ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2016

உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வர வேண்டும் என்பதற்குத்தான் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்

இனி சில வருடங்களுக்குள் விஷத் தன்மைகள் பரவப்படும் பொழுது நாம் தேடி வைத்த செல்வம் இருப்பதில்லை. அதே சமயத்தில் விஷம் கொண்ட நிலைகளால் அநேகமாக உலக யுத்தமாக மாறும் நிலைக்கு வந்துவிட்டது.

மனிதனுக்கு மனிதன் கட்டுப்படுத்த முடியாத நிலைகளாக ஆகிவிட்டது. இப்படி உலக நிலைகளில் விஞ்ஞான அறிவு மனிதனை அஞ்ஞான வாழ்க்கை வாழச் செய்யும் தன்மை வந்துவிட்டது.

கோடிக்கணக்கில் செல்வம் இருப்பினும் பல நவீன வசதிகள் கொண்ட நிலைகள் இருப்பினும் இன்று மனிதனுடைய நிலைகளில் இந்த உடலைக் காக்கும் நிலை இல்லாது போய்விட்டது.

இதன் உணர்வுகள் நமக்குள் நாளடைவில் இதைப் போல விஷத் தன்மைகள் பரவப்படும் பொழுது இன்று நாம் எங்கே செல்கிறோம்? எங்கே போகப் போகிறோம்? என்ற கேள்விக்குறியாகத் தான் இன்றைய நமது வாழ்க்கை அமைந்துள்ளது.

நாளை வரும் எதிர்காலத்தில் உங்கள் நினைவுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் வர வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

ஏனென்றால் இந்த உணர்வு ஆனபின் உங்கள் உடலில் விளைந்த உணர்வுகள் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்றுவிட்டால் துருவ நட்சத்திரம் கவர்ந்து கொள்கின்றது.

இந்த உடல் பெறும் உணர்வின் நஞ்சைக் கரைத்துவிடுகின்றது. அங்கே பிறவி இல்லா நிலைகள் அடைந்துவிடுகின்றது.

ஆனால், வேதனை என்ற உணர்வுகளை விஷத் தன்மைகளைக் கவர்ந்துவிட்டால் இந்த பூமிக்குள் தான் மீண்டும் வருகின்றோம். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.