
உங்கள் உடலை உருவாக்கிய “ஒவ்வொரு அணுவிலும்…” அகஸ்தியன் உணர்வுகள் இணையும்
அகஸ்தியன் பிறந்தபின் குழந்தைப் பருவத்தில் மல்லாந்து
படுத்திருக்கும் பொழுது விண்ணைப்
பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.
அவருடைய தாய் தந்தையர் எதையெல்லாம் எண்ணிப் பெற்றார்களோ அவை அனைத்துமே கருவிலேயே வளர்ச்சி பெற்றதும் பல விஷ அணுக்கள் தன்னை அணுகாதபடி
பாதுகாத்துக் கொள்ள விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை உடலில் பூசிக்கொண்டு அந்த மணத்தை
வெளிப்படுத்தும் பொழுது நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும்
மற்ற உயிரினங்களோ கொசுக்களோ விஷ ஜந்துக்களோ இவை அனைத்துமே அவரை அணுகாது இருந்தது.
சூரியனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.சூரியனின் முகப்பில் தன் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்கள் பிரிக்கப்பட்டு
2.அந்த உயர்ந்த சக்திகளைத் தனக்குள்
வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒளிக்கதிர்களாக
வீசிக் கொண்டிருப்பதும்
3.சூரியனின் முகப்பில் பிரிக்கப்பட்ட அந்த விஷத்தன்மை பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும்
4.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் விஷத்தை வென்றிடும் முலாம்களை உடலில் பூசியதனால் அதைக் காணுகின்றார்கள்.
அவர்கள் கண் வழி பெறும்
இந்த உணர்வுகள் உடலில் பதிவானாலும் கருவிலே வளரும் அந்தச்
சிசுவுக்குத் தாய் ரூபத்தில் பதிவாகின்றது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ… பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து
படுத்திருக்கப்படும் பொழுது அந்தச் சூரியனின் இயக்கங்களைக் காணுகின்றது.
நட்சத்திரங்களில் இருந்து வெளிப்பட்டதைக் கோள்கள் கவர்ந்து
அலைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் தனக்குள்
கவர்ந்து முகப்பிலே அதைப் பிரித்து விட்டு தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றி
அமைப்பதை
1.இந்தக் குழந்தையும் பார்க்கின்றது. ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை.
2.தான் கவர்ந்ததைச் சிரித்துக் கொண்டே
பார்க்கின்றான் பல நிலைகளில்.
அதே சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்த பின் தனியாக இருந்தாலும்
கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை. இவன் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் பொழுது அந்த
வண்டுகள் மயங்கி விடுகின்றது. விஷ ஜந்துக்களோ இதற்கு அப்பால் விலகிச் சென்று விடுகின்றது.
சூரியன் எப்படி தன் ஒளிக்கதிர்களால் அதில் விளைந்த உணர்வுகள் கொண்டு மோதும் பொழுது விஷத்தைப் பிரித்து விட்டு வெப்ப
அலைகள் உருவாகின்றது என்ற நிலையை அகஸ்தியனின் தாய் தந்தையர் முதலில்
காணவில்லை. ஆனால் இந்தக்
குழந்தை “ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகின்றது சொல்ல முடியாத நிலையில்…”
மற்ற உயிரினங்களையோ மிருகங்களையோ கூசாது பார்க்கின்றது. ஆனால் அந்த உயிரினங்கள் இவனைக் கண்டால் மயங்கி விடுகின்றது. மயக்கத்திற்கு அஞ்சி
ஓடி விடுகின்றது.
இப்படித்தான் அந்த இளம் பருவத்தில் வரும் பொழுது தாய்
தந்தையர்கள் தன் குழந்தை உடலிலிருந்து வெளிப்படக்கூடிய இந்த
ஆற்றல்களைப் பார்த்த பின் “கடவுளின்
பிள்ளை… கடவுளின் அவதாரம்…” என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். அக்காலத்தில் அதைத்தான்
அவர்களால் எண்ண முடியும்.
ஏனென்றால் இப்பொழுது உங்கள் எல்லோரையும்
அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் அங்கே அழைத்துச் செல்கின்றேன்.
இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும். இந்த நினைவுகள் மீண்டும்
தியானிக்கும் போது அவர் கண்ட உணர்வுகளை… பூமியில் பரவி
உள்ளதை நுகரப்படும் பொழுது அதைக் காண முடியும். அந்த உணர்வின் தன்மையை
வளர்க்க இது உதவும்.
அதற்குத்தான் இதைப் பதிவாக்குவது.
1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப்போல இதை உங்களுக்குள் பதிவாக்கி
2.இதை நீங்கள் நினைவாக்கும் பொழுது அந்த அகஸ்தியன் கண்ட
பேருண்மையை நாமும் கண்டுணர்ந்து
3.இந்த மனித உடலில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வேகாநிலை அடைந்து
4.இன்றும் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து
கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் உணர்வை நாமும் எளிதில் பெற
முடியும்.
அந்த வளர்ச்சியை நாம் இப்பொழுது… “இந்த வாழ்க்கையிலேயே அடைய முடியும்” என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை
உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருவது.
பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளை… 27 நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதை இந்தப் பிஞ்சு உள்ளம் பார்க்கின்றது. ஆனால் சொல்லத்
தெரியவில்லை.
உதாரணமாக… பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது ஜீனியைப் போட்டு அந்த இயந்திரத்தைச் சுழற்றிய பின் வெப்பத்தால் அது பஞ்சு போல் உருவாவது போன்று
1.இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுது அதிலிருந்து வெளிப்படும்
மணங்கள் பிற மண்டலத்தில் இருந்து வரும்
சக்திகளை இணைத்து
2.ஒரு நூலாம்படை போலக் கவர்ந்து உறைந்து
விடுகிறது.
உறைந்த பின் இந்த நட்சத்திரம் சுழலும் பொழுது இதனுடன்
சேர்ந்து சுழலப்படும் பொழுது தூசிகளாக மாறுகிறது.
அதே சமயம் சூரியனுடைய காந்த சக்திகள் கவரப்படும் பொழுதும் இந்த நட்சத்திரங்கள்
சுழலும் பொழுதும் அந்தத் தூசிகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதும் அதிலிருந்து மீண்டும் வலை விரித்து
மற்றதைச் சேர்த்துக் கொண்டும் வருகின்றது.
உதாரணமாக… ஒரு நூலாம்படைப் பூச்சி
தன் உமிழ் நீரால் வலையை விரித்து வைக்கின்றது.
அதற்குள் ஒரு ஈ சிக்கி விட்டால் அதை
உணவாக எடுப்பதற்குத் தன் மூக்கின் நுனி கொண்டு ஈயின் உடலுக்குள் ஊடுருவச்
செய்து அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாக உட்கொள்கின்றது. ஆனால் ஈயின் உடல் அப்படியே இருக்கும் முழுதாக.
அதே சமயம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்றால்… “அந்த உணர்ச்சியால் உருவாகும் அமிலத்தை” இன்னொரு ஈயைக் காற்று புகாது
சுற்றிவிட்டு அதன் உடலுக்குள் அதைச்
செலுத்தி விடுகின்றது.
உடலுக்குள் இது சேர்த்த பின்…
1.அந்த ஈயின் உயிரான்மா வெளியே செல்ல முடியாதபடி
2.அந்த ஈயை உருவாக்கிய அணுக்கள் பூராமே இது கலந்த பின் எண்ணிலடங்காத
நூலாம்படைப் பூச்சிகளாக அது உருமாறுகின்றது.
இன்று விஞ்ஞானிகள் ஆண்களைப் பெண் உறுப்பு கொண்டவர்களாக மாற்றுவதற்காக “ஹார்மோன்களை” ஆண் உடலில் செலுத்துகின்றார்கள். பெண்கள் போலவே அந்த உறுப்புகள் மாறி உருவாகின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு மனிதனுக்குள் சேர்க்கும் இந்த உணர்வு
போலத் தான் ஈயின் உடலில் சேர்க்கப்பட்ட
அமிலத்தால் அதனின் கருத்தன்மை உருமாறி… தன் இனம்
எதுவோ அந்த உணர்வுகள் மாறி… நூலாம் படைப் பூச்சியின் ரூபமாக அது மாறிவிடுகின்றது.
அது போல நட்சத்திரங்கள் தூசிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அதை “உணவாக
உட்கொண்டாலும்…” இதனுடன் சேர்த்துக் கொண்ட இதனின் ஈர்ப்பு
வட்டத்தில் சேர்ந்து சுழலும் அந்தப் பால்வெளி மண்டலத்தில்
சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து… அந்த
அமிலத்தைத் தனக்குள் சேர்த்துச்
சேர்ந்து சுற்றும் நிலை வரப்படும் பொழுது… சூரியனுக்கு
அருகில் கோள்களாகவும் வெகு தூரத்தில் நட்சத்திரங்களாக இருப்பது போலவும்… ஒவ்வொரு நட்சத்திரமும் தான் உமிழ்த்தும் பால்வெளி மண்டலத்தில் இதைப் போன்ற உணர்வுகளைச் சேர்த்து விடுகிறது.
அதனுடைய வளர்ச்சியில் நட்சத்திரங்கள் உருப்பெற்று விட்டால் மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை இது சுவாசித்து நட்சத்திரங்களாக அமைந்து அதன் வளர்ச்சி பெற்று… அதனுடன் இணைந்த நட்சத்திரங்களுக்கு இது உணவாகச்
சேர்ந்து… அந்த உணர்வை இது எடுத்து இப்படி வளர்ச்சிகள்
பெற்றுக் கொண்டே வருகின்றது.
நட்சத்திரங்கள் இப்படி 27 நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற
நிலையில் அது எடுக்கும் துகள்களும்… அல்லது தூசிகள் ஒன்றாக
இணைக்கப்படும் பொழுது… “கரு இரண்டற
உருவாகி ஒரு பொருளை உருவாக்கும் தன்மை அடைகின்றது…”
இதைப் பிஞ்சு உள்ளமாக இருக்கும் அகஸ்தியன் ஒன்றாவது வயது
கடந்து இரண்டாவது வயதில் காணத்
தொடங்குகின்றான்.
1.அதை உணர்ந்து அவனால் சில சொற்களைச் சொல்லும் நிலை வருகின்றது.
2.இந்த உணர்வின் எதிரொலி எக்கோ வருகின்றது… அதை குருநாதர் காட்டுகின்றார்.
தான் காணும் உணர்வுகளையெல்லாம் தன் தாய்
தந்தையருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றான்.
அவன் உடலில் விளைந்த உணர்வின் எண்ணங்களைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்திருக்கின்றது என்பதை
1.குருநாதர் சுட்டிக்காட்டி இந்த உணர்வைப் பதிவு செய்து எடுக்கும்படி சொல்கின்றார்.
2.அப்பொழுது அந்தக் குழந்தைப் பருவத்தில் அவன் சொல்லும் மழலைச் சொல்லுக்குள்
3.அந்த உண்மையின் தன்மை எப்படி உருவாகிறது
என்பதை எனக்குள் கவர்கின்றேன்.
மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்தில் எப்படிக் கண்டுணர்ந்தானோ அதை நானும் காண முடிகின்றது.
2.ஏனென்றால் நானும் அந்த இளம் பிஞ்சு வயது தான் “புதிதாகத் தெரிய வரும் பொழுது…”
இப்பொழுது காட்சி தெரிந்தால் “என்ன…? ஏது…?” என்று திண்டாடுகிறோம் அல்லவா. அது வழியில் தெரிந்தாலும் கூட… “என்னமோ ஏதோ…” என்று சொல்வது போல அன்றைக்கு அகஸ்தியன்
தனக்குக் கிடைத்ததைத் தன் தாய்
தந்தைக்குச் சொல்கின்றான்.
1.அவனிடமிருந்து சொல்கள் வெளி வருகிறது… அதே உணர்வுகளை உனக்குள் பதிவு செய்கிறேன்.
2.நினைவு கொண்டு அவன் எதைப் பார்த்தான்…? எதைச் சொன்னான்…? என்ற நிலையை நீயும்
பார்…! என்றார் குருநாதர்.
4.உங்களுக்குள் இப்பொழுது அதைத் தான்
பதிவு செய்கின்றேன். அதை நினைவு கொள்ளுங்கள்.
அதை இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.
அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் அது கவர்ந்த உணர்வுகளௌயும்… அதே போல் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும்… அது எவ்வாறு
இயங்குகின்றது…? என்ற இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை தியானத்தின்
மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ
மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட “ஞான
ஒளி” நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம்
இருங்கள்.
இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும்
போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும்… பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது
நினைவாக்குவதற்கும்… கவர்வதற்கும்…
எளிதாக இருக்கும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எப்படி இந்த நிலையைப்
பார்க்கச் சொன்னாரோ அதே போல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி… அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…?
என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக
ஏற்படுத்துகின்றோம்.
கண்களை மூடி… “அகஸ்தியன் பிஞ்சு
உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில்
விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை
இப்போது நீங்களும் நுகருங்கள்.
27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது
பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.
இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம்
சூரியனைச் சுழன்று…
பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை… ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள்
தெரியும்.
அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக
அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.
அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு
நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.
நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின்
காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல
வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.
அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள்
பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது
பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து
மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.
கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த
விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப்
பார்க்கலாம்.
இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து
வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப்
பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.
சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு
இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை
பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள்
மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை
பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.
அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப்
பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான
உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக
இருக்கும்.
வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத்
தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக்
கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித்
தன்மையாகத் தெரியும்.
வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை
போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.
வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய
சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த
வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள்
சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள்
போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.
புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற
நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு
பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.
செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே
வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்கள்
வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.
இவ்வகையில் கலவைகளாகிப் பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின்
நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.
நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த
உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும்
சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.
இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து
உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.
சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு
வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து
எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.
சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து
வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக
மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).
இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி
பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக்
கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.
நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான
மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு
இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள்
காணலாம்.
27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற
நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும்
அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப் போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக்
காணுங்கள்.
உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால்
செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.
வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக
ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.