ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2022

காது - அதிர்வு... கண் - ஆண்டெனா... இழுத்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வே நம்மை இயக்குகிறது

 

இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக இருக்கப்படும் போது பிறருடைய செயலையும் உலகம் இயக்கும் இயக்கங்களையும் உற்று நோக்கும் போது நம்மை அறியாமலே தீமைகள் வரத் தொடங்குகிறது.

காரணம்... அரக்கத்தனமாகத் தானும் தற்கொலை செய்து பல ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வு வரப்படும் போது அதே உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உணர்வின் இயக்கமும் மாறிவிடும்.

இன்றைய உலகம் போகும் போக்கிலே...
1,எத்தகைய அசம்பாவிதங்களைக் காதில் கேட்டாலும்
2.அதற்கு அடுத்த கணம் நம் கண்ணிற்கே தான் வருகின்றது - ஆண்டனா.
3.காதிலே “உணர்வின் அதிர்வுகள்... பட்டதும் எலக்ட்ரானிக்...!”
4.கண் அந்த அதிர்வுகளை நுகர்ந்து உயிரிலே பட்டு உணரச் செய்கின்றது
5.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலந்து விடுகின்றது.
6.அங்கே அந்த இயக்க அணுவாக நமக்குள் மாறி நம்மையும் அதனின் நிலைக்கே மாற்றி விடுகின்றது... விஷத்தின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற கொடுமைகளைக் காதில் கேட்டாலும் உடனே ஈஸ்வரா... என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படும்பொழுது
2.அதைச் சுத்திகரிக்க இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களை கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

அப்போது கேட்டறிந்த தீமையான உணர்வை இது தள்ளி விடுகின்றது.

அதற்குப்பின் நாளை நடப்பதெல்லாம்... நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இங்கே படர வேண்டும்
2.உலகம் அறியாத இருளிலிருந்து விடுபட்டு
3.தன்னைத் தான் அறிந்து அருள் உணர்வு பெறும் அந்த அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உலக மக்கள் அனைவரது உணர்வுகளும் நமக்குள் உண்டு. பத்திரிகையோ டிவியோ பார்க்கப்படும் பொழுது அதனின் உணர்வின் இயக்கம் நமக்குள் உண்டு. அதை மாற்றி இதனுடைய நிலைகளைச் சீராக்க வேண்டும்.

ஆக மொத்தம்... பிறருடைய பகைமை உணர்வை நமக்குள் வராதபடி அந்த உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட அணுக்களுக்கு ஆகாரமாகப் போகாதபடி தடுப்பதும்... நமது நல்ல அணுக்களுக்கு அருள் சக்தியைக் கொடுப்பதும் தான் “விரதம்...” என்று சொல்வது.

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து வளர்ப்பது தான் ஏகாதசி விரதம் என்று சொல்வது.
1.இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் செய்து பழகுதல் வேண்டும்.
2.நம் ஆத்மாவைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
3.ஒரு பதினைந்து நிமிடமாவது அதை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்று செய்யும் ஒரு பழக்கம் வந்து விட்டால் வாழ்க்கையில் குறைபாடுகள் வரும் போது அதை ஈர்க்காதபடி சிந்தித்து செயல்படும் வலிமையும் வரும்... ஞானமும் பெருகும்.

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.