
சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை வைத்தார்கள் ஸ்தபதியர்
ஓர் உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த
மனித உடலில் வாழ்ந்தால்
1.அந்தக் கோளுக்கு மாற்றாக
நல்ல உணர்வின் தன்மை இணைந்து வாழும் உணர்வின் கணக்கிற்கொப்ப நட்சத்திரங்களின் திசை நோக்கி
2.எந்த கோள்களுக்கும் சிக்காது அதன் உணர்வின் நேர் பார்வையிலே
3.சூரியனின் ஒளிக்கதிர்கள்
துருவ நட்சத்திரத்தை இணைத்துவரும் பகுதியில் ஆலயத்தினை இணைத்து
வைப்பார்கள்.
அப்படி இணைக்கும் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் இணைப்பும்
மற்ற கோள்களின் இணைப்பும் இந்த துருவப்பகுதியில்
கவரும் உணர்வை அதற்கு நேராக ஆலயம் அமைத்து “தெய்வீகப் பண்பை நாம் பெற வேண்டும்” என்று வைப்பார்கள்.
ஏனென்றால் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்
1.மற்ற வெள்ளிக் கோளின்
உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும் பொழுது
2.அதன் ஒளிக் கற்றைகள் அது
விரிவடைந்து அந்த ஆலயத்தின் அமைப்புக்கு
3.சூரியனுடைய நேர் பார்வையில் வரும் போது அதனை மாற்றி அமைத்து அது எதனைக் கவர்கிறது…? என்பதனை அளவுகோலிட்டு
4.முந்தைய காலத்தில்
கணக்கிடும் தன்மைகள் வந்தது.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர்
என்ற சாதனங்களை வைத்து மனிதன்
சிந்தித்து நுகரும் தன்மை இல்லாது கால்குலேட்டர் வைத்து பதிவு செய்து அதன் மேல்
ஞாபகப்படுத்தும் நிலையும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பதிவின் தன்மை கொண்டு ஒன்று
ஒன்றுடன் மோதும் பொழுது ஒன்றின் உணர்வுகள்
எப்படிக் கணக்கிடுகிறது…? என்ற நிலையில் கணக்கிடுகின்றார்கள்.
இப்படிச் சென்றவன் இதிலே தான் நாட்டம் செல்கின்றதே தவிர மெய்ஞானிகள்
உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும்
முறைப்படுத்தி உலக பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால்
மறைந்து விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கி விட்டது. அதன்வழி கம்ப்யூட்டரை இயக்கும் நிலை வந்து விட்டது.
நம் உயிர் எலக்ட்ரிக் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு
மீண்டும் எண்ணுவுமே என்றால் நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும் பொழுது அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டுகின்றது.
அதே சமயத்தில் கம்ப்யூட்டர் இதைப் போன்ற நிலையில் இயக்கினால் அதனை
உடனே மாற்றி அமைக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள்.
கணக்கை மாற்றி விடுகின்றனர்.
இதைப்போல
1.நமது உயிரின் தன்மை எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்
என்று வரப்படும் பொழுது
2.இதனை துருவ நட்சத்திரத்தின்
உணர்வு கொண்டு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
இதைப் போல் மனிதனின் நிலையில் ஓர் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றமாகும் பொழுது
அதற்குத் தக்க நல்ல குணங்களின் உணர்வுகளைப்
1.பிறிதொரு எதிர் நிலையில் இருந்து
உருவாக்கப்பட்ட நிலையில் இருந்து
2.தெய்வம் என்று காரணப் பெயராக வைத்து அந்தத் திசை நோக்கி நாம் எண்ணும் பொழுது
அதன் உணர்வுகள்
3.வெள்ளிக் கோளின்
உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் மற்ற
கோள்கள் நிலைகளை இணைந்து
3.இந்த உணர்வு மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும் அத்தகைய நல்ல உணர்வை உருவாக்கும்
4.இத்தகைய உணர்வுகள் பரவும்
பொழுது அந்தத் திசை நோக்கி வைப்பார்கள்.
அதை நோக்கி நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள்
சூரியனால் கவரப்பட்டு அது கவர்ந்து வரும் திசையில் நோக்கும் பொழுது “அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகள் நமக்குள்
கிடைக்கும் படி வைத்தார்கள்…”
இது எல்லாம் வானவியல் சாஸ்திரத்தைக் கடந்த காலம் இயற்கையின் உண்மை உணர்வு கொண்டு உணர்வினைத் தனக்குள் மனிதனால் பதிவு செய்து கொண்ட உணர்வின் தன்மை கொண்டு… கணக்குகளை மனக்கணக்காக வைத்து அந்த மனக்கணக்கின்
உணர்வு கொண்டுதான் தெளிவாக்கி தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி
1.அதன்படி வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களை அமைப்பதும் அதன் வழி செயலாக்கமும்
2.அன்று ஸ்தபதியர் என்று அவர்களைச் சொல்வார்கள்.
3.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்தியவர்கள் உலக நிலையில் பெரும் கொண்ட மெய்ஞானிகளாக இருந்தனர்.
மெய்யைப் பெறுவதற்கு செயல்பட்ட இந்த நிலைகள் எல்லாம் இக்காலங்களில் பிறிதொரு தீமையின் நிலைகளால் மறைந்து விட்டது.