ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2022

உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்

 

மகா சிவன் ராத்திரி என்ற நிலைகளில் விநாயகர் தத்துவத்தைப் பார்க்கப்படும் போது... விண்ணுலகில் விளைந்த அனைத்தும் மண்ணுலகில் விளைந்துள்ளது. அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு தாவர இனங்களில் மணமும் குணமும் அறிவும் ஞானமுமாக இணைந்துள்ளது.

அதிலிருந்து வந்த அந்த உணர்வுகளைத் தான்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப உடல்களுக்குள் அதை வினையாகச் சேர்த்து
2.மகா என்ற நிலைகள் அடைந்து.. மகா சிவன்… மகா சிவமாக… இந்த மனித உடலை உருவாக்கியுள்ளது… மகா சிவன் இராத்திரி.

அன்றைய தினம் இதை எல்லாம் முழுமையாக அறிந்துணர்ந்த மகரிஷிகளின் உணர்வை உற்று நோக்கி… விண்ணை நோக்கி ஏக வேண்டும். காரணம்… “இருளான இந்தச் சரீரத்தைக் கடந்து… வெளியே சென்று…” உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள் அந்த மகரிஷிகள்.

“முருகு…” மாற்றியமைக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று விழித்திருக்க வேண்டும்...!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.உணர்வுக்குள் இருக்கும் உயிரை உடல் மறைத்தது…
2.அதே சமயத்தில் உணர்வின் நல்ல எண்ணங்களை வேதனை என்ற நஞ்சின் தன்மை மறைக்கின்றது.
3.கோபம் என்ற கார உணர்ச்சிகள் நல்ல உணர்வுகளை அது மறைக்கின்றது

இதைப் போன்று
1.இருளுக்குள் இருளாக மறையச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை
2.இருளுக்குள் ஒளியாக மாற்றிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இணைத்து
3.நல்ல உணர்வின் ஞானத்தை மறைத்திடும் அந்த இருளைப் போக்கி அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி
4.வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்து
5.நம்மையும் மகிழச் செய்து.. நம்மைப் பார்ப்போர் நிலைகளையும் மகிழச் செய்ய வேண்டும்… மகிழ்வாகனா…!

ஆகவே வாழ்க்கையில் இது வரையிலும் வந்த தீமைகளை நீக்கிவிட்டு மெய் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து
1.ஆறாவது அறிவால் “உத்தராயணம்” என்று ஞானிகள் பால் திசை மாற்றி
2.மெய் ஞானியுடன் நம் வாழ்க்கையை இணைத்து
3.எத்தகைய இருள் ஆனாலும் அதைப் பிளந்திடும் நிலை பெற வேண்டும் கார்த்திகேயா…!
4.ஒளி பட்டபின் அங்கிருக்கும் பொருள்களை எல்லாம் காணுவது போல நாம் ஒளியாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் கண்டுணர்ந்த தீமைகள் உங்களை இயக்கினாலும் அந்தத் தீமையை இயக்கும் தன்மையைப் பிளந்து… மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து… மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து… ஒளியின் சரீரமாக ஆன அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியாக நீங்கள் மலர வேண்டும் என்பதற்குத் தான் மகா சிவன் இராத்திரி என்று இதை உபதேசிப்பது (ஞானகுரு).

காரணம் நாம் பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் நமக்குள் மகா சிவனாக நம் உடலின் தன்மை அமைந்துள்ளது.

அந்த இருளுக்குள்… (நம் உடலுக்குள்)
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் செயலாக நமக்குள் உணர்த்திக் கொண்டு
2.உணர்வின் இயக்கமாக அறிந்து கொண்டு அதனின் அறிவாக நமக்குள் தெளிந்திடும் நிலையாக
3.புற நிலையைக் கண்டுணரச் செய்யும் ஆறாவது அறிவாக நமக்கு முன் இருப்பதை
4.தீமைகளை விலக்கி மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றால் “அது தான் கார்த்திகேயா...!”

ஆறாவது அறிவால் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது போல மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து நமக்குள் இருள் சூழ்ந்திருக்கும் உணர்வின் குணங்களைப் பிளந்து மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து மெய்ப்பொருள் கண்டுணர்ந்த உயிருடன் ஒன்றுவோம்.
1.மெய்ப்பொருள் என்பது உயிரே மெய்ப்பொருள்
2.உயிரின் இயக்கமாக உணர்வின் தன்மைதான் அதனுடன் இணைந்த பொருள். (உயிர் என்பது மெய்… நுகரும் போது உணர்வு… பொருள்)

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் உணர்ந்திடும் உணர்வை ஒளியின் சரீரமாக மெய்ப்பொருளாக… மெய்யுடன் மெய்யாக… என்றும் ஒளியின் சிகரமாக அடைந்திட முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் இதை உபதேசிக்கின்றேன்.

உத்தராயணம்...! நாம் திசை மாற்றி மெய் ஞானியின் உணர்வை நாம் பெற்றிடுவோம்.
1.உடல் பெறும் உணர்வை மாற்றிவிட்டு
2.மீண்டும் மீண்டும் உடல் பெறும் அந்தத் திசையை மாற்றிவிட்டு
3.உயிருடன் ஒன்றிய அழியின் ஒளியின் சரீரமாக மாற்றுவோம்.