ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2022

ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்... ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்

 

விண்ணிலே உருவான உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின்... ஆரம்பத்திலே (உதாரணமாக) அந்த உயிர் ஒரு பருத்திச் செடியின் மீது விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த உணர்வை நுகரும் பொழுது அது ஊழ்... ஆகி அது வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது... புழுவாக உருப்பெறுகிறது
2.உயிருடன் அது முதலிலே ஒன்றுகின்றது... அந்த உணர்வின் சத்தை நுகர்கின்றது
3.நகர்ந்து சென்று மீண்டும் அது தன் இரையைத் தேடுகின்றது.

முதலில் பரிணாம வளர்ச்சியில் வரும் பொழுது இந்த நிலை...!

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சி ஆகி இன்று மனிதனாக வளர்ந்தபின் ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்... தன் வாழ்க்கைக்காக பல தவறுகளைச் செய்து நாம் தவறு செய்யாமலேயே நம் மீது அபாண்டமான நிலைகளில் பொய்யைச் சொல்கிறார்... வேதனைப்படும் செயலைச் செயல்படுத்துகின்றார்.

1.நமது கண் அந்த மனிதனைப் படம் எடுக்கின்றது...
2.எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. அதுதான் ஊழ்வினை என்பது.

பின் அவன் எத்தகைய தீமைகளை நமக்குச் செய்தானோ அந்த மனித உடலில் இருந்து வந்த உணர்வின் அலையை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு கவர்ந்து நம் ஆன்மாவாக முதலில் மாற்றுகின்றது.

உயிர் அவ்வாறு தன் ஆன்மாவாக மாறியதை இழுத்து நம் உயிருடன் ஒன்றி நமக்குள் உணரச் செய்கின்றது. உணர்ந்தாலும் அது ஓ... என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

1.முதலில் நாம் எதை எண்ணுகின்றோமோ... அது ஊழ்வினை என்ற வித்தாக ஆன பின்
2.அந்த உணர்வின் சத்து கருவாகி உடலுக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் எத்தகைய வேதனையை உருவாக்கினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுவாக உருவாக்கி விட்டால் அது தான் அதற்கு உணவு.

காரணம்... அணுவாக உருவாகிய பின் அது மீண்டும் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும். இதை உருவாக்கியது யார்...?

உயிர்.

அந்த உயிரின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்தபின்... அது தாயல்லவா...!
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படும்படி சொன்னானோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது
2.அவனின் நினைவாற்றல் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகிறது.
3.நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வலைகளை அனுப்புகின்றான்.
4.அதே உணர்வின் சத்தை நம் உடலில் உருவான அணுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதை நன்றாகக் கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்...!

நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் ஒருவன் நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான் என்றால் ஆழமாக அதை பதிவு செய்து விட்டால் அந்த எண்ணம் அந்த எண்ணம் உங்களைக் கெட்டுப் போகவே வைக்கும்.

அதிலிருந்து தப்புவதற்கு வழி வேண்டும் அல்லவா... அதுதான் விழித்திரு...!

1.“விழித்திரு...” என்றால் ஒருவர் நமக்குத் தீமை செய்கிறார் என்று உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த... அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

தாய் தந்தையரை எண்ணி ஓ...ம் ஈஸ்வரா... என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து... நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்... மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.மெய் ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை எடுத்து...
2.நம்மைக் காத்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.
1.பொருளறிந்து செயல்படும் உணர்வாக
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.

நாம் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகிறோம்.