ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2019

தியானத்தின் மூலம் "நம் உடலிலிருந்து ஒளிக்கற்றைகள் வெளிப்படும்…!"


1.மின் மினிப் பூச்சி தன் உடலுக்குள் இருக்கும் கந்தகத்தால்
2.தான் சுவாசிக்கும் மூச்சலைகள் பட்டவுடன்
3.உடலிலிருந்தது ஒளிக்கற்றைகளை உமிழ்கின்றது.

அவ்வாறு உமிழ்த்தும் ஒளிக்கற்றைகள் மற்ற செடிகள் தாவர இனங்களின் இலைகளில் படும்பொழுது விஷ அணுக்கள் நகர்ந்து ஓடுகின்றது. 

அதன் மூலம் தனக்குகந்த உணவை அது உட்கொள்கிறது. அதாவது ஒளிக் கற்றைகளை உமிழ்த்தி விஷத்தை நீக்கித் தான் வாழ்கிறது.

இதைப் போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் கவர்ந்து நம் உடலுக்குள் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.ஒளியாக உருப்பெறும் அணுவின் கருவாக உருவாக்க வேண்டும்.
4.அந்த ஒளி நம் உடலிலும் பெருகும்… ஆன்மாவிலும் பெருகும்…!
5.நம் உயிரான்மாவிலும் பேரருள் பேரொளியாகப் பெருகும்…!

அது வளர வளர நம் உடலிலிருந்து நம் மூச்சலைகள் மூலமாக நாம் பார்க்கும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உணர்வை மின் மினிப் பூச்சி ஒளிக்கற்றைகளை உமிழ்த்துவது போல் நாமும் பாய்ச்ச வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இவ்வாறு ஒளியான உணர்வை நம் மூச்சலைகள் மூலம் வெளிப்படுத்தினால்
1.எந்தத் தீமையான உணர்வும் நம் ஈர்ப்பிற்குள் நம் ஆன்மாவிற்குள் நம் உடலுக்குள் நுழைய முடியாது.
2.நமக்கு இது மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும்.

அதே சமயத்தில் மற்றவர்களும் நம் மூச்சலைகள் மூலம் பாயும் மகரிஷிகளின் உணர்வலைகளை நுகர்ந்தால் அவர்கள் இருளும் அகலும். அவர்கள் தீமைகளும் அகலும்.