ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2022

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

 

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானம் செய்வதற்கு முன் இருந்த அனுபவமும் தியான வழிக்கு வந்த பின் பெற்ற சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

அதனை நீங்கள் கூர்ந்து கவனித்து
1.அந்த உணர்வின் இயக்கம் நாம் இயங்குகின்றோமா...?
2.நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா...?
3.அவ்வாறு இயக்கிய உணர்வுகளுக்குத் தக்க நாம் செல்கின்றோமா...? என்று
4.நன்றாக நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றுகிறது. ஆகவே தீமை என்ற உணர்வின் தன்மையை மாற்றியமைக்கக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்...? என்பதை உணர்ந்து... மாற்றி அமைப்பதற்குண்டான சக்தியை நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமையிலிருந்து தப்புவதற்கு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை குருநாதர் எனக்குள் பெறச் செய்தாரோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீய வினைகள் இருந்தாலும் குறையும்.
2.புதிதாக தீயவினைகள் நமக்குள் வளராதபடி தடுக்க முடியும்.

இந்த இரண்டும் இல்லை என்று சொன்னால் நான் தியானம் செய்தேன்.. அதைச் செய்தேன்... இதைச் செய்தேன்...! என்று சொன்னால் அர்த்தமற்றது.

செடிக்கு அது சரியான பருவத்தில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால்தான் அது முளைத்து வளரும்.
1.செடியை வைத்து விட்டேன்... நீரையும் ஊற்றி விட்டேன்...
2.அது வளர்ந்து விளைந்துவிடும்... என்று சொன்னால் அது எப்படி விளையும்...?

எத்தனையோ கோடி உடல்களில் சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு தான் மனித ரூபத்தைக் கொடுத்தது நம் உயிர்.

பல விஷத் தன்மைகளை அடக்கினான்... உணர்வின் தன்மை மாற்றி அமைத்தான்... அகஸ்தியன் ஒளியின் உடல் பெற்றான்... துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும். அந்தத் தகுதியை நாம் பெற வேண்டும்.

அகஸ்தியன் ஒளியாக ஆனது போல
1.நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
2.முந்திய வினைகள் இருந்தால் அதைத் தணித்து... புதிதாக வினைகள் சேராதபடி தடுத்து
3.நம் உணர்வினை வலுவாக்கி ஒளியாக்க முடியும்.

அத்தகைய வலு பெறச் செய்வதற்குத் தான் இங்கே உபதேசம் கொடுப்பது.

சாமியிடம் உபதேசங்களைக் கேட்டதும்... அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டதும்...
1.உங்களை எது இயக்கியது...?
2.வெறுப்பு வந்து குடும்பத்தில் பகைமை எப்படி வந்தது...?
3.தொழில் எதனால் நஷ்டம் அடைந்தது...? என்பதை நீங்கள் உணர்ந்து
4.தியானத்தின் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற தீமையை நீக்கக்கூடிய அந்த உணர்வுகளை
5.நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அதற்குத் தான் உங்கள் அனுபவங்களைச் சொல்லச் சொல்வது.