ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 22, 2022

துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி

 

உதாரணமாக நாகன் (பாம்பு) தன் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சுகின்றது. விஷத்தைப் பாய்ச்சி மயங்கச் செய்த பின் அதை உணவாக எடுத்து உட்கொள்கின்றது.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் உண்டு. எதனின் விஷமோ இதனில் கலந்து அதற்குள் இணைந்த பின்
1.பாம்பின் விஷம் அதை மடியச் செய்கின்றது... அந்த விஷத்தின் வலுவைக் குறைக்கின்றது
2.குறைத்த பின் அதன் உடலின் தன்மை உணவாக உட்கொள்கின்றது.
3.உட்கொண்ட பின் அந்த விஷத்தை ஒடுக்கித் தனக்குள் எடுத்துக் கொள்ளும் போது
4.இப்படிப் பல உணர்வுகள் சேர்ந்து இந்த விஷத்தின் தன்மை அடைந்த பின்
5.அதுவே ஒளியின் தன்மையாக நாகரத்தினமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஆதியிலே அகஸ்தியன் துருவனாகும் போது உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்.

வேதனைப்படுவோரை அடிக்கடி நாம் எண்ணினால் நம் இரத்த நாளங்களில் அந்த வேதனை கலந்து மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் தாக்கிய பின் அது சோர்வடைகிறது.

வேதனை என்பது விஷம். அந்த வீரிய உணர்வு கொண்டு அனைத்தையுமே மாற்றுகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். அந்த அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரப்படும் போது நம் இரத்தத்தில் கலக்கின்றது. இதை அதிகமாக உடலுக்குள் செலுத்திய பின் இரத்தங்கள் மூலம் எல்லா உறுப்புகளுக்குள்ளும் சுழன்று வருகிறது.

நாம் நுகர்ந்த வேதனை என்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் உருவாகிறது. நஞ்சினை வென்றிடும் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகும் பொழுது அந்த நஞ்சினை மாற்றிவிடுகிறது… விஷம் பிரிந்து செல்கின்றது.

இது போன்று இப்படிப் பெருகிய உணர்வுகள் தான்
1.அணுவின் துடிப்பால் ஏற்பட்ட உணர்வுகள் அகஸ்தியனுக்குள் “மின் அணுவின் தன்மையாக” உருவானது.
2.அந்த அகஸ்தியனுக்குள் விஷம் ஒடுங்கி எப்படி மின் (பேரொளி) அணுவாக உருவானதோ
3.அதே போல நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

இதை எல்லாம் சற்றுக் கவனமாகக் கேட்க வேண்டும். இதை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் நினைவுகள் அந்தப் பேரருளைப் பெற்ற அருள் ஞானிகளின் அருகிலேயே அழைத்துச் செல்லும்.

தீமை செய்கிறான் என்று எண்ணினால் நம்முடைய நினைவுகள் தீமை செய்பவனிடமே அழைத்துச் செல்கின்றது… அங்கேயும் இயக்குகின்றது.

அதைப் போல் நண்பன் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணினால் நினைவலைகள் அங்கே சென்று விக்கலாக நல்ல உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஒளியின் உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த ஞானியின் வட்டத்திற்குள் நாம் செல்கிறோம்.

1.மகரிஷிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்கள் வெளிப்பட்டதை குரு எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
2.அந்த உணர்வின் வித்தினை வளர்த்தேன்
3.அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள்ளும் விளைய வைக்கின்றேன்.
4.இதன் தொடர் கொண்டு நீங்கள் எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் ஓட்டலாம்.

அதன் உணர்வின் தன்மையை நீங்களும் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யலாம். உங்களில் தீமை செய்யும் உணர்வுகளுக்கு இந்த அருள் உணர்வினை இணைத்து அதைக் குறைக்கலாம்.

இது சிறுகச் சிறுக வளர்ச்சியாக நஞ்சின் தன்மையும் குறையும். உணர்வின் மணமும் குறையும்.
1.உங்கள் உணர்வின நினைவும் விண்ணிலே செல்லும்
2.பிறவி இல்லை என்ற அழியா ஒளி நிலை பெறலாம்.