ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2022

விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?

 

ஞானிகள் காட்டிய வழியில் நாம் விழித்திருக்க வேண்டும். அப்போது தான் மனிதனான நிலயில் பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளி நிலையை அடைய முடியும். உயிரணு தோன்றி மனிதனாக ஆனபின் தான் பத்தாவது நிலை அடைய முடியும்.

ஆதியில் ஒரு வெப்பத்தின் தன்மை அடைந்து கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகும் போது இது ஒன்பதாவது நிலைதான் வருகிறது.
1.இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கலாம்
2.ஆனாலும் அது அழியக் கூடிய தன்மை பெற்றது.

ஆனால் இதிலே உருவான மனிதன் தான் இன்று மின்னலையும் அடக்குகின்றான்… மின்னலைக் காட்டிலும் மின்னணு தாக்கும் நிலைகளையும் விஞ்ஞான அறிவால் ஊடுருவுகின்றான்.

மண்ணிற்குள் படிந்துள்ள பொருளைக் கண்களால் காண முடியவில்லை என்றாலும்
1.இயந்திரத்தின் துணை கொண்டு உணர்வின் அதிர்வுகளைக் கூட்டி
2.இங்கே தங்கம் உள்ளது… இங்கே வெள்ளி உள்ளது… இங்கே நீர் உள்ளது… இங்கே எண்ணை உள்ளது… என்று
3.மேலே பறக்கும் நிலையிலிருந்தே பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ராக்கெட்டுகளைச் செலுத்தி
4.பூமியின் சுழற்சியில் பூமிக்குள் இருக்கும் நிலைகளை இங்கிருந்து காணுகின்றான் விஞ்ஞானி.

காந்தப் புலனறிவு கொண்ட (POWERFUL TELESCOPE) கண்ணாடிகளைக் கொண்டு… ஒவ்வொரு கோளும் எதை எதை உருவாக்குகின்றது…? அதனின் உணர்வுகள் எவ்வாறு வெளியில் பரவுகிறது…? என்றும் காணுகின்றனர்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மாற்றும் உணர்வின் அறிவு கொண்டு கண்ணாடிகளில் எடுத்த அந்தப் பதிவின் துணை கொண்டு இவன் ஏவும் இராக்கெட் அந்தக் கோளின் திசையை நோக்கிச் சரியான நிலையில் சென்றடைகிறது.

இராக்கெட் அங்கே செல்வதற்குண்டான அளவுகோலை அறிந்து கொள்ள தரையிலிருந்தே காந்தப் புலனறிவு கொண்ட கண்ணாடியை வைத்து வெகு தூரத்தில் இருப்பதையும் தனக்குள் இழுத்து உணர்த்தும் நிலைகளை உருவாக்குகின்றான் மனிதன்.

கம்ப்யூட்டர் மூலமாக அதைப் பதிவாக்கி அதிலிருந்து அழுத்தத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி நுண்ணிய நிலைகளில் ஒளியின் அதிர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் ஆற்றலை அதிகமாகச் சேர்த்து உந்து விசையாகச் செல்லும் இராக்கெட்டின் முகப்பில் அதை வைக்கின்றார்கள்.

பிரபஞ்சத்தில் கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றாலும்
1.அதில் வரும் நுண்ணிய அதிர்வின் வலு கொண்டு தன் இனத்துடன் அது மோதி
2.அந்தக் கோள் எங்கே இருக்கிறதோ அங்கே இந்த இராக்கெட்டை அழைத்துச் செல்கன்றது.

இதைப் போன்றுதான் இந்த மனிதனின் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நாம் எண்ணி எடுக்கும் பொழுது அது நமக்குள் முதலிலே பதிவாகிறது.

பதிந்தது வளர்ச்சி அடைந்து அதை வலுவாக்கிக் கொண்ட பின் மனித உடலை விட்டுச் செல்லும் போது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணி எடுத்தானோ
2.அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் நிலைகள் புவியின் ஈர்ப்பைக் கடந்து அங்கே அழைத்துச் செல்கிறது.
3.அங்கே உடல் பெரும் உணர்வினைக் கரைத்து விடுகின்றது.
4.உயிரான்மா ஒளியாக மாறுகிறது/

இதை ஒரு பழக்கமாக வைத்துக் குடும்பத் தியானங்கள் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை துருவ நட்சத்திரத்தின் சக்தி வெளிப்படும் காலங்களில் உந்திச் செலுத்தினால் (இராக்கெட் போன்று) அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.

உடல் பெறும் உணர்வைக் கரைத்துப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும். இது மனிதன் செயல்படுத்த வேண்டிய நிலைகள்.