகப் போடலாம்.

“எனக்கு வேண்டியர்… உனக்கு வேண்டியவர்…” என்று யாருக்கும் காட்ட வேண்டாம். கல்லாக என்னை நினைத்து வணங்குபவர்களுக்கு இப்போது சொன்னால் புரியாது.

உனக்கே இத்தனை நாள் கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…? சாமி (ஞானகுரு) வந்து விளக்கம் சொல்லியும் குழப்ப நிலையில் தான் இருந்தாய்.

இப்பொழுது கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…?

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷம் என்று எதை நினைக்கின்றானோ… அதற்காக தர்மம் நியாயம் பக்தி என்று எதையும் பார்க்காமல் தன் சந்தோஷத்திற்காகச் செய்ய பார்க்கின்றான்.

சந்தோஷம் என்றால் என்ன…? என்று புரியாத மனிதர்களிடம் எப்படி விளக்குவது…?

எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

மனதை அமைதிப்படுத்தித் தன் நிலையைத் தான் உணர்ந்து மனதில் உள்ள சோர்வு சோகம் குரோதம் மனதில் உள்ள தாழ்வு இதையெல்லாம் விட்டுவிட்டு… எவன் ஒருவன் தர்மம் நியாயம் அன்பைக் கடைபிடிக்கின்றானோ “அவனுக்கு எல்லா அருளும் கிடைக்கும்…”

பூஜை என்பது என்ன…?

பூஜை என்பது என்ன…?

 

மனச்சாந்திக்காக எல்லோரும் பூஜை செய்கிறார்கள். சாமி (ஞானகுரு) சொன்னது போல் தியான மார்க்கத்திற்கு வந்தால் போதும். மனதை ஐக்கியப்படுத்தித் தியான மார்க்கத்திற்குப் போகவும்.

கடவுள் என்றால் என்ன…? என்பதை முதலில் தெரிந்து கொள்.

பூஜையில் இருக்கும் பொழுது
1.சாமி சொன்ன மாதிரி தாய்… தந்தை… போதனை கொடுத்த குருவிடம்… ஆசிர்வாதம் பெற்றுத் தியானத்தில் ஈடுபடவும்.
2.அடுத்து சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளை நினை.
3.அடுத்தது ஈஸ்வரா என்று நினைத்து மனதை ஐக்கியப்படுத்து.

கடவுள் எல்லாம் ஒன்றே என்று இருக்கும்பொழுது ஈஸ்வரனைப் புருவ மத்தியில் நினைத்தால் போதும்.

மாய ரூபம் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி உள்ளேன்… “ஜோதியே போதும்…!”

விநாயகர் முருகனை நினைத்துத் தியானித்தால் போகரின் காட்சி சீக்கிரம் கிடைக்கும். மனதை ஐக்கியப்படுத்தினால் கிடைக்கும். முனிவர்கள் சித்தர்கள் காட்சி வேண்டுமா…! அல்லது ஜோதி காட்சி வேண்டுமா…?

குழந்தைப் பாக்கியம் இல்லாத வரத்துடன் வந்திருக்கிறார்கள் குழந்தை இல்லை என்றால் அது அவரவர்கள் செய்து வந்த பூஜா பலன்… பிறவியிலிருந்து வந்த பலன் தான். மாற்றுதல் கடிநம்.
1.ஈஸ்வரனிடம் இருந்துதான் கேட்டு வாங்க வேண்டும்…
2.நம்பித்தான் கேட்டு மனதை ஐக்கியப்படுத்தித் தியானித்து வாங்க வேண்டும்.

“சந்தேக நிலை…” நிலையாக இருப்பதால் ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து. (காட்சி:-) மார்க்கண்டேயன் வரப் பலன் பெற வேண்டும்

பூஜைக்கு வரச் சொன்னது வழிமுறைக்காகத்தான். ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்திக் கேட்கவும் இதற்கு நீயோ நானும் என்ன செய்ய முடியும்…? பாடம் போதுமா… வேண்டுமா…? இன்னும் கேட்கலாம்… அவன் எழுத வேண்டாமா…!

June 20, 2024

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

 

நான் யார்…? இன்னவர் மகனா…? இன்னவர் கணவனா…? இன்னவர் மனைவியா…? இன்னாரின் அப்பாவா… அம்மாவா…?
1.நீ இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தி முடிக்கும் வரை தான் சொந்தம் பந்தம் எல்லாம்…
2.இறந்த பின் மறுபடியும் பிறப்பு.
3.பிறந்த பின்… இந்த வாழ்க்கையில் (மீண்டும்) ஒரு சொந்த பந்தம் குடும்பம்… வாழ்க்கை… பெயர்… எல்லாம்……

குழந்தைப் பருவத்தில் ஓர் ஆடை அணிகின்றோம். பிறகு வயதுக்குத் தக்க ஆடைகளை அணிகின்றோம். ஆக… ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு பெயர் வாழ்க்கை… சொந்த பந்தங்கள்…!

