ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2022

எந்த நிமிடத்தில் இனி எது வந்தாலும் நம் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்

 

பூமிக்குள் விஷக்கதிரியக்கங்கள் அதிகமாகி விட்டது... அதனால் பூமி கரையக்கூடிய நிலைகளும் அதிகமாகி விட்டது.

துருவத்தின் வழியாக விஷத்தின் தன்மைகள் பரவப் பரவ... பூமிக்குள் குழம்பின் நிலைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த இயக்கத்தினால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்று கூழாக மாற்றும் தன்மை அதிகரிக்கிறது.
1.கடல் இருக்கும் பக்கங்களில் விஷக் கதிரியக்கங்கள் பாய்ந்தால்
2.கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரங்களை அழிக்கும் தன்மை வருகின்றது.

இயற்கையின் சீற்றங்கள் இப்படி எத்தனையோ வருகின்றது.

ஆனால் மனிதராக வாழும் நாம் எந்த உணர்வின் தன்மையைப் பெற்றோமோ... உடலை விட்டுப் போகும் போது எந்த ஆசையை முன்னணியிலே வைத்திருந்தோமோ
2.உயிரிலே கடைசி நிமிடத்தில் அது தூண்டப்படும்போது
2.இதைக் கவர்ந்து அடுத்த உடலாகப் பெறுகின்றது.

ஆகவே நாம் இப்போதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கிப் பெருக்கி
1.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்
2.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்
3.அதன் உணர்வு வலுவானால் நம் உயிர் அங்கே செல்கிறது...
4.எத்தகைய நிலையானாலும் உயிருடன் ஒன்றி நாம் அங்கே செல்கிறோம்.

இன்று நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளைக் கண்டு “எனக்கு இப்படி ஆகிவிட்டதே...!” என்று பொருளின் பற்று வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு கருகிடும் நிலை வருகின்றது. மீண்டும் உடலின் பற்று கொண்டு பிறவிக்கே வருகின்றது.

ஆனால் கருகிய உணர்வானாலும்...
1.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கும் போது கருகும் தன்மை இழக்கப்படுகிறது
2.உணர்வின் தன்மை ஒளியாகி அங்கே செல்கின்றது.

உங்களுக்குள் இதையெல்லாம் பதிவாக்கி விட்டேன் (ஞானகுரு).

1.உங்கள் நினைவு தான் உங்களைக் காக்க வேண்டும்...
2.வேறு எவரும் காக்க மாட்டார்கள்...!

நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துத் தான் உங்கள் உயிர் இந்த வாழ்க்கையை நடத்துகின்றது... உணர்வின் தன்மை உடலாக மாற்றுகின்றது... அதன் வழியே உங்களை ஆளுகின்றது.

இதை எல்லாம் மனித உடலில் இருக்கும் போது தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன் இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால் “பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்...”
1.உடல்கள் மாறும்... உயிர் அழிவதில்லை.
2.அழியாத உயிருடன் உணர்வை அழியாத நிலைகள் கொண்டு செல்வதுதான் நம் குருநாதர் காட்டிய மெய் வழி.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் வளர்த்தால் கல்கி என்ற பிறவியில்லா நிலை அடைகின்றோம். அதை அடைதல் வேண்டும்...!