ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 26, 2022

அகஸ்தியன் சென்ற ஞானப் பாதையிலேயே நாமும் செல்ல வேண்டும்

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகளின் ஞான வித்தை உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். அதைக் கூர்ந்து பதிவாக்கினாலே போதுமானது.

ஞானிகளின் அருளாற்றலைப் பெறக்கூடிய தகுதியாக யாம் உபதேசிக்கும் இந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கரு வளர்ச்சியாகி பின் அணுக்களாகப் பெருகும்.

முதலில் கரு என்பது முட்டை. பின் யாம் பதிவு செய்த உணர்வின் தன்மையை நீங்கள் மீண்டும் எண்ண எண்ண அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

1.கோழி தான் இட்ட முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ
2.அதனின் உணர்வின் தன்மை உடலில் வெப்பம் ஆகின்றதோ
3.அதன்பின் அந்த அணுவின் தன்மை வெப்பத்தின் துடிப்பு கொண்டு
4.கருவின் துணை கொண்டு அது குஞ்சுகளாக விளைகின்றது.

குஞ்சுகள் வெளி வந்த பின் தாய்க் கோழி எந்த உணவினை உட்கொண்டதோ அதே உணவைக் குஞ்சுகளும் உட்கொள்ளத் தொடங்குகிறது.

அதே போன்றுதான் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்தங்களில் கருவாக உருவாகின்றது.
1.அதனை மீண்டும் நினைவு கூற கூற முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது
2.சாமி சொன்னார்... என்று அடிக்கடி எண்ணும் பொழுது அதை அடை காத்தது போல் ஆகின்றது.

கோழி எங்கே இரை தேடிச் சென்றாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தன் முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ அதைப் போன்று
1.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்து
2.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும் இவ்வாறு எண்ணிப் பாருங்கள்.

முதலில் நாம் பதிவு செய்து கொண்ட அந்த உணர்வுகளை நினைவுபடுத்த நினைவுபடுத்த அதை அடைகாப்பது போன்று ஆகி ஞானிகளின் அரும் பெரும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.

கோழி இரை தேடும் பொழுது கூவி... தன் குஞ்சுகளைக் கூப்பிட்டு அதற்கு எப்படி இரை கொடுக்கின்றதோ இதைப் போல
1.யாம் பதிவு செய்த ஞான வித்து உங்களுக்குள் அந்த அணுவின் கருவாகி விட்டால்
2.இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் இரத்த நாளங்களில் கிளம்பும்போது
3.உங்கள் உயிர் அந்த உணர்வின் ஒலிகளை வெளிப்படுத்தி
4.காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
5.கண் வழியும்... காது வழியும்... உடல் வழியும்... சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் உங்களுக்குள் கொண்டு வந்து
6.சுவாசத்தின் மூலம் உடலுக்குள் பரவச் செய்து அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

இந்த வழியில் நடந்து அதனின் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்...”