1.பிறப்பு எடுக்கும் முன்னும்… இந்தப் பிறப்பிலிருந்து வேறு பிறப்புக்குப் போகும் போதும் உன் நிலை என்ன…?
2.எத்தனையோ வாழ்க்கையும்… பிறப்பும்… அப்போது நான் யார்…?
3.பிறப்பு என்பது தொடர்ந்து வரும் போது… நான் என்பது யார்…?

எந்தப் பிறப்பும் எடுத்து முடியும் வரை எந்தவித ஆசைகளும் நிறைவேறாமல் தான் போகின்றோம். அடுத்து ஓர் பிறவியில்… மறுபடியும் அனுப்பும் போதும் ஆசைகள் நிறைவேறாமல் தான் போகிறோம்.

1.”என்று” ஆசைகள் பற்று பாசம் இல்லாமல் உலக வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறோமா…
2.முழு நிறைவோடு போகிறோமோ… அதன் பிறகு பிறவி இல்லை.

தற்போது நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…? எங்கும் எதிலும் இத்தகைய விளக்கம் இருக்காது…!

ஆகவே வாழ்க்கையில் சலிப்புடன் இல்லாமல் “நிறைவோடு வாழ்…!”

வேலைக்காரனை முதலாளி ஒரு வேலை கொடுத்து அனுப்பும் பொழுது… சரியாக வேலை செய்து முடித்து அவன் வரவில்லை என்றால்… மறுபடியும் அனுப்பிச் சரியாக செய்து வரச் சொல்லி அனுப்புவது போல்… பிறவி எடுத்ததிலும் நிறைவோடு இல்லாமல் ஆத்மா பிரிந்தால் “மறுபடியும் பிறவி எடுத்துத் தான் ஆக வேண்டும்…”

விதியை யாராலும் வெல்ல முடியாது என்கிறார்கள். விதி என்பது என்ன…? விதி என்பது வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் தான்…!

ஆண்டவனை நினைத்தால் விதியை வெல்லலாம். பாசம் பிடித்த இடத்தில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து விடுகின்றோம். அதே இடத்தில் ஆண்டவனை நினைத்து ஜாக்கிரதையாக நடக்கும் பொழுது விழாமல் நடக்கின்றோம்.

விழுந்து விட்டால் விதி என்றும் விழாமல் நடந்தால் ஆண்டவன் செயல் என்றும் சொல்கிறோம். அது மாதிரித் தான் நம் வாழ்க்கையிலும் வழுக்கலும் இருக்கலாம் சம தரையும் இருக்கலாம்

1.கஷ்டம் வரும்போது… அந்தக் கஷ்டத்தை நாம் எப்படி வெல்லுகிறோமோ
2.கஷ்டம் வரும் போது கடவுளை நிந்திக்காமலும் மனம் தளராமலும் வெல்லுகிறவன் தான் வாழ்க்கையின் பலனைப் பெறுகின்றான்

கஷ்டம் வரும்போது எல்லாம் தாண்டி வந்துவிட்டு… இப்போது சிறிய இடையூறுக்கு ஏனப்பா உனக்கு இவ்வளவு கலக்கம்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணையால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணையால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்

 

ஓர் விஞ்ஞானி தீமைகளை அறிகின்றான்… தீமைகளை அகற்றவும் செயல்படுகின்றான். ஒரு இயந்திரத்தை உருவாக்கப்படும் பொழுது அதிலே சில புரைகள் ஓடிவிட்டால் கடினப் பொருளை அதிலே சேர்க்கப்படும் பொழுது… அந்த இயக்கத்தைத் (எடையை) தாங்காது அது உடைந்து விடுகின்றது.

அது ஏன் உடைந்தது…? என்று விஞ்ஞானி உற்று நோக்கி அதற்குண்டான வலுவின் தன்மையைக் கூட்டி அதை மீண்டும் உருவாக்குகின்றான். இயந்திரத்தை இவ்வாறு தான் உருமாற்றி உருமாற்றிப் பல செயல்களை மாற்றுகின்றான்.

