புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்
2.நட்சத்திரங்களிலிருந்து துகள்களாக மாறுவதும் பிரபஞ்சத்தில் பரவுவதும் கோள்கள் கவர்வதும் அதிலிருந்து வருவதைச் சூரியன் ஈர்ப்பதும்
3.வான்வீதியின் உணர்வுகளை வான மண்டலத்தின் அதிசயங்களை உங்களுக்குள் நுகரும் ஆற்றலாக அறிந்து
4.இதைப் புலனறிவுகளில் காட்சிகளாகக் காண முடியும்.
நட்சத்திரத்திங்களுக்கு அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை எவ்வாறு கவர்கின்றது…? என்பதையும் விஷமான அணுக்கள் மோதும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் ஊடுருவி… மின்னல்கள் தாக்குவது போன்று ஒளிக் கதிர்களாக ஊடுருவிப் பாய்வதைக் காணலாம்.
கேதுவின் அருகிலே இருக்கும் ராகுக் கோள் இந்த விஷத்தின் தன்மை வான் வீதியின் ஒளித் தன்மையைத் தனக்குள் கவர்ந்தாலும் அந்த விஷத் தன்மை தாக்கப்படும் போது “கரும் நீலமாக…” இது உருமாறுவதைக் காணலாம்.
இதனின் தாக்குதலில் மற்ற நட்சத்திரங்களில் வரும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று பல பொறிகளாக மாறி மோதலில் ஆவியாக மாறுவதும் எடையற்ற நிலையில் மாறுவதை உறை பனியாக… சனிக்கோள் தனக்குள் எடுத்து உறை வட்டங்களாக மாற்றிக் கொள்கின்றது.
மின் அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து அதைச் சனிக்கோள் தனக்குள் எடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடியதையும் மற்ற விஷத்தின் தன்மை தனக்குள் கவர்வதும் அதை வியாழன் கோள் கவர்ந்து அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்வதும் “மின்னலின் கதிர்களைக் கதிரியக்கப் பொறியாக…” வியாழன் மாற்றுவதையும் காணலாம்.
மின் அணுவின் தன்மை தனித்தன்மையாக ஆன பின் அந்த ஒளி அலைகளை வெள்ளிக் கோள் தனக்குள் கவர்ந்து “மிகச் சக்தி வாய்ந்த ஒளியின் சுடர்களாக…” வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம்.
சூரியன் அருகில் இருக்கும் புதன் கோள் சூரியனின் எதிர்நிலை கொண்ட தாக்குதலால் அதைக் கவரும் புதன் கோள் ஒரு பகுதி வெப்பமும்… தான் பிரபஞ்சத்தில் ஈர்க்கும் மற்ற நிலையில்… “உலோகத் தன்மையாக மாற்றிக் கொண்டிருப்பதையும்…” காணலாம்.
உலோகத் தன்மை வாய்ந்த்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் வரப்படும் பொழுது அதனின் காந்தப்புலனறிவு இதனுடன் மோதுண்டு பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும் அதைச் செவ்வாய்க் கோள் கவர்ந்து “ஓசைகள்…” வருவதைக் காணலாம்.
இவை பிரபஞ்சத்தில் கலந்து பரவிக் கொண்டிருப்பதை நமது பூமி தனது ஈர்ப்பில் வரப்படும் பொழுது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் திங்கள் தனக்குள் கவர்ந்து கொண்டிருப்பதையும் அதிலே மிதப்பதையும் அது கவரப்படும் பொழுது திங்கள் கோளில் தூசிகளாகப் படர்வதைக் காணலாம்.
மற்றவை அனைத்தும் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்து உள்ளே ஈர்க்கும் பொழுது… கோழி முட்டை வடிவில் உருண்ட நிலையாகவும் நீண்ட நிலைகளாக “நம் பூமி சுழல்வதைக் காணலாம்…”
2.நாம் இருக்கும் எல்லையிலிருந்தே அதைக் காண முடியும்.
2.துருவ நட்சத்திரம் கவர்ந்து “ஒளி அலைகளாக மாற்றுவதைக் காணலாம்…”
2.அங்கே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.
2.அந்த உணர்ச்சிகள்… உதாரணமாக குருவிக் குஞ்சுகள் அது எப்படி உணவுக்காக ஏங்குகின்றதோ…?
3.அதனுடைய துடிப்பின் உணர்வுகள் எப்படி வருகின்றதோ அதைப் போன்று
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டி
4.அது பெறும் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உணரலாம்.
2.உடல் நோய்… அந்த விஷத்தன்மை ஆவியாக மாறுவதையும்… உடல் இலகுவாகுவதையும் உணரலாம்.
2.துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து அதை எவ்வாறு ஒளியாக மாற்றுகிறது…? என்ற நிலையினை உங்களால் உணர முடியும்
3.அதிலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதையும் காணலாம்.
1.உங்கள் புருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி அதன் வழி தான் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புதல் வேண்டும்.
2.அதன் வழி தான் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற வேண்டும்.
2.உங்கள் உடலுக்குள் அதைப் பெறும் சந்தர்ப்பமும் இப்பொழுது கிடைக்கின்றது.