ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2022

மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகி... சிந்தனை இழந்து தவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை...

 

விஞ்ஞான அறிவு கொண்டு அணுவைப் பிளந்து அணுகுண்டைத் தயார் செய்து இங்கே பூமி முழுவதும் கலக்கச் செய்து விட்டார்கள். அது படர்ந்த இடங்களில் எல்லாம் துரித நிலைகள் கொண்டு விஷ அணுக்கள் உருவாகின்றது.

அதுவே மனிதனுக்குள் கடும் நோயாக... டி.பி. போன்ற நிலைகளும் இதனின் உணர்வின் அதிர்வுகள் அதிகமான பின் கேன்சர் போன்ற கடும் நோய்களும் உருவாகிக் கொண்டுள்ளது.
1.அணுக் கதிரியக்கப் பொறிகளால் ஏற்பட்ட விளைவுகளால்
2.”இன்ன நோய் தான்...” என்று காண முடியாத நிலைகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது.

இருப்பினும் வான் வீதியில் வீசப்பட்ட கதிரியக்கங்கள் அதனுடைய நிலைகள் சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்திளும் பரவியது. ஒவ்வொரு கோளும் அதை நுகர்ந்து மற்ற கலவையுடன் சேர்த்து சூரியனுக்குள்ளும் புகும் தருணம் வந்துவிட்டது.

சூரியனுக்குள் இயற்கையாக உருவாகும் ஆற்றலும் மனிதனால் பரப்பட்ட விஷக் கதிரியக்கமும் இது இரண்டும் மோதும் நிலைகள் அதிகமாகி விட்டது.

எலக்ட்ரிக்கில் மின்சாரம் செல்லும் இரண்டு வயரை ஒன்றாகச் சேர்த்தால்
1.எப்படிக் கரண்ட் அதிகமாகி அனைத்தும் ஃபீஸ் ஆகுமோ அது போன்று தான்
2.இந்த எலெக்ட்ரானிக்கால் இயக்கப்படும் அனைத்துக் கம்ப்யூட்டர்களும் செயலிழக்கப் போகின்றது.

உலகெங்க்லும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று சீராகப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு எத்தனையோ ஆயுதங்களைத் தயார் செய்துள்ளார்கள்.

அந்த ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய இடத்தில் மின்னலோ மற்றதோ தாக்கி விடாதபடி திசை திருப்பும் நிலைகள் கொண்ட கம்ப்யூட்டர்களை வைத்துள்ளார்கள். பாதுகாப்பாக இருப்பினும் அந்தக் கம்ப்யூட்டர்கள் செயலிழக்கப் போகின்றது.

தன் நாட்டைக் காக்க என்று சொன்னாலும் இராக்கெட்டுகளை ஏவி மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் பொருதி வைத்திருக்கின்றார்கள்.

வேறு நாட்டில் இருந்து ஆயுதங்களை இங்கே எப்போது ஏவினாலும்...
1.அடுத்த கணமே அந்த ஏவலின் ஒலி அதிர்வைக் கண்ட பின்
2.இங்கிருந்து அந்த கம்ப்யூட்டர் உடனே இயக்கி சீறிப்பாயும் அலையாக
3.இதனுடைய ஆணைகள் இடப்பட்டு எதிர்த்துத் தாக்கி வானிலேயே அதைச் சிதறடிக்கும்படியாக
4.இராக்கெட்டுகளை வைத்துள்ளார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

கம்ப்யூட்டர் மூலமாகத் தான் அதை வைத்துள்ளார்கள். அணு விசைகளின் தன்மைகளையும் வைத்துள்ளார்கள்.

அக்காலத்தில் நடந்த போர் முறைகள் வேறாக இருந்தது. ஆனால் இன்று கதிரியக்கப் பொறிகளை அதிக இயக்கமாக வைத்துள்ளார்கள். சமீபத்தில் நடந்த போர்களில் இதைப் பார்த்திருப்போம்.

இராக்கெட்டை வைத்து வான் வீதியிலே மோதும் பல நிலைகளை அது எப்படியெல்லாம் உருவாகிறது...? என்ற நிலையை அறிந்து கொண்டோம்.

இந்த வான் வீதியிலே பரவிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மையாகப் பாய்ச்சப்பட்டு சூரியனுக்குள் வரப்படும் பொழுது அதனுடைய இயக்கம் எதிர்மறையாகி “அதிகமான எலக்ட்ரிக்கை உருவாக்கப் போகின்றது...!”

1.நம் உயிரும் எலக்ட்ரிக்கைத் தான் உருவாக்கிக் கொண்டுள்ளது.
2.சூரியனுக்குள் மாறப் போகும் தன்மை கொண்டு நம் உயிரின் துடிப்பு அதிகமாகி விட்டால்
3.நம் உடலில் உள்ள அணு செல்கள் இயக்கம் அதிகமாகிவிடும்.
4.மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகப் போகின்றான்.
5.சிந்தனை இழந்து தவிக்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை... குறுகிய காலத்திற்குள்ளேயே உண்டு.

இதனுடைய அடர்த்தி அதிகமான நிலைகள் கொண்டு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. துருவப் பகுதி வழியாக கதிரியக்கங்கள் அதிகமாக வரப்படும் பொழுது துருவப் பகுதியில் பனிகள் கரைந்து கடல்களும் பெருகுகின்றது.

கடல் நீருடன் கலந்த அந்தக் கதிரியக்கப் பொறிகள் விஷத்தன்மையான உணர்ச்சிகளை ஊட்டும் நிலைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியையே... மனிதன் அழிக்கும் தருணத்திற்குக் கொண்டு வந்துவிட்டான்.

இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் சேமித்தால் தீமைகள் புகாது நம்மைக் காக்க முடியும். அதனால்தான் விழித்திரு...! என்று சொல்வது.

ஒவ்வொரு நொடியிலேயும் உலகில் நடக்கும் அதிர்ச்சிகளைக் கேட்டுணர்ந்தால்
1.அடுத்த கணமே நாம் விழித்திருந்து “ஈஸ்வரா...” என்று உயிரிடம் வேண்டி
2.அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.
3.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நாம் தப்பித்து விண் செல்ல வேண்டும்.