ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2022

பொங்கும் மங்கலம் பெறுவீர்கள்...!

 

கலி...! நாம் தீமையின் உணர்வை வளர்த்தால் தீமையின் செயலாகவே நம்மை மாற்றும். ஒளியின் உடலாகப் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தால் தீமையை நீக்கி ஒளி என்று உருவாக்கும் பொழுது கல்கி...!
1.உயிர் ஒளியாக இருக்கின்றது...
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் அருள் உணர்வை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உடலில் எப்படி உருமாறுகிறது...? என்பதை அனுபவரீதியாக எனக்குக் கொடுத்தார்.

1.நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் வேறு
2.அதே சமயத்தில் உடலில் உள்ள எதிர் அணுக்கள் மாற்றப்படும் போது அது எப்படி ஆகின்றது
3.அப்படி அது தன்னுடைய வலுவாக இயக்கினாலும் அதைக் குறைக்க...
4.நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் வலுவான உணர்வுகளை நீ அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
5.ஆக... சுவாசிக்கும் பொழுது முதலில் எதிர்க்கின்றது. அதிகமாகி விட்டால் ஒடுங்கி விடுகின்றது என்று தெளிவாக்கினார்.

உதாரணமாக... தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்து விட்டால் அந்த நிறமே முழுமையாக ஆகிறது.
1.அதில் சிறிதளவு நல்ல நீரை விட்டால் அதுவும் அதே நிறமாகத் தான் தெரியும்.
2.ஆனால் நல்ல நீரை ஊற்ற... ஊற்ற... ஊற்ற... அந்த நிறம் மாறத் தொடங்குகிறது.

அதே போல் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
1.அதில் நன்னீரை விட... விட... அழுக்குத் தண்ணீர் பொங்கி வெளியே வருகின்றது
2.நல்ல நீர் சேரச் சேரச் சேர அழுக்கின் தன்மை குறைந்து நன்மையின் உணர்வுகள் வருகின்றது

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பொங்கச் செய்ய வேண்டியது எது...? என்ற நிலையில் அருளைப் பொங்கச் செய்து இருளைத் தணியச் செய்ய வேண்டும்... அது தான் தைப் பொங்கல்...!

ஆகவே... பொருளைக் காணும் உணர்வின் அறிவைக் கூட்டுங்கள். வெகு தொலைவிலிருந்து வரும் இருளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கின்றது.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. வெகு தொலைவிலிருந்து வரும் எத்தகைய உணர்வையும் அது பலவீனப்படுத்தி ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தை எண்ணி... பேரருள் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் அதிகாலையில் கவரப் பழக வேண்டும்.

1.பொங்கும் மங்கலமாக அதை நினைவுபடுத்தி
2.உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.நானும் (ஞானகுரு) பிரார்த்தனை செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று தினமும் அதிகாலையில் நீங்கள் விரும்பினால் “அந்த நறுமணங்கள்...” நிச்சயம் உங்களுக்குள் வரும். பேரானந்த நிலை பெறுவீர்கள்.