ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2022

நஞ்சு என்று தெரிந்தாலே… அதனால் வீரியம் பெறுபவன் தான் முதல் மனிதனான அகஸ்தியன்

 

அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இளம் பருவத்தில் விளைந்த பின்
1.ஒவ்வொன்றும் அறிந்திடும் நிலையாகவும்
2.மிகவும் வலுக் கொண்ட உணர்வாகவும் வருகின்றது.

எந்த மிருகத்தின் அருகில் இவன் சென்றாலும் இவனைக் கண்டு அது அஞ்சி ஒடுங்குகின்றது.

தாவர இனங்களில் இருக்கும் சத்துகளை இவன் உணவாக உட்கொண்ட நிலையில் அதனின் உணர்வின் தன்மை வரும் போது
1.அந்தத் தாவர இனங்கள் ஒடுங்குவதையும் காண்கின்றான்
2.அதன் இயக்கத்தையும் அவன் இளமைப் பருவத்திலேயே உணர்கின்றான்.

நாம் பார்க்கிறோம்… ஒரு குளவி கூட்டினைக் கட்டி அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைத்து வைக்கிறது. சிறிது நாள்களில் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.

மாறிய பின் அதுவும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல் ஒரு கூட்டினைக் கட்டிப் புழுவைக் கொண்டு வந்து அடைத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது.

ஆக… எப்படி குளவி சொல்லிக் கொடுக்காத நிலையில் புழு குளவியாக மாறிய பின் செயல்பட்டதோ அதே போல் அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் அந்த இயக்கங்கள் ஆன பின் “அவன் அறியாமலேயே…” சில செயல்களைச் செயல்படுத்துகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் பொழுது
1.விஷத்தை நுகர்ந்தாலே மற்றவர்களுக்கு (நமக்கு) மயக்கம் வருகின்றது
2.ஆனால் விஷச் செடியின் அருகில் சென்றால் அகஸ்தியன் மீண்டும் வீரியம் அடைகின்றான்… வலுவடைகிறான்.

காரணம்…
1.விஷத்தின் தன்மை ஒடுக்கும் வல்லமை கொண்டதனால்
2.அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாகவும் மாறுகின்றான்.

ஐந்தாவது வயது வரப்படும் பொழுது புவியின் ஈர்ப்பின் தன்மைகளை அறிகின்றான். நமது பூமி தனக்குள் ஆகாரம் எப்படி எடுக்கிறது…? என்பதை உற்று நோக்கினான்.

வான இயலை இளம் பருவத்திலேயே கண்டுணர்கின்றான். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பூமி துருவப் பகுதி வழியாக எப்படி விண்ணின் ஆற்றலைக் கவர்கிறது…? என்பதை உணர்கிறான்.

உணர்ந்தாலும் “விஷத்தின் தன்மையே…” விண்ணிலிருந்து வருகின்றது... தாவரங்களும் இந்த விஷத்தின் உணர்வின் செயலாகவே வளர்கின்றது…! என்றும் அறிகிறான்.

இருப்பினும்…
1.தாவர இனங்களுக்குச் செல்லும் சக்திகளை நேரடியாக அகஸ்தியன் உட்கொள்கின்றான்
2.தன் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறனும் பெறுகின்றான்.

துருவத்தை உற்று நோக்கும் பொழுது பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறிகின்றான். அவன் ஆதியிலே கூறியது தான்… இருண்ட நிலையிலிருந்து அகண்ட அண்டங்கள் எப்படி உருவானத் என்ற உண்மைகள் அனைத்துமே…!

விஷத்தின் ஆற்றல் உருவாகும்போது விஷத்தின் அளவுகோலையும் அந்த விஷம் எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும் முதல் மனிதன் உடலில் இவன் உணர்கின்றான்.

இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது...? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? என்று துருவத்தை உற்று நோக்கும் போது இவனுக்குள் கண்டறிகிறான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதை சூரிய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி சென்ற... பின் வந்த மக்கள் இதை அறிவாக அறிகின்றனர். அறிவின் வளர்ச்சியாகத் தெளிந்த நிலை பெறுகின்றனர்.

இருளை வெல்லும் திறன் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே…! அவனுடைய ஆற்றலைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே உணர்த்தி அதனைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).