இந்த உடலுக்கு வேண்டிய வசதிகளைச் செய்ய முடிகின்றது. ஆனால் உணர்வால் நுகர்ந்தறிவது தீமையாகி… அது விளைந்த பின் தீமையிலிருந்து விலக விஞ்ஞான அறிவு கொண்டு உடல் உறுப்புகள் கெட்டுவிட்டால் அதை அகற்றி விடுகின்றான்.
1.செயற்கையான மாற்று உறுப்புகளையும் உடலில் இணைக்கின்றார்கள்.
2.ஆனால் நுகர்ந்த வேதனையான உணர்வுகளை இவர்களால் மாற்ற முடியாது.
3.ஆனால் மெய் ஞானிகள் இவ்வாறு நுகரப்பட்ட தீமையான உணர்வுகளை மாற்றிப் பழகியவர்கள்.

தங்கத்திற்குள் கலந்துள்ள செம்பு பித்தளை வெள்ளியை நீக்க திரவத்தை ஊற்றி அதை எவ்வாறு அப்புறப்படுத்தித் தங்கத்தைத் தெளிவாக்குகின்றார்கள். அதைப் போன்று தனக்குள் நுகர்ந்த தீமைகளை நீக்குகின்றார்கள் ஞானிகள்.

சாதாரண மக்களும் வாழ்க்கையில் வரும் தீமைகளை எளிதில் மாற்ற முடியும் என்ற நிலைகளில் சூட்சுமத்தில் நடப்பதை உருவங்களாகக் காட்டி கதைகளாகத் தீட்டி தெளிவான நிலைகளை நமக்குக் காட்டினார்கள் மெய் ஞானிகள்.

இன்று ஒன்றாவது வகுப்பிலிருந்து நாம் படித்து வந்தாலும் எந்த விஞ்ஞானி அவன் கண்டுபிடித்தானோ அதனின் வழியில் கல்வியை நாம் பதிவு செய்து கொள்கின்றோம்… அதன் வழியே நாம் செயல்படுகின்றோம்.

இஞ்சினியர் ஆக வேண்டும் என்றால் இயந்திரத்தின் உறுப்புகளை அது எவ்வாறு உருவாக்க வேண்டும்…? அதிலே உலகத்தின் கலவைகள் எவ்வாறு இணைக்க வேண்டும்…? என்று கற்றுணர்ந்த பின் அந்தப் பாடங்களைப் படித்து மீண்டும் நினைவு கொண்டு வந்து கொண்டு வரும்போது தான் விஞ்ஞான அறிவால் இயந்திரத்தை உருவாக்க முடிகின்றது.

மெய் ஞானிகளோ
1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எவ்வாறு உடலாக விளைந்தது…? என்றும்
2.அதனால் விளையக்கூடிய தீமைகள் எது…? என்றும்
3.அந்தத் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும்…? என்றும் காட்டினார்கள்.
4.அதைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேச வாயிலாக யாம் கொடுக்கின்றோம்.
5.மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்து அவர்கள் சென்ற பாதையில் சென்றால் என்றும் அழியா நிலைகள் பெறலாம்.

விஞ்ஞான அறிவு கொண்டு உலோகங்களையும் மற்றவைகளையும் கண்டுபிடித்து எடுத்தாலும் அது உணவுக்குத் தான் உதவும். கண்டுபிடித்தது எதுவாக இருந்தாலும் உடலின் இச்சைக்குத் தான் அது உதவும்.

அந்த வழியில்… “நண்பன்” விஞ்ஞான அறிவு கொண்டு இருப்பான் என்றால் எதிர்பாராது விபத்தாகி அவன் இறந்தால் இவனின் ஈர்ப்புக்குள் வந்து அவன் வளர்த்த விஞ்ஞான அறிவைத் தான் இங்கே வளர்க்க முடியுமே தவிர “விண்ணுலகம் செல்ல முடியாது…”

பக்தியின் நிலையில் கொண்டு மெய் ஞானிகள் காட்டிய வழியினை மாற்றி இந்த உடலின் இச்சைக்காக அபிஷேகம் ஆராதனைகளைக் காட்டி அதன் வழி இந்தத் தெய்வம் தான் நல்லது செய்யும் என்று முழு நம்பிக்கையை ஊட்டுகின்றார்கள்.

அந்த நம்பிக்கையுடனே வாழ்ந்து வளர்ந்து பின் உடலை விட்டு இறந்தால் இதே பக்தி கொண்ட இன்னொருவர் அதே ஏக்கத்தில் ஏங்கினால் இறந்த ஆன்மா அவருக்குள் இது சென்று அங்கே அருளாடச் செய்யும். பக்தியை இரு மடங்காக ஆக்கும்… மற்ற நல்லது செய்தாலும் எண்ணத்தில் வராது.

ஆக… நாம் எதைப் பக்தி கொள்ள வேண்டும்…? என்றால் அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி தீமைகள் புகாது நம் நல்ல உணர்வுகளைக் காத்திடல் வேண்டும்.

இன்றைய பக்தி வழிகள் எல்லாம் வேதனையை வளர்க்கும் நிலையாகத் தான் இருக்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

கற்க வேண்டும் என்றால் கல்விச்சாலைகளில் பல வருடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால்
1.இங்கே யாம் உபதேசிக்கும்போது மெய் ஞானிகள் உணர்வின் வித்தை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.அந்த உணர்வுகளை மீண்டும் நீங்கள் எண்ணினீர்கள் என்றால் துரித நிலைகள் உங்களுக்குள் விளையும்.
3.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.
4.எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை நீக்கி… உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்.

இதை எல்லாம் பத்து நிமிடத்தில் சொல்லி முடித்து விட்டு உங்களை வீட்டுக்கு அனுப்பவும் செய்யலாம். அதிலே பயன் இல்லை. அருள் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்… காலத்தைப் பார்க்க கூடாது…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில் தான் இடைவிடாது மணிக் கணக்கில் யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

தூக்கம்

தூக்கம்

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்...! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகைக் காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை.

ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது...?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்... ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை...” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்... அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக “கொட்டாவி வெளிப்பட்டு”
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து... பல அமிலங்களின் செயல் தொடர்பில்...” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்... மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்... நம் பூமிக்கும்... மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது... தன் தேவை அறியும் உணர்வும்... உறங்கும் நிலையும் இல்லை...?

ஏன்...?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கி விட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்...?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு... கழித்து... உறங்கி... மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை...!

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

 

பூமி எப்படித் தன்னுள் இப்பால்வெளி மண்டலத்திலிருந்து அச்சூரியனின் ஒளிக்கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களைத் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ… அந்நிலை போல் இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எச்சக்தியையும் கண்டுணர முடியும்...”

இந்தப் பூமியில் சூரியனின் ஒளிக்கதிர் பட்டு இந்தப் பூமியும் நாமும் மட்டும் பயன் பெறவில்லை. இந்தப் பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…?

இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து அந்த நிலையிலேயே மாற்று உடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன. இன்றைய நம் விஞ்ஞானிகள் அதை உணர்ந்தாலும் அந்தத் திரவங்களையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்தி விடுவார்கள்.

இன்னும் இந்த வான் மண்டலத்தில் எண்ணிலடங்காத சக்தி நிலைகள் படர்ந்துள்ளன.
1.நாம் காணும் நிலைக்கு மேகங்களும் பால் வெளி மண்டலமாகவும் காட்சி அளித்திடும் இந்த பால்வெளி மண்டலத்தினால் தான்
2.அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன.

பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலமுமே
1.தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பது அல்ல.
2.சுழன்று கொண்டே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காத வண்ணம் சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.

புதிய புதிய நட்சத்திர மண்டலங்களைக் காணுகின்றோம். ஆனால் தொடர்பு கொண்டு என்றும் காணும் நட்சத்திர மண்டலங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி நிலை கொண்டும் இப்பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்
1.இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபடுத்தி உள்ளதால்
2.இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்று அதன் ஈர்ப்புடனே வருகின்றன.

இப் புதிய நட்சத்திர மண்டலங்கள் தான் இப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இந்தப் பால்வெளி மண்டலத்திலிருந்து “ஒன்றுபட்ட அமிலத்தினால்” சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கே சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.

இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில சக்தி கலந்துள்ளதாக இருந்தால்… இந்த ஈர்ப்பில் வந்தடையாமல் அதன் நிலையே உருகும் நிலையாகப் பரந்த நிலைப்படுத்தி பிரிந்து விடுகின்றது.

இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள் யாவையுமே… இப் பூமியைப் போலவும் இவ் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல் ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.

பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்து உள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.

அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.

இந்த பூமியில் உள்ள எல்லா கனிவர்க்கங்களுமே கரைபவை தான்… ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில் மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கு மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.

நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதினால்
1.நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனி வர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி உள்ளன.
2.இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் நிலையில்
3.தங்கத்தையே ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து… நட்சத்திர மண்டலமாக “பல கோடி சுற்றிக் கொண்டுள்ளது…”

இந்தப் பூமியின் கனிவளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.

இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோளங்களின் நிலை அறிந்திடச் செல்கின்றான். இந்த சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி நிலையை அறியாததினால்…!

June 19, 2024

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

 

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பத்தில் விபத்துகளைப் பார்க்க நேர்கின்றது. அங்கே சிதறிக் கிடக்கும் உறுப்புகளை உற்றுப் பார்த்த பின் நம்மை அறியாமல் அச்சமும் பதட்டமும் பயமும் வருகின்றது.

சிதறுண்ட அந்த உணர்வலைகளை நாம் எடுக்கப்படும் பொழுது நமக்குள்ளும் அது உருவாகி சிந்திக்கும் செயல் இழக்கச் செய்து எதற்கெடுத்தாலும் பதறும் நிலை வருகின்றது.

1.சிதைந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
2.நாம் உற்று நோக்கும் போது அதனின் வித்தாக நமக்குள் பதிவாகின்றது.
3.பதிவான பின் அந்த உடலில் விளைந்த “உறுப்புகள் சிதைந்த உணர்வுகள்” நமக்குள் வந்துவிட்டால்
4.நம்மை அறியாமலே நம் உடல் கூறுகள் சிதைந்து கொண்டே வரும்.

இதைத் தீய வினை என்று சொல்வார்கள்.

நாம் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் அதை உற்று நோக்குகின்றோம் அறிகின்றோம். இருந்தாலும் உற்று நோக்கிய தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகள் வித்தாக உடலில் விளைகின்றது.

ஒரு டேப்பில் இனிமையான பாடலைப் பதிவு செய்கின்றோம். மீண்டும் அதைச் சுழல விட்டால் அதைக் கேட்கப்படும் பொழுது உடல் அசைகின்றது… இனிமையாக இருப்பதால் முகமும் மலர்கின்றது… நமக்கு மகிழ்ச்சி மேலோங்குகின்றது.

ஆனால் ஒரு வேதனை கொண்ட பாடலை இசைத்தாலோ நம்மை அறியாமலே நம் உணர்வுகள் சோர்வடைகின்றது.

ஒரு வீணையை வாசிக்கிறார்கள். சீராக இசைக்கப்படும் போது மகிழ்ச்சி வருகிறது. ஆனால் அதிலே நாதத்தை எழுப்பும் ஒரு சுருதி மாறி விட்டால் நினைவுகள் உடனே சிதறி… மனதில் இருக்கும் மகிழ்ச்சி அப்பொழுதே குறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் முதலிலே சொன்ன மாதிரி ஒரு மனித உடல் விபத்தில் சிதைந்த நிலைகளை நாம் உற்றுப் பார்த்த பின்… அவன் எப்படிக் கடைசி நேரத்தில் வேதனைப் பட்டானோ அதைக் கவர்ந்து கொண்டால் அந்த உணர்வின் சக்தியே நம்மை இயக்குகின்றது.

ஏனென்றால் எதை உற்றுப் பார்த்தாலும்… கண் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுன்றது. மீண்டும் அதனை நினைவு கொள்ளும் போது… திரும்பத் திரும்ப எண்ணிய பின் அது விதியாக மாறி விடுகின்றது.

விதி முளைத்து விட்டால் ஒரு தடவை அச்சமடைந்ததைப் பார்த்த அந்த உணர்வுகள் விதியாக மாறி விட்டால் அந்த கதியின் தன்மையாக நாம் அடிக்கடி பயமடைவதும் என்ன ஆகுமோ என்று அந்த பயத்தின் கதியிலேயே நம்மை இயக்கும்.

இதைப் போன்று நம்முடைய வாழ்க்கையில்
1.நாம் உற்று நோக்கிப் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது விதியாக மாறி
2.விதியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் மணங்கள் “கதியாக” நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் கதியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எதைக் கொண்டு…? மதி கொண்டு தான் அந்த இருளை நீக்க முடியும்.

1.அதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை ஊழ்வினையாக நாம் பதிவு செய்ய வேண்டும்
2.பின் அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விதியாக நாம் மாற்ற வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் விதியை மதி கொண்டு மாற்ற வேண்டும். மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் ஒடுக்கி அதை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணிலே “அதனின் கதியில் அழியாத நிலை கொண்டு சுழன்று கொண்டுள்ளார்கள்…”

1.தன் மதியால் விதியை மாற்றி ஒளியின் சிகரமாக எத்தகைய தீமையும் தனக்குள் அணுகிடாது
2.அந்த கதியிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.அதை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீய வினைகளை “அந்த விதியை மாற்றி
4.அவர்கள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்.

இவை என்ன உலக இயற்கை…?

இவை என்ன உலக இயற்கை…?

 

(16.12.1979 அன்று தினமணிச் சுடரில் வெளி வந்த கட்டுரை)

அயல் நாட்டுக் கார் ஒன்று நீண்ட படகு போல் வீதியில் வேகமாகச் செல்கின்றது. இதை பார்க்கும் ஒருவர் அருகில் நிற்பவரிடம் சொல்கிறார்.

அந்தப் பெரிய காரில் போவது யார் தெரிகிறதா…? கள்ளக் கடத்தல் செய்து பொருள்களைப் பதுக்கி வைத்து அந்தக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றாரே… அவர் தான்…!

ஆமாம்…! அவர்கள் தான் இப்படி ஆடம்பரமாக வாழ முடியும்…! என்று பெருமூச்சுடன் கூறுகின்றார் மற்றொருவர்.

அந்த வியாபாரிக்குத் தண்டனை விதித்த “மேஜிஸ்டிரேட்” அந்த வீதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக வெயிலில் நிற்கின்றார். 2… 3… பஸ்களில் ஏகக் கூட்டம் அவரால் ஏற முடியவில்லை. “கோர்ட்டுக்கு நேரமாகிவிட்டதே” என்ற துடிப்போடு அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கின்றார்.

அந்த வீதியிலேயே பெரிய வீடு… ஆடம்பரமான பங்களா…! தொடர்ந்து லஞ்சம் பெற்றதற்காக வேலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவருடைய வீடு அது…! என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதே வீதியில் கொஞ்சம் தள்ளி… சிறு வீடு ஒன்றில் அந்த வேலை நீக்கம் பெற்றவருக்கு மேலதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வீடு இருக்கிறது.

அவர் நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றியவர்… எல்லோராலும் பாராட்டுப் பெற்றவர்… வேலையில் திறமையானவர்…! ஆனால் லஞ்சம் வாங்கும் திறமை அவரிடம் இல்லை.

நான்கு பெண்களைப் பெற்ற அவர் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆக கலப்படம் செய்பவர்களும் கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும்… லஞ்சம் பெற்றுக் கணக்கில்லாமல் சேர்த்து வரும் செல்வத்துடன் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றனர்.

அது மட்டுமல்ல…! ஊராரும் அவர்களைத் தான் போற்றுகின்றார்கள்… புகழ்கின்றார்கள். கள்ளச் சந்தையில் ஈடுபடாத வணிகர்களைக் “கையாலாகாதவர்கள்” என்று இழிவாகக் கருகின்றனர்.

கலப்படம் செய்வதற்குப் பயப்படும் வியாபாரிகளைத் “துணிச்சல் இல்லாதவர்கள்” என்று கேலி செய்கின்றார்கள். கயவர்களைப் போற்றும் உலகம் கண்ணியமானவர்களைத் தூற்றுகின்றது.

இதன் பயனாகத் தீயோர்கள் பிறர் மதிக்க வாழுகின்றனர்… நல்லோர்கள் இதயம் நலிந்து ஏங்கி இருக்கிறார்கள். இந்த விசித்திரமான நிலை இன்று போல் அன்றும் இருந்திருக்கின்றது. மனித குலத்தின் இயல்பும் மாறவில்லை அல்லவா…!

பணத்தைப் புகழ்வதும் பண்பாட்டைப் புறக்கணிப்பதும் மனிதனின் மாறாத தன்மை போலும்…! இந்த இழிநிலையினை காணும் நல்லோர்கள் மனம் நொந்து வருந்துவது இயல்பு தானே…!

ஒழுக்கமான வாழ்வே உயர் ஞானத்தின் பயன் என்று உரைத்த மெய்யடியார்கள் இதைக் கண்டு இதயம் இடிந்து போகின்றனர்.

“தீது அவம் கெடுக்கும் அமுதம்” என்று இறைவனை ஏத்தும் ஞானிகளால் தீமை ஓங்குவதையும் நன்மை நலிவடைவதையும் கண்டு எப்படிச் சகிக்க முடியும்…?

பண்புகளுக்கெல்லாம் பகைவர்களாக உள்ளவர்கள் புன்முறுவலோடு பொலிவுடன் வாழுகின்றனர். அன்பு நிறைந்த நல்லோர்கள் நலிந்து ஏங்குகின்றனர்.

எண்ணிலா இத்தகைய துயர் விளைவிக்கும் இது என்ன உலகத்து இயற்கை…! கண்ணனே…! கடல் கடைந்த வண்ணனே…! தாளாது அடியேனை உன் கழலிணைச் சேருமாறு அருள் புரிவாய்…! இந்த வாழ்வு வேண்டாம்…! என்று இதயம் கரைந்து பாடுகின்றார் நம்மாழ்வார்.

நல்லவர்கள் நலிவதும் நல்லோர் அல்லாதவர்கள் நன்கு வாழ்வதும் எதனால்…? மனிதன் தனக்கு வரித்துக் கொண்ட சமுதாய அமைப்பு முறையின் விளைவு தானே…?

அறத்திற்கு மாறான இந்த அவல நிலை அடியார்களின் உள்ளத்தை உலுக்குகின்றது இதைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதை விட உலக வாழ்வை விட்டு மறைவதே உகந்ததாகப் படுகின்றது.

இது மட்டுமா…? தான் உண்ணுவதற்கு என்று பிற உயிர்களைக் கொல்லுகின்றானே மனிதன்…! ஏமாற்றிப் பிடித்தும் வலையில் சிக்க வைத்தும் உயிரினங்களைப் பிடித்து அவற்றைக் கொன்று உண்ணுகின்றான்.

அறம் என்பது என்ன…? என்று அறியாத நிலையில் இவ்வாறு மனிதன் பிற உயிர்களைக் கொன்று உண்ணுகின்றான். கொல்லாமையை விட அறம் ஏது…? இதனை அறியாதவர்கள் உயிர்களைக் கொன்று பசியாறுகின்றனர்.

இதைக் கண்டு சகிக்க முடியவில்லை ஆராவமுதனே…! என்னை உன் திருவடியின் கீழ் அழைத்துக் கொள்… என்னைக் கூவி அழைத்துக் கொள்…! என்று இறைஞ்சுகின்றார் ஆழ்வார். புலால் உண்பதன் புன்மையினை அறப்போருளை அறியாதவர்களின் செயல் என்கிறார்.

“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்” என்பது குறள்.

பிற உயிர்களைக் கொல்லாமல்தானே அறத்திற்கு அடிப்படை. தன் உடம்பு பெருக்க வேண்டும் என்பதற்காக… தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்…? என்று கேட்கின்றார் திருவள்ளுவர்.

பிற உயிர்களைக் கொன்று உண்ணும் பழக்கம் அறத்திற்கும் அறத்தின் பயனாக அருளுக்கும் மாறுபட்டது என்பதால் அது விலக்கப்படுகின்றது.

உலக வாழ்விலே அருளும் அறமும் நலிகின்ற போதெல்லாம் நல்லவர்கள் மனம் நலிகின்றது. அறம் போற்றி வாழ்பவர்கள் அல்லல்படுவதும் அல்லாதவர்கள் ஆடம்பரமாக வாழ்வதும் உயிர்களைக் கொன்று உண்டு தம் ஊனை வளர்ப்பதும் உலகத்து இயற்கையாகி விட்டது…! உலக வாழ்வோடு ஒன்றிய இயல்பாகி விட்டது.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை விட்டு இறைவன் திருவடியில் விரைவில் சேர்வதே வித்தகர்களின் விசாரமாகி விடுகிறது என்று இதயம் இடிந்து இவ்வாறு பாடுகின்றார்கள்.

ஈஸ்வரபட்டரின் பதில்:-
நம்மாழ்வார் இயற்றி வெளியிட்ட அருட்பாக்களை ஆராய்ந்து இந்நிலையின் பொருளை விளக்குகின்றனர்.

நீதியைப் புகட்டும் நீதிபதியின் வாழ்க்கைத் தரத்தையும்… அந்த நீதிபதியினால் தண்டனைக்குட்பட்ட குடிமகனின் வாழ்க்கை நிலையையும்… இரண்டு வெவ்வேறு நிலை கொண்ட பொருளாதார அடிப்படையில் “இந்த ஞானவழிக்கும்… ஆத்மீக வழியின் தொடர் நிலைக்கும்” ஒப்பிட்டுப் பதம் காண்கிறனர்.

1.அவன் சென்ற வியாபார நோக்கின் வழி எண்ணத் தொடரின் செயலுக்கும்
2.நீதிபதியின் நற்போதனை நிலைக்கும்
3.வாழ்க்கை நிலையை இப்பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒப்பிட்டுச் செயல் காண்பது எந்த வழியில்… எந்த ஞானியாக இருந்தாலும் உத்தமம்…!

ஆத்ம நிலையை அறிய… இறை பக்தியை ஏற்றம் கொண்டு வழி நடந்திடும் இவ்வுணர்வுடையோர் இந்நிலையை ஒப்பிட்டு… இந்நிலையினால் தன் எண்ணத்தை விரக்திப்படுத்தி… இறைவனடி ஒன்று தான் உத்தம நிலை என்று “விலகிச் சென்று… ஆத்ம ஜெபம் என்ற இறை பக்தியை வளர்க்கின்றார்களாம்…!”

நீதிபதி தான் வந்த வழியில் நீதிக்காகச் செயல் கொண்டு செயலாற்றுவதற்கும் அவர் வாழ்க்கையின் பொருளாதார நிலைக்கும் ஒப்பிடலாகாது.

வியாபாரியின் நோக்கில் பல தவறுகள் நீதிக்கு புறம்பட்டதாக இருந்தும் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளதை வைத்து
1.இறைவனைப் பாகுபடுத்திட்ட நிலை தான்
2.இன்றைய மனிதர்களின் எண்ண நிலை எல்லாம்.

சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் அடிபணிந்தே வாழ்ந்தும் பல இன்னல்களை ஏற்க வேண்டியது உள்ளதே… “ஆண்டவனின் சோதனை நிலை” என்ற எண்ண நிலையிலேயே அப்பாகுபாடு என்னும் எண்ணமே…
1.தர்மவான் சத்தியவான் என்று வாழ்ந்தாலும்
2.தன்னையே குறுக்கிக் கொள்ளும் இந்த எண்ணத்தினால் தான்
3.இன்றைய இந்த உலகில் உள்ள சத்திய நியாயமும் மறைந்து வரும் நிலை.

சத்தியத்திற்குச் சோதனை வரும் என்ற எண்ண நிலையிலேயே அச்சோதனை நம்மைப் பற்றிக் கொள்கின்றது.
1.இந்நிலையில் சத்தியம் என்பது எப்படி ஜெயம் கொள்ளும்…?
2.எண்ணத்தில் உள்ள சத்தியத்தையும் தர்மத்தையும் இன்றைய மனிதன் சோதனையாக எண்ணி “நழுவ விட்ட காலம் இது…”

வாழ்க்கையில் பல தவறுகளைத் தவறென்று உணர்ந்தே செய்பவனும்… தன் எண்ண நிலையைச் சோர்வுக்கும் தோல்விக்கும் அடிபணிந்திடச் செய்திடாமல்… நன்மை தீமை கொண்ட எவ்வழிக்கும்… ஒரே எண்ணமுடன் சோர்வை அண்ட விடாமல் செல்பவனின் பொருளாதார வாழ்க்கை நிலையும் குடும்பத்தின் செயல் நிலையும் வளமுடன் தான் வாழ்கின்றன.

1.பல தவறுகள் செய்கின்றான்… அவனை ஆண்டவன் பார்ப்பதில்லை.
2.நல் உணர்வு கொண்ட நமக்கேன் சோதனை…? என்ற எண்ணத்திலேயே நம்மைத் தாழ்த்தி
3.அதனால் வரும் நம் ஆத்ம நிலையின் சோர்வினால்
4.நல் உணர்வுகளை நாம் பெற்றிருந்தாலும் நம் நிலையும் குன்றி நம் பொருளாதார நிலையும் கீழ்ப்பட்டு
5.நம்மையே நாம் குன்றச் செய்து கொள்கின்றோம்.

இவ்வண்ண நிலையில்தான் ஆண்டவனின் ஜெபமும் ஞான நிலையும் இறை பக்தியும் இவ்வுலகமும் இவ்வுலகைச் சார்ந்த அனைத்து உலகங்களுமே அடக்கம் பெற்று வாழ்ந்திடும்… “இவ்வாத்மாண்டவனின் (தனக்குள் இருக்கும் ஆண்டவன்) எண்ணத்தை உணர்ந்திடாமல்” வாழ்ந்திடும் மக்களின் எண்ணத்தையும்… நம் முன்னோர் சூட்சுமத்தில் வெளிப்படுத்திய நூல்களில் உள்ள உண்மை நிலையை உணர்ந்திடாமல்… மக்களின் எண்ணத்தையே கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்கள் என்று சில நிலைகளினால்.

1.பக்தி… ஞானம்… பரம்பொருள்… பரமாத்மா… என்றே பல நிலைகளைப் போதனைப்படுத்தி
2.இறை பக்தியாக ஆத்ம ஜெபம் எடுக்கும் நிலையை இன்று உணர்த்துவாருமில்லை… செயல் கொள்வாரும் இல்லை.
3.இறைவனை எண்ணுவதே இப்பொருளாதார ஆசையின் அடிப்படையில் தான் (இன்றைய நிலை).

இவ்வண்ண நிலை கொண்ட நாம் எடுக்கும் சுவாசத்தினால் மட்டும்தான்… ஒவ்வொரு ஆத்மாவின் வழித்தொடர் நிலையுண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவனின் நிலைக்கொப்பதான் அவன் சேமித்துச் செயல் கொள்ளும் வழித் தொடரின் நிலையில்… எண்ணத்தினால் அவனைச் சார்ந்துள்ளோரின் நிலையின் எண்ணக் கலப்பும் வழித்தொடரின் செயல் நிலைகொள்கின்றது.

நம்மாழ்வார் இயற்றிய பாடல்களில் உள்ள நிலையின் அர்த்தத்தையே கால நிலைக்கு ஏற்ப இன்று உணர்த்துகின்றார்கள்.
1.உண்மைத் தத்துவ நிலை எது…?
2.உணர்ந்து செயல்பட வேண்டும்.