ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2022

ஜீவன்களை ஜீவிக்கச் செய்யும் சக்திகள் பூமியில் எப்படி வருகிறது…?

 

பாறைக்குள் இருந்து மலை மீது சில இடங்களில் உச்சியில் நீர் வடிவதைப் பார்க்கலாம். காரணம்...
1.அங்கே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைப் பருகி
2.அதன் அடியில் எந்த மலை இருக்கின்றதோ அதற்குள் ஊடுருவிச் செல்லும் திறன் பெற்றது.

இப்படிப்பட்ட சில பகுதிகள் மலைகளில் உண்டு…!

மேகங்கள் மேலே பறந்து சென்றாலும் உச்சிமலையாக இருப்பது தனது காந்தப் புலனால் மேகங்களைக் கவர்ந்து நீராகச் சுரக்கச் செய்கின்றது. மலை உச்சிகளில் நாம் பார்க்கும் நீர்கள் எல்லாம் இப்படித்தான்.

இவைகள் எல்லாம் அந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும் அதனுள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டுதான் அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.

1.இந்தப் பாறைகளிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும்
2.அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து அதனின் தன்மை ஆவியாகப் படர்ந்து வரப்படும் பொழுது
3.அதிலே உருப் பெற்ற பல செடிகளின் சத்துக்களும் இது எல்லாம் ஒருக்கிணைந்து
4.அதனின் தன்மை ஒரு செடியாக ஒரு வித்தாக… கருவாக உருவானால்
5.அத்தகைய செடியையோ அல்லது மரத்தையோ வேறு எங்காவது நாம் ஊன்றினோம் என்றால்
6.அந்த மரத்திலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
7.விண்ணிலிருந்து நுண் அணுக்களாகத் துருவப் பகுதியில் கலந்து கொண்டிருப்பதையோ
8.அல்லது கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்திருந்தால் அதனின் சக்தியையோ
9.அந்தத் தாவர இனம் தனக்குள் குவித்து… மேகங்களாகக் கூடச் செய்து நீராக வடியச் செய்கிறது
10.அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.

இப்படியும் பல நிலைகள் உண்டு...! இது எல்லாம் இயற்கையில் உள்ள சில நிலைகள்.

பல பல செடிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்பால் புதுப் புது தாவர இனங்களாகப் பூமியிலே விரிவடைந்து வளர்ந்திருந்தாலும் அவை அனைத்தும் வெளிப்படுத்தும் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது.

அவ்வாறு கலந்தவைகளில் உதாரணமாக ஒரு கடலைச் செடியிலே ஒரு உயிரணு விழுந்தால் அந்தச் சத்தினை அது கவர்ந்து உடல் பெற்று சிவமாக மாறுகின்றது.

சிவமாகும் பொழுது அந்தக் கடலைச் செடியின் சத்தை இந்த உயிரணு சுவாசித்து அதிலிருந்து வெளியிடும் நிலைகள் புழுக்களாகத் தோன்றுகிறது. இப்படி எண்ணிலடங்காத செடிகளிலிருந்து வெளி வருகிறது.
1.அவை இடும் மூச்சலைகளிலிருந்து வருவதுதான்
2.மனிதனாக உருப் பெறுவதற்குத் தேவையான ஜீவனுள்ள “பிராணவாயு…” என்று சொல்வார்கள்.
3.தனக்குள் மற்ற நஞ்சின் தன்மையை (கரியமில வாயுவை) மாற்றி இயற்கையின் ஜீவித சக்தியை வளர்க்கும் சக்தி அங்கே பெறுகின்றது.

ஏனென்றால் ஆரம்ப நிலையில் தோன்றிய செடிகள் வேறு. இப்பொழுது உருவாகும் செடிகளின் இனங்கள் வேறு.

அத்தகைய செடியின் சத்தைத் தான் நுகர்ந்து இந்த உணர்வின் துணை கொண்டு அது விளைந்த இது இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் படர்கிறது.

ஆகவே ஜீவணுக்கள் உயிரணுக்களில் இருந்து வரக்கூடிய உணர்வினைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் ஜீவிக்கும் தன்மையாக… பிராணவாயுவாகக் கிடைக்கின்றது.

இது எல்லாம் மெய்ஞானப் பாடம்...!