ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2022

பிரணவ மந்திரத்தைத் தகப்பனுக்கே ஓதினான் என்பதன் சூட்சமப் பொருள் என்ன...?

 

மனிதனான பின் அடுத்தவர்கள் செயலைப் பார்த்து... இது தீமை இது பகைமை என்ற நிலைகளை அறிகின்றோம். அறிந்தாலும் மீண்டும் தவறைச் செய்து அவன் கோபிக்கின்றான் என்றால் அந்தக் கோப உணர்வு நமக்குள் வரக்கூடாது.

கோப உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அங்கே அவன் உடலில் படர வேண்டும். அந்த அறிவின் தெளிவு அங்கே வர வேண்டும் என்று நாம் எண்ணினால் அவனின் கோப உணர்வுகள் நமக்குள் வராது.

அதைத் தான் விழித்திரு என்று சொல்வது...!

ரோட்டிலே சும்மா போய்க்கொண்டே இருக்கிறோம். ஒரு பக்கத்திலே ஏதாவது ஒரு புகையைப் போட்டுவிடுகிறார்கள். நாம் போகும் பாதையில் அது வருகிறது.
1.சுவாசித்தவுடனே தலை சுற்றுகிற மாதிரி இருக்கின்றது...
2.எதனால் என்று நமக்குத் தெரிவதில்லை.
3.இருந்தாலும் தலை சுற்றுகிறது என்று மீண்டும் அப்படியே நடந்து செல்வோமா...?

இல்லை...!

1.உடனே மூக்கை பொத்திக் கொள்கின்றோம்
2.எப்படியோ ஒரு ஓரத்திலிருந்து அதைச் சமப்படுத்த நிற்கிறோம்.
3.ஒதுங்கிய பின் நம் மனது ஒரு தெளிவாகின்றது.

அதைப் போன்று தான் வாழ்க்கையில் வெறுப்பு என்ற நிலைகள் வந்து நம்மைக் கோப உணர்வு இயக்கிவிட்டால் அடுத்த கணமே...
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியிலே உயிரை எண்ணி அந்த உணர்வைக் கொண்டு கோபத்தைத் தடைப்படுத்துதல் வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.இந்த உணர்வினைக் கலந்து நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்

இதைத்தான் விழித்திரு என்று சொல்வது.

மனிதனின் ஆறாவது அறிவைக் “கார்த்திகேயா... தகப்பன்சாமி...! என்று சொல்வார்கள்.
1.இந்த உடலிலிருந்து உருவானதுதான் இந்த ஒளியின் அறிவு.
2.ஓ...ம் என்ற பிரணவத்தைச் சிவனுக்கு ஓதினான் முருகன்... தகப்பன்சாமி.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் ஒளியின் உணர்வை இங்கே ஜீவனாக்க (உடலுக்குள்) வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

உடலிலிருந்து வந்த நிலையை
1.செவி வழியில் உணர்வுகளை உந்திக் கண்களின் வழி நினைவாற்றலைப் பெருக்கி
2.உணர்வின் தன்மையை இழுத்துக் கண் வழி கொண்டு தனக்குள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவம் என்பது உடல்... ஆனால் தகப்பன்சாமி...! இந்த உடலிலிருந்து விளைந்தாலும் தகப்பனுக்கே சொல்கின்றான்... மந்திரத்தை ஓதினான் பிரணவத்தை... அதாவது ஜீவன் பெறுவதை...!

1.நாம் எண்ணுவது எதுவோ அதுதான் ஜீவன் ஆகின்றது என்பதை
2.இந்த ஆறாவது அறிவு தான் சுட்டிக் காட்டுகின்றது

நான் (ஞானகுரு) இப்போது பேசுவது எல்லாம் என்னுடன் சிவம் ஆகின்றது.. இத்தனை (உபதேசிப்பதை) அறிவையும் எனக்குள் சொல்வது சிவனுக்குத் தான்.

சிவனுக்குள் ஜீவன் என்ற நிலையில் இருக்கும் பொழுது... சிவனுக்குள் ஜீவ அணுவின் தன்மை இது எப்படி வாழ வேண்டும்...? எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இத்தனை தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

மகா சிவன்ராத்திரி...! பல கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதற்குள் இருள் சூழா நிலைகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஒளியின் உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.