ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2019

பட்டு வஸ்திரங்களை உடையாக உடுத்தும் பொழுது நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள்..!


குளவி தன் உமிழ் நீரைப் பாய்ச்சி மண்ணை உருட்டி அதை எடுத்து வந்து கூட்டைக் கட்டுகின்றது. பின் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உந்துதலால் புழுவைக் கொட்டுகின்றது.

கொட்டிய பின் மயக்கமாக இருக்கும் அந்தப் புழுவைக் கொண்டு வந்து தான் கட்டிய கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது. இப்படிப் பல புழுக்களைக் கொட்டி அதை எல்லாம் காற்றுப் புகாவண்ணம் கூட்டில் அடைத்து விடுகின்றது.

கொட்டிய விஷத்தின் தன்மை புழுவின் அணுக்களுக்குள் படப்பட்டு குளவியின் நினைவாகவே வரப்படும் போது உயிர் அதை விட்டு வெளி வராது புழுவை உருவாக்கிய அணுக்களே மாறுபட்டு குளவியை உருவாக்கும் அணுக்களாக உருப்பெற்று (குளவியின்) அந்த விஷத்தின் தன்மையால் புழுவே குளவியின் ரூபமாக மாறுகின்றது.

ஆனால் குளவி கொட்டாமலேயே சில புழுக்கள் கூட்டைக் கட்டி அதற்குள் அடைப்பட்டுவிடுகிறது. பட்டுப் புழுக்கள்... பட்டுப் பூச்சிகள் என்று சொல்வோம்.

கூடுகட்டி உள்ளுக்குள் போய்விட்டது என்று சொன்னால் அந்த உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின் தனக்குள் எப்படியோ இதற்குள் அடைபடும் போது புதிதாக எண்ணங்கள் தோன்றுகின்றது.

1.அடைபட்டு விட்டோமே... என்ற நிலையில்
2.தன்னை மறந்து தான் தான் தான் சிக்கி கொண்டோம் என்ற நிலை இல்லாதபடி
3.தான் கட்டிய கூட்டுக்குள்ளேயே அடைபட்டு வெளியே செல்ல வேண்டும்... பறக்க வேண்டும்...! என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றுகின்றது.

அந்த உணர்வுகள் தோன்றி வளரப்படும் பொழுது இதற்கு வலுவான எண்ணங்கள் வருகின்றது. வெளியிலே வர வேண்டும் என்ற உணர்வுகள் ஆன பின்
1.நீளமாக இருக்கக்கூடிய புழு இது குறைந்து
2.இந்த சத்தெல்லாம் சுருங்கி இறக்கைகள் முளைத்து
3.பல் வலு பெற்று கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வருகிறது பட்டுப் பூச்சியாக.

இது எல்லாம் இயற்கையின் சில உண்மை நிலைகள்.

ஆனால் பட்டுப் புழுவிலிருந்து பட்டு நூலை எடுப்பதற்காக வேண்டி மனிதன் என்ன செய்கிறான்..? அதற்குண்டான இரைகளைப் போடுகிறோம். அதனுடைய மலத்தைக் கூடாகக் கட்டுகின்றது.

இது கூடு கட்டி உள்ளே போய்விட்டது. என்றால் தண்ணீரில் போட்டு அலசி அதனுடைய கடைசி மலத்தை நூலாக எடுத்துக் கொள்கிறான்.

உடனடியாக நூலை எடுப்பதற்காகச் சுடு தண்ணீரில் அந்தப் புழுக்களை (கூட்டுடன்) போடுவார்கள். அதைத் தான் காந்திஜி சொன்னார். நீ சுடு தண்ணீரில போட்டு அதைக் கொதிக்க வைக்காதே என்றார்.

சுடு தண்ணீரில் போட்டு எடுத்த நூல் கொண்டு நெய்த பட்டுச் சேலையையோ அல்லது அந்த உடையை யார் உடுத்தினாலும் பார்க்கலாம்.

அந்தப் புழுக்கள் சுடு தண்ணீரில் வேகும் பொழுது பட்ட எரிச்சல் எல்லாம் அந்தப் பட்டு சேலையை கட்டியவர்கள் உடலில் காந்தல் நிச்சயம் வரும்.

ஆனால் அதே புழுக்களை சாதாரண நீரில் போட்டு எடுத்த நூலில் நெய்த பட்டுச் சேலையைப் போட்டுப் பாருங்கள். அதில் ஒரு விதமான குளிர்ச்சி வரும்.

சுடு தண்ணீரில் போட்டு அதை உடனடியாகக் கொன்றால் அந்த எரிச்சலான உணர்வுகள் நூலில் கலக்கின்றது. அதை உடுத்தினால் நமக்கும் இன புரியாதபடி உடலில் ஒரு காந்தல் (எரிச்சல்) வரும்.

இதை எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். இயற்கையின் இயக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறோம்.