ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2019

நெய்யை விட்டுச் சிலைக்கு அபிஷேகம் செய்தால் அது வெண்ணையாக மாறுகிறது...!


பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் மலைப் பகுதிகளில் சில பாறைகளில் அமர்ந்துள்ளான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அதிலே பதிவான நிலைகள் கொண்டு அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்கின்றது.

மேகங்களை இழுத்துக் கவர்ந்து மோதியவுடனே அங்கே நீராக வடியத் தொடங்குகிறது. அகஸ்தியருடைய கையில் அதனால் தான் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

அகஸ்தியன் எங்கெங்கு எல்லாம் போய் உட்கார்ந்தானோ அங்கெல்லாம் இத்தகைய தண்ணீர் இருக்கும்.
1.கீழே நீர் இருக்காது.
2.ஆனால் அந்த மலை உச்சிகளில் மேகங்கள் போவதைக் கவர்ந்து நீராக வடிந்து
3.சில தெப்பங்களும் அங்கே இருக்கும். கர்நாடக மாநிலத்தில் நிறைய இடங்களில் இது இருக்கும்.

பெல்காம் பக்கத்தில் ஒரு மலை இருக்கிறது. அதில் உள்ள ஒரு சிறிய குகையில் சிலை இருக்கிறது. அந்தச் சிலை மீது நெய்யை விட்டால் அது வெண்ணெயாக மாறும். அந்தக் கல்லில் அந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும்.

நெய்யைக் கொண்டு போய் சிலை மீது ஊற்றுவார்கள். பின் தண்ணீரை விட்டு அபிஷேகம் செய்து முடிந்தவுடன் சுரண்டி எடுத்தோம் என்றால் அந்த வெண்ணெயாக மாறும்.
1.நெய்யில் இருந்து வெண்ணெயாக மாறும்.
2.அந்தச் சிலைக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
3.அபிஷேகத்திற்கு நெய்யைக் கொடுப்பார்கள். மாற்றம் அடைந்தவுடன் வெண்ணெயாக எடுத்து வருவார்கள்.
4.அதை எடுத்து வந்து சாப்பிடுவார்கள்.

அந்த மாதிரி சில இடங்கள் அங்கே உண்டு. அதற்கு மேலே உச்சியில் பார்த்தீர்கள் என்றால் நாழிக்கிணறு. அதில் நீங்கள் தண்ணீர் எவ்வளவு மோந்தாலும் வந்து கொண்டே இருக்கும்.

அங்கே மலை மீது ஏறும் இடத்தில் இன்னொரு குகை இருக்கிறது. அதற்குக் கீழே பார்த்தீர்கள் என்றால் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரில் ஏதாவது ஒரு பொருளைப் போட்டோம் என்றால் கீழே ஒரு பாதை இருக்கும். அதிலே மிதந்து வெளியிலே வரும். ஆனால் இந்தத் தண்ணீர் வற்றுவதே இல்லை.

மைசூர் பாகமண்டலம் தலைக் காவிரிக்குப் போனால் அங்கே மலை உச்சியிலிருந்து தண்ணீர் வரும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமாக இப்படி வரும்.

மேக மண்டலங்களை இழுத்து மோதித் தண்ணீராக வருகின்றது. அங்கேயும் அந்தத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.அங்கே அகஸ்தியன் அமர்ந்த இடம்.
2.மேகங்களை இழுத்து தண்ணீராக மாற்றக்கூடிய நிலைகள் அங்கே இருக்கிறது.

அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நீருக்காக வேண்டி அங்கே மேகத்தை இழுப்பதற்காக வேண்டி பல பச்சிலைகளையும் அங்கே தடவி இருக்கின்றார்கள்.

இயற்கை எப்படி மாற்றங்கள் ஆகின்றது...? நீர் சுரபிகள் எப்படி உருவாகின்றது..? என்று இதெல்லாம் அனுபவபூர்வமாகக் கண்டறிந்தது.

மனிதனுக்கும் இத்தகைய நீர் சுரபிகள் உண்டு. ஒரு பச்சிலையைக் கொடுத்தால் நீர் சுரப்பி எல்லாம் அடைத்துக் கொள்ளும். பின் வறட்சி ஆகிவிடும்.

அதே சமயத்தில் சாப்பிடக்கூடியதை இரத்தமாக மாற்றக்கூடிய சில பச்சிலைகளும் உண்டு. இப்படி எத்தனையோ வகைகள் இருக்கிறது. ஒரு தாவர இனத்தின் உணர்வுகள் மற்றொன்றோடு மாற்றப்படும் போது எப்படி மாறுகிறது...? என்று இது அத்தனையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்தார்... உணர்த்திக் காட்டினார்.

இந்த மாதிரி அதிசயங்களை எல்லாம் யாம் (ஞானகுரு) பார்த்தோம். ஏனென்றால் இதெல்லாம் அந்த மலைப்பகுதியில் நடந்து போய்ப் பார்த்து வந்தது.

அவ்வாறு கண்ட பார்த்த உணர்ந்த உண்மைகளை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். இதைப் பதிவாக்கிக் கொண்டால்
1.அன்று வாழ்ந்த மெய் ஞானியான அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நீங்கள் எளிதில் பெறலாம்.
2.அவன் பெற்ற அண்டத்தின் ஆற்றல்களை நீங்களும் பெறலாம